புதன், 13 ஏப்ரல், 2022

 

Paschal Sunday C, 2022: உயிர்ப்புப் பெருவிழா (இ)



உயிர்ப்புப் பெருவிழா ()
17.4.2022


முதல் வாசகம்திருத்தூதர் பணிகள் 10,34.37-43
பதிலுரைப் பாடல்: 118
இரண்டாம் வாசகம்கொலோசேயர் 3,1-4
நற்செய்தியோவான் 20,1-9

உயிர்ப்பு:
மரணத்திலிருந்து ஒருவர் மீண்டெழுந்து வருவது உயிர்பு என்று அழைக்கப்படுகிறதுஎபிரேயமுதல் ஏற்பாட்டில் உடலின் உயிர்ப்பை பற்றிய சிந்தனைகள் இல்லைபுதிய ஏற்பாட்டில் இந்தசிந்தனையை குறிக்க (ἀνάστασις அனஸ்டாசிஸ் - உயிர்ப்புசாவிலிருந்து எழும்புதல்,) என்றகிரேக்க சொல் பாவிக்கப்படுகிறதுமுதல் ஏற்பாட்டில்கடவுள் எவ்வாறு மனிதனை மண்ணில்
இருந்து உருவாக்கினாரோஅவ்வாறே மனிதன் மண்ணுக்கு திரும்புகிறார் என்று நம்பினர்சீயோல் שְׁאוֹל (ஷெ'ஓல்) எனப்படும் பாதாளம் இந்த இறந்தவர்களின் இருப்பிடமாக நம்பப்பட்டது.  இப்படியாக சீயோல் ஆதாள-பாதாளமாகவும்இருண்ட இடமாகவும் அறியப்பட்டதுஅத்தோடுகைவிடப்பட்ட இடமான இங்கிருந்துஎவருக்கும் விடிவு இல்லை எனவும் எண்ணப்பட்டதுஇதற்கு வேறு பல பெயர்களும் விவிலியத்தில் உள்ளன (தி.பா 6,5)ஆனால் பல விவிலியபகுதிகள் கடவுளுக்கு சீயோலின் மீதும் அதிகாரம் உள்ளது என்பதை எண்பிக்கிறது (யோபு12,22: தி.பா 139,8: ஆமோஸ் 9,2). 
 தனி மனிதனின் உயிர்பை பற்றி முதல் ஏற்பாடு பேசாவிட்டாலும்சில பகுதிகள் தேசியஉயிர்ப்பைப்பற்றி பேசுகின்றன (காண் எசாயா 26,19: எசேக் 37,13-14: ஓசேயா 6,1-2)முதல்ஏற்பாட்டு நூல்களில்மத்திய கிழக்கு பகுதிகளின்  சில சிந்தனைகள் தாக்கத்தைசெலுத்தியிருப்பதனைக் இங்கனம் தெளிவாகவே காணலாம்.

இணைத்திருமுறை நூல்களும்கிரேக்க-உரோமையர் கால நூல்களும்உடலின் உயிர்ப்பைப்பற்றி அதிகமாகவே பேசுகின்றனஇவை கிரேக்க சிந்தனைகளின் தாக்கத்தைகொண்டிருப்பதைக் காணலாம்உதாரணமாக பரிசேயர்கள் உடலின் உயிர்ப்பை அப்படியேநம்பினர்இந்த காலகட்டத்திலும் சில குழுக்கள் உடலின் உயிர்ப்பை நம்பாமல் தமது பழையசிந்தனைகளையே கொண்டிருந்தனர்சில கும்ரான் ஆய்வுகள்கும்ரான் பகுதியில்இருந்தவர்கள் உடலின் உயிர்ப்பை நம்பினர் என சொல்லத் தூண்டுகின்றன (காண்க 4Q521 1:12)சீராக்கின் ஞானம்சாலமோனின் ஞானம் போன்ற நூல்களில் இவ்வறிவின் வளர்ச்சியைக்காணலாம்இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தில்போரில் நாட்டுக்காக மடிந்தவர்களும்கிரேக்ககலாபனைகளின் போது மடிந்தவர்களும்  உயிர்பெறுவர் என சொல்லப்படுவதை வாசிக்கலாம்(காண் 2மக் 7,9: 12,43-45)இன்னும் அதிகமாகவிவிலியத்துள் ஏற்றுக்கொள்ளப்படாதஇரண்டாம் எஸ்திரா என்ற புத்தகம் இந்த சிந்தனையை மேலும் ஆழமாகச் சொல்கிறது

உயிர்ப்புதான் புதிய ஏற்பாட்டின் மையச் செய்திகிறிஸ்துவின் உயிர்ப்பே வரலாற்றின்மையமாகவும் முதல் ஏற்பாட்டின் நிறைவாகவும் கிறிஸ்தவர்களால் பார்க்ப்படுகிறதுஅனைத்துபுதிய ஏற்பாட்டு புத்தகங்களும் திருமடல்களும் இதனையே அடிப்படையாக கொண்டுள்ளனஇதனை பாஸ்கா மறைபொருள் என்கின்றோம்இயேசுவினுடைய போதனைகளிலும் இந்தசெய்தி முக்கியமான செய்தியாக இறுதிவரைக்கும் பயணிக்கிறது(காண்க யோவான் 11,25) இயேசுதான் இவ்வுலகில் மனிதனாக இருந்த காலத்தில் பலரை உயிர்பித்தாலும்அவரின்உயிர்ப்புச் செய்திஇப்படியான பொது மரணத்தை தாண்டியதாகவே இருந்ததுஇயேசுஉயிர்ப்பித்த பலர்அவருக்கு முன்னரோ அல்லது பின்னரோ இறந்து போயினர்உயிர்ப்பைப்பற்றி சொல்லுகிற அதே வேளைஇயேசு நித்திய தண்டனையையும் பற்றி அறிவுறுத்துகிறார்(காண்க யோவான் 5,25)வெறுமையான கல்லறையே புதிய ஏற்பாட்டில் உயிர்பிற்கான முதல்அடையாளம்நான்கு நற்செய்தியாளர்களும் இதனை தங்களுக்கே உரித்தான வகையில்விவரிக்கின்றனர்திருத்தூதர் பவுல் புதிய ஏற்பாட்டில் உயிர்ப்பினைப் பற்றி ஆழமானபோதனைகளை முன்வைக்கிறார் (காண்க 1கொரி 15). ஆக உயிர்ப்பு இயேசுவிலேயேதங்கியுள்ளதுமுதல் ஏற்பாட்;டில் கடவுள் தன் மூச்சை ஊதி உயிர்கொடுத்தார்புதிய ஏற்பாட்டில்கடவுள்தன் உயிரைக் கொடுத்து உயிர்;ப்பு கொடுக்கிறார்

திருத்தூதர் பணி 10,34.37-43
34அப்போது பேதுரு பேசத் தொடங்கி, 'கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதைநான் உண்மையாகவே உணர்கிறேன். 37திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். 38கடவுள்நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்கடவுள்அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர்விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். 39யூதரின் நாட்டுப் புறங்களிலும்எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள்மக்கள் அவரைச்சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். 40ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள்உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். 41ஆயினும் அனைத்து மக்களுக்குமல்லசாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமேஅவர் காட்சியளித்தார்இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டுகுடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். 42மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர்இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக்கட்டளையிட்டார். 43அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால்பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்றுபகர்கின்றனர்என்றார்.

 திருத்தூதர் பணிகள் நூல்வைத்தியர் லூக்கா திருச்சபைக்கு விட்டுச்சென்ற இன்னொருபொக்கிசம்இந்த நூலில் பல போதனைகள் அதாவது மறைபரப்பு மறையுரைகள் இருப்பதனைஅவதானிக்கலாம்அதிகமான பவுலின் மறையுரைகளும்ஒரு சில முக்கியமான பேதுருவின்மறையரைகளும் இங்கே அழகாக பதியப்பட்டுள்ளனஇந்த மறைபரப்பு உரைகள் அன்றைய நாள்கிரேக்க-உரோமைய உரைகளை ஒத்திருக்கின்றன என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்இன்றைய முதல் வாசகம் பேதுருகொர்ணேலியு (Κορνήλιος  கொர்னேலியோஸ்) என்றஉரோமைய நூற்றுவத்தலைவரின் வீட்டில் வழங்கிய மறையுரையின் சிறு பகுதியாகும்இந்தகொர்ணேலியுவின் வீடு செசாரியா மரித்திமாவில் அமைந்திருந்தது (இந்த நகரத்தை எரோதுஉரோமைய சீசருடைய பெயரிலே கட்டுவித்தார்). கொர்னேலியுதான் திருச்சபையில்உள்வாங்கப்பட்ட முதலாவது யூதரல்லாத நண்பர்இவர் வீட்டில் நடந்தவை பின்னர்திருச்சபையின் முதலாவது பொதுச்சங்கத்தில் பேச்சுப் பொருளானதுகடவுளை நம்ப அவரவர்நல்ல மனப்பக்குவத்தை கொண்டிருந்தால் போதும்ஒருவரின் இனத்திலோ அல்லது அவர்பிறப்பிலோஇயேசு அல்லது கடவுள் தங்கியிருக்கவில்லை என்பதற்கு இந்த உரோமையர்திருமுகம் நல்லதோர் அடையாளம்

.34: இந்த வசனத்திற்கு முன் பேதுரு பிறவினத்தவர்கள் மட்டில் யூத கிறிஸ்தவர்கள்கொண்டிருந்த மனநிலையை தானும் கொண்டிருந்ததைலூக்கா காட்டுவார் (வவ.1-16). பின்னர்மனம்மாறி கொர்னேலியுவின் வீட்டிற்கு வந்திருந்தார்இங்கே மனமாற்றம் அடைபவர்கொர்னேலியு அல்ல மாறாக பேதுருஅதாவது யூத கிறிஸ்தவர்கள்தான் மனம்மாறுகிறார்கள்என்பதை மறைமுகமாக காட்டுகிறார் லூக்காஇது லூக்காவில் சிறப்பம்சங்களில் ஒன்றுகிரேக்க மூல பாடல் இந்த வரியை இப்படி சொல்கிறது 'அப்பபோது பேதுரு வாயைத் திறந்துசொன்னார்உண்மையாக நான் அறிந்துகொள்கிறேன்அதாவது கடவுளிடம்ஆள்பார்த்துசெயற்படும் தன்மை இல்லை(Ανοίξας δὲ Πέτρος τὸ στόμα εἶπεν· ἐπ᾿ ἀληθείας καταλαμβάνομαι ὅτι οὐκ ἔστιν προσωπολήμπτης ὁ θεός அனொக்ட்சாஸ் தெ பெட்ரொஸ் டொஸ்டொமா எய்பென்எப் அலெதெய்யாஸ் காடாலாம்பானொமாய் ஹொடி ஊக் எஸ்டின்புரொசோபொலேம்ப்டேஸ் ஹொ தியுஸ்) (நேரடி மொழிபெயர்ப்பு). இந்த வரிஒரு சில யூதர்கள்தங்கள் கடவுள் ஆள்பார்த்துத்தான் செயல்படுவார்அதாவது யூதர்கள் ஆண்டவருடையபார்வையில் முக்கியமானவர்கள் என்ற சிந்தனையை கொண்டிருந்தார்கள் என்பதைக்காட்டுகிறதுஇந்த யூத முன்னிலை வாதம் ஆரம்ப கால திருச்சபையில் முக்கியமான ஒருபிரச்சனையாக இருந்தது

வவ. 35-38: இயேசுவின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக பேதுரு மறையுரைக்கிறார்அதேவேளை யார் கடவுளுக்கு ஏற்புடையவர் என்ற சிந்தனையை பேதுரு விளக்கமாகஇன்னொரு பார்வையில் காட்டுகிறார்யூத மக்கள் தாங்கள் விருத்தசேதனம் செய்வதாலும்தோறா என்னும் சட்டங்களை கடைப்பிடிப்பதாலும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் (δικαιοσύνη திகாய்யோசுனே) ஆகின்றனர் என நம்பினர்இதனை அனைவருக்கும் பொருந்தும் விதத்தில்மாற்றுகிறார் பேதுருஅதாவது கொர்னேலியு வீட்டில் கண்ட காட்சி யூதரான இவருக்கு புதியவிளக்கத்தைக் கொடுக்கிறதுஎந்த இனத்தவராக இருந்தாலும்அவர் கடவுளுக்கு அஞ்சிநேர்மையாக செயற்பட்டார் அவர் கடவுளுக்கு ஏற்புடையவராக மாறுகிறார் என்பது அந்த செய்தி(ὁ φοβούμενος αὐτὸν καὶ ἐργαζόμενος δικαιοσύνην δεκτὸς αὐτῷ ἐστιν ஹொபொபொவுமெனொஸ் அவ்டொன் காய் எர்காட்சொமெனொஸ் திகாயோசுனேன் தெக்டொஸ்அவடோ எஸ்டின்)

). இயேசு கிறிஸ்து வழியாக அமைதி உண்டுஅவர் அனைவருக்கும் ஆண்டவர் (εἰρήνην διὰ Ἰησοῦ Χριστοῦ, οὗτός ἐστιν πάντων κύριος எய்ரேனேன் தியா இயேசூ கிறிஸ்டூஅவுடொஸ்எஸ்டின் பான்டோன் கூரியோஸ்).

). இயேசு யோவானின் காலத்திற்கு பின் முக்கியமான பணியாற்றினார்

). அவர் கடவுளால் திருப்பொழிவு பெற்றவர் (ὡς ἔχρισεν αὐτὸν ὁ θεὸς πνεύματι ἁγίῳ ஹோஸ்எக்ரிசென் அவுடொன் ஹொ தியூஸ் புனுமாடி ஹகியோ). 

). கடவுளின் ஆவியையும் வல்லமையையும் கொண்டவர் (ὁ θεὸς ἦν μετ᾿ αὐτοῦ ஹொ தியூஸ்ஹேன் மெத் அவுடூ). 

). அவர் நற்செயல்களையும் குணமாக்கலையும் செய்து வந்தார் (ὃς  διῆλθεν εὐεργετῶν ஹொஸ் தியேல்தென் எவ்வெர்கெடோன்). 

வவ. 39-40: சாட்சியம் பகர்வது திருத்தூதர்களின் முக்கியமான பணி என்று லூக்கா அடிக்கடிதிருத்தூதர் பணி நூலில் வலியுறுத்துவார் (μάρτυς மார்த்துஸ்சாட்சியம்)பேதுரு 
இரண்டுவகையான சாட்சியம் சொல்கிறார்இயேசு செய்த நல்லவைகள்மக்கள் இயேசுவிற்குசெய்த தீமைஅதாவது இந்த இயேசு யூதேயாவிலும் எருசலேமிலும் நல்லதையே செய்ய மக்கள்அவரை மரத்திலே தொங்கவிட்டு கொன்றார்கள் என்கிறார்இங்கே சிலுவை என்று பாவிக்காமல்மரம் என்ற சொல்லை பாவிக்கிறார் (κρεμάσαντες ἐπὶ ξύλου கிரெமாசான்டெஸ் எபி ட்சூலூ)இந்த மரம் என்ற சொல் முதலாம் நூற்றாண்டிலே சிலுவைக்கு ஒத்தகருத்துச் சொல்லாகபயன்பட்டிருக்கிறது அத்தோடு இது இணைச்சட்டம் 21,23ஐயும் நினைவுபடுத்துகின்றதுமூன்றாவதாக கடவுள் இயேசுவை உயிர்ப்பித்ததையும் அவரை தோன்றச்செய்ததையும் அத்தோடுதாங்கள் சாட்சி பகர்வதாக கூறுகிறார்

. 41: ஆண்டவர் உயிர்த்த பின்பு அவரோடு உண்டு குடித்த தாங்களே விசேட சாட்சிகள்என்கிறார் பேதுருஉயிர்த்த ஆண்டவர் அனைவருக்கும் தோன்றவில்லை என்ற ஒரு உண்மையும்இங்கே பதியப்பட்டுள்ளதுஉயிர்த்த ஆண்டவருடன் இவர்கள் உண்டு குடித்தது அனைத்துநற்செய்திகளிலும் பதியப்படவில்லைஇங்கு லூக்கா இவ்வாறு எழுதுவதன் மூலம்ஆண்டவரின்உயிர்பின் பின் நடந்த அனைத்து காட்சிகளும் நற்செய்தியில் இல்லை என்பது புலப்படுகிறது

. 42: இப்போது இந்த உயிர்த்த ஆண்டவரின் கட்டளையை பேதுரு விவரிக்கின்றார்அதாவதுஇயேசுவே இறந்தோருக்கும் வாழ்வோருக்குமான கடவுளின் நடுவர் என்பதே அந்த கட்டளை(οὗτός ἐστιν ὁ ὡρισμένος ὑπὸ τοῦ θεοῦ κριτὴς ζώντων καὶ νεκρῶν ஹவுடொஸ் எஸ்டின் ஹொஹோரிஸ்மெனொஸ் ஹுபொ டூ தியூ கிறிடேஸ் ட்சோன்டோன் காய் நெக்ரோன்)இந்தநடுவத்தன்மை (κριτής கிறிடேஸ்) இயேசுவின் தெய்வீகத்தை வலியுறுத்தும் ஒரு சொல்

. 43: இஸ்ராயேல் மக்கள் ஏற்கனவே பாவமன்னிப்பை பற்றி அறிந்திருந்தனர்ஆனால்இப்போது
இறைவாக்கினர் அனைவரும் அறிவித்திருந்த பாவமன்னிப்பிற்கு புது விளக்கம்கொடுக்கப்படுகிறது
லூக்கா இங்கேஅனைத்து இறைவாக்கினர்களினதும் இறைவாக்கு இயேசுவில் நிறைவாகிறதுஎன்கிறார் (τούτῳ πάντες οἱ προφῆται μαρτυροῦσιν டூடோ பான்டெஸ் ஹொய் புரொபேடாய்மார்டுரூசின்). இப்படியாக அனைத்து இறைவாக்கினரும் சொல்கின்ற செய்தியாவதுகிறிஸ்துவின் பெயரில் நம்புவதனால்பாவமன்னிப்பு ஏற்படுகிறது என்பதாகும்.

திருப்பாடல் 118
நன்றிப் புகழ் மாலை
1ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்ஏனெனில் அவர் நல்லவர்என்றென்றும் உள்ளது அவரதுபேரன்பு.
2‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்புஎன இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
3‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்புஎன ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!
4‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்புஎன ஆண்டவருக்கு அஞ்சுவோர்
அனைவரும் சாற்றுவார்களாக!
5நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்ஆண்டவரும் எனக்குச்செவி கொடுத்து என்னை விடுவித்தார்.
6ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்மனிதர் எனக்கு எதிராக என்னசெய்ய முடியும்?
7எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்என்னை வெறுப்போர்க்குநேர்வதைக்
கண்ணாரக் காண்பேன்.
8மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிடஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!
9உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிடஆண்டவரிடம்
அடைக்கலம் புகுவதே நலம்!
10வேற்றினத்தார் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்ஆண்டவர் பெயரால்
அவர்களை அழித்துவிட்டேன்.
11எப்பக்கமும் அவர்கள் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்ஆண்டவர் பெயரால்
அவர்களை அழித்துவிட்டேன்.
12தேனீக்களைப்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்நெருப்பிலிட்டமுட்களைப்போல்
அவர்கள் சாம்பலாயினர்ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.
13அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்ஆனால்ஆண்டவர் எனக்குத் துணைநின்றார்.
14ஆண்டவரே என் ஆற்றல்என் பாடல்என் மீட்பும் அவரே.
15நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றதுஆண்டவரதுவலக்கை
வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
16ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச்செயலாற்றியுள்ளது.
17நான் இறந்தொழியேன்உயிர் வாழ்வேன்ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்;
18கண்டித்தார்ஆண்டவர் என்னைக் கண்டித்தார்ஆனால் சாவுக்கு என்னைக்கையளிக்கவில்லை.
19நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்து விடுங்கள்அவற்றினுள் நுழைந்து நான்
ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
20ஆண்டவரது வாயில் இதுவேஇது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
21என் மன்றாட்டை நீர் கேட்டதால்எனக்கு நீர் வெற்றி அளித்ததால்உமக்கு நான் நன்றிசெலுத்துகின்றேன்.
22கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளதுநம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
24ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே இன்று அக்களிப்போம்அகமகிழ்வோம்.
25ஆண்டவரேமீட்டருளும்ஆண்டவரேவெற்றிதாரும்!
26ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்குஆசி கூறுகிறோம்.
27ஆண்டவரே இறைவன்அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்கிளைகளைக் கையிலேந்திவிழாவினைத் தொடங்குங்கள்பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.
28என் இறைவன் நீரேஉமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்என் கடவுளே!
உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.
29ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்ஏனெனில்அவர் நல்லவர்என்றென்றும் உள்ளதுஅவரது பேரன்பு.

ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும் என்ற ஆழமான விசுவாசத்தைமையப்பொருளாக வைத்து இந்த 118வது புகழ்சித்திருப்பாடல் வருகின்றது

இந்த திருப்பாடலை இவ்வாறு பிரிக்கலாம்:

). வவ.1-4: ஒரு குழு புகழ்ச்சிக்கான அழைப்பு
 இந்த வரிகள் ஊடாக ஆசிரியர் மக்களை புகழ்சிக்கு அழைக்கிறார்முதலில் மக்களையும்பின்னர் குருக்களையும் அழைப்பதுகடவுளை புகழ்வது அனைவரின் கடமையென அழகாகவும்ஆழமாகவும் காட்டுகிறார்ஆண்டவரின் பேரன்பு என்பது உண்மையில் எபிரேயத்தில்ஆண்டவரின் இரக்கத்தையே குறிக்கிறது (חַסְדּוֹ ,חֶסֶד ஹெசட்இரக்கம்)ஆண்டவருக்குஅஞ்சுவோர் என்று எபிரேய கோட்பாடுகளை பின்பற்றுவோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்

.1: ஆண்டவர் நல்லவர்அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது என்பது ஒரு ஆழமான எபிரேயநம்பிக்கை (לְעוֹלָם חַסְדּֽוֹ׃ லா'ஓலாம் ஹஸ்தோ)ஆண்டவருடைய நன்மைத்தனத்திற்கு முன்னால்மற்றவர்களுடைய நன்மைத்தனங்கள் வெறுமையானவை என்பதை இந்த வரி காட்டுகிறது

.2: இந்த என்றென்றும் உள்ள நன்மைத்தனத்தை இஸ்ராயேல் மக்கள் சாற்றக்கேட்கப்படுகிறார்கள்இதுதான் இஸ்ராயேல் மக்களுடைய படைப்பின் நோக்கம்இதனைஆசிரியர் ஒரு கட்டளை போல கொடுக்கிறார் (יֹאמַר־נָא יִשְׂרָאֵל யோ'மர்-நாயிஸ்ரா'ஏல்செல்வார்களாக இஸ்ராயேலர்). 

.3: இஸ்ராயேலருக்கு பொதுவாக கொடுக்கப்பட்ட கட்டளை இப்போது ஆரோன்குடும்பத்தாருக்கு கொடுக்கப்படுகிறதுஅதாவாது ஆண்டவரின் குருக்களுக்குகொடுக்கப்படுகிறதுகுருக்கள் ஆண்டவரின் புகழைச் சாற்றுவதை தங்களது தலையாயகடைமையாக செய்ய வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்படுகிறது (יֹאמְרוּ־נָא בֵֽית־אַהֲרֹן யோ'ம்ரூ-நாவெத்-'அஹரோன்ஆரோனின் குடும்பத்தார் சாற்றவார்களாக). 

.4: இறுதியான இந்த நம்பிக்கையை அனைத்து ஆண்டவருக்கும் அஞ்சுவோரையும் சாற்றக்கேட்கிறார் ஆசிரியர்இப்படியாக அனைத்து மக்களும் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள் எனலாம்அதேவேளை இங்கே பாவிக்கப்பட்டிருக்கின்ற சொற்பிரயோகங்கள் இஸ்ராயேல் மக்களுக்கானஒத்த கருத்துச் சொற்கள் எனவும் சிலரால் நோக்கப்படுகின்றன (יִרְאֵי יְהוָה யிர்' அதோனாய்ஆண்டவருக்கு அஞ்சுவோர்). 

). வவ.5-13: அரசரின் சாட்சியம்.
 இங்கே இன்னொரு புதிய குரல் ஒலிக்கிறது அது அரசரின் குரல்அரசர் தன்னுடைய 
இராணுவ துன்பங்களின் போதுஎவ்வாறு கடவுள் கைகொடுத்தார் என்பதை சாட்சிசொல்கிறார்
இதனை மக்கள் தங்களுக்கும் படிப்பினையாக எடுக்க வேண்டுமென்பதே அரசரின் விருப்பம்மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பதே மேல் என்று அரசர்தன்னுடைய நேச படைகளைவிட ஆண்டவர் தரும் பாதுகாப்பே உன்னதமானது என்கிறார்.

.5: தான் ஒரு நெருக்கடியான வேளையில் ஆண்டவரை நம்பியதாகவும்ஆண்டவர் அதனைக்கேட்டதாகவும் சொல்கிறார்இந்த வரியுடன் காட்சி மாறுகிறதுஇங்கே பேசுகிறவர் அரசராகமாறுகிறார்ஆசிரியர் அரசர் போல பேசுகிறார்அல்லது அரசரை பேசவைக்கிறார் எனலாம்பின்வரும் வரிகள் அவை அரசர்க்குரியவை என்பதை என்பதைக் காட்டுகின்றன

.6: ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்சவேண்டும் (יְהוָה לִי לֹא אִירָא
அதோநாய் லி லோ' 'இரா') என்ற ஆழமான நம்பிக்கைவரியாக தரப்படுகிறதுஇந்த வரிதாவீதின் காட்சியை நினைவுபடுத்துவது போல உள்ளதுஆண்டவர் தன் பக்கம் உள்ளதால்யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை தனக்கு இல்லை என்பதை ஆசிரியர் காட்டுகிறார்

.7: தன்னுடைய ஆண்டவருக்கு புதுப்பெயர் ஒன்றை வைக்கிறார்ஆண்டவரை தனக்குதுணைசெய்யும் ஆண்டவர் என்கிறார் (יְהוָה לִי בְּעֹזְרָי அதோனாய் லி பெ'ட்ஸ்ராய்கடவுள் எனக்குஎன் உதவியாக). 

.8: மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தல் நலம் என்கிறார்ஆசிரியர்இதுவும் தாவீதின் அனுபவத்தை ஒத்திருக்கிறது எனலாம்நம்பிக்கை வைத்தலைஅடைக்கலம் புகுதல் என்ற வார்த்தையில் காட்டுகிறார் ஆசிரியர் (לַחֲסוֹת லாஹசோத்அடைக்கலம் புக). 

.9: உயர்குடி மக்களிடம் நம்பிக்கை வைத்தல் ஒரு சாதாரண வழக்கமாக இருந்திருக்கிறதுஉயர்குடி மக்களுக்கு எபிரேய மூல விவிலியம் நெதிவிம் (בִּנְדִיבִים׃ பின்திவிம்உயர்குடிமக்களில்எனக்காட்டுகிறதுஇவர்கள் அரச மைந்தர்களாக இருக்கவேண்டிய தேவையில்லை

வவ.10-11: வேற்றினத்தார்களை ஆண்டவர் பெயரால் அழித்ததாக ஆசிரியர் காட்டுகிறார்ஆண்டவர் பெயரால் எப்படி போர் செய்ய முடியும்இங்கே இவர் வேற்றினத்தார் என்றுசொல்பவர்களை சூழலியலில் இவருடைய சொந்த எதிரிகளாகவே பார்க்க வேண்டும்இவர்களைஎபிரேய விவிலியம் גּוֹיִם (கோயிம்வேற்று நாட்டு மக்கள்) என்று காட்டுகிறதுஇவர்கள் பலதிசைகளில் ஆசிரியரை சூழ்ந்துகொண்டார்கள் என்று சொல்லப்படுகிறார்கள்இது போரில்எதிரிகள் அரசரை சூழ்ந்து தாக்குவதற்கு சமன்

.12: இந்த எதிரிகளுடைய படைகள் பெரிதாக இருந்திருக்க வேண்டும் அல்லதுஅவர்களின்தாக்குதல்கள் துல்லியமாக இருந்திருக்க வேண்டும்இதனால்தான் தன் எதிரிகளைதேனீக்களுக்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர் (דְבוֹרִ֗ים தெவோரிம்தேனீக்கள்). 
 எதிரிகள் தேனீக்களை போல சுறுசுறுப்பாக இருந்தாலும்தான் அவர்களை நெருப்பைப் போல்சுட்டெரிப்பேன் என்கிறார்முட்கள்நெருப்பில் விரைவாக சாம்பலாகும்இதனைப்போலவேஆண்டவரின் துணையால் எதிரிகள்முட்களைப்போல அழிக்கப்படுவார்கள் என்கிறார் ஆசிரியர்

.13: ஆண்டவரின் துணையை இன்னொருமுறை காட்டுகிறார்ஏதிரிகளின் தள்ளுதல் பலமாகஇருந்தாலும்ஆண்டவரின் துணை அதனைவிட பலமாக இருக்கிறது என்பதுசொல்லப்படுகிறது.


). .14-19: புதுப்பிக்கப்பட்ட அரச சாட்சியம்.
.14: ஆண்டவரே என் ஆற்றலும் பாடலும் என்று மொழி பெயர்க்ப்பட்டுள்ளதுபாடல்என்பதைபலம் என்றும் மொழிபெயர்கலாம் (זִמְרָה ட்சிம்ராஹ்இசைபாடல்பலம்). ஆண்டவர் தன்னைகண்டித்தார் என்று சொல்லி கடவுளின் கண்டிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்கிறார் அரசர்.

.15: நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கிறது என்கிறார் (קוֹל רִנָּה கோல் ரின்னாஹ்மகிழ்ச்சிக் குரல்), இதனை அவர் ஆண்டவரின் வலக்கரத்தின் பலம் என்றுகாட்டுகிறார் (אָהֳלֵי צַדִּיקִים 'அஹாலே ட்சதிகிம்நீதிமான்களின் கூடாரங்கள்)

.16: விவிலியத்தில் மிக முக்கியமான ஒரு அடையாளம்இது பலம்உரிமைவாரிசு போன்ற பலஅர்த்தங்களைக் கொடுக்கிறதுஅதிகமானவர்கள் வலக்கை பழக்கமுடையவர்களாகஇருந்ததால் வலக்கை பலத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது (יָמִין யாமின்-வலக்கை)இடக்கை பழக்கம் அதிகமான வேளையில் நல்ல அடையாளமாக பார்க்கப்படவில்லைஇருப்பினும் இதற்கும் விதிவிலக்கு இருந்ததுஇஸ்ராயேலின் நீதிமான்களில் ஒருவர் இடக்கைபழக்கமுடையவராக இருந்தார்அதனை கடவுள் நல்ல விதமான பாவித்தார் என்று நீதிமொழிகள்புத்தகம் காட்டுகிறது (காண்க நீதி.3,12-30: אֵהוּד בֶּן־גֵּרָא 'எஹுத் பென்-கெரா'). 

.17: ஆண்டவர் வலப்பக்கத்தில் இருப்பதனால் தனக்கு அழிவில்லை என்கிறார்தான் 
இறக்கமாட்டேன் என்கிறார்அத்தோடு இவர் இறக்காமல் இருப்பதன் நோக்கம்ஆண்டவரின்செயல்களை எடுத்துரைப்பதே என்கிறார் (לֹא אָמוּת லோ' 'ஆமுhத்இறவேன்וַאֲסַפֵּ֗ר வா'அசாபெர்எடுத்துரைப்பேன்). 

.18: ஆண்டவர் இவரை கண்டித்ததையும் மறைக்காமல் தன் பாடலில் காட்டுகிறார்ஆண்டவரின் கண்டிப்பிற்கு காரணம் இருக்கிறது என்பதும்இந்த கண்டிப்பால் தான்அழியவில்லை என்பதையும் நேர்மையாக அறிக்கையிடுகிறார்

.19: தான் பாவியாக இருந்தாலும்ஆண்டவரின் கண்டிப்பை சந்தித்தாலும்தன்னை நீதிமான்என்று காட்டுகிறார்இதனால் நீதிமான்கள் செல்லும் வாயில்களில் தானும் செல்ல முடியும்என்பது இவர் நம்பிக்கைஇந்த வாயில்களில் தான் நுழைவதுஆண்டவருக்கு நன்றிசெலுத்தவாகும் என்பதையும் அறிக்கையிடுகிறார் (שַׁעֲרֵי־צֶדֶק 'அரெ-ட்சாதெக்நீதியின்வாயில்கள்). 


). வவ.20-28: ஓரு நன்றி வழிபாடு.
 இந்த வரிகள் பாடலாக மட்டுமன்றி நன்றி வழிபாடாகவும் உருவகப் படுத்தப்பட்டுள்ளதுஇதுஆண்டவரின் வாயில் இவ்வழியாக நீதிமான்கள் நுழைவர் என்பது இந்த வழிபாட்டைக்குறிக்கிறது. 22வது வசனத்தை புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதிகமாக இயேசுவிற்குபாவிக்கின்றனர்கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்து. 26வதுவசனம்ஆண்டவரின் பெயரால் வருகிறவர் ஆசிர்வாதங்களைக் கொண்டுவருகிறார் என்பதுபின்நாளில் குறிப்பிட்ட நபர்களை குறித்து வாசிக்கப்பட்டதுநமக்கு இது இயேசுவைக்குறிக்கிறது. 27வது வசனம்கிளைகளை கையிலேந்தி ஆண்டவரை புகழக் கேட்கிறதுஇதுஒருவகை ஆர்ப்பரிப்பைக் குறிக்கலாம்இயேசு எருசலேமுள் நுழைந்தபோது இவ்வகையானஒரு செயலை கூட்டம் செய்தமை நினைவுக்கு வரலாம்.

.20: இந்த வாயில் அதிகமாக எருசலேமின் நுழைவாயில்களில் ஒன்றாக இருந்திருக்கவேண்டும்இங்கே நீதிமான்கள் (צַדִּיקִ֗ים ட்சாதிக்கிம்) என்பவர்கள்ஆண்டவரின் மக்கள்அனைவரையும் குறிக்கலாம்ஆண்டவரின் மக்கள் நீதிமான்களாக வாழ அழைக்கப்பட்டவர்கள்என்பது இங்கணம் சொல்லப்படுகிறது.  

.21: கடவுளிக்கு நன்றி செலுத்தவே இவர் எருசலேமிற்குள் நுழைகிறார் போலஆண்டவர்இவருக்கு செவிசாய்த்ததைஅவர் தன் வேண்டுதல் கேட்கப்பட்டதற்கு ஒப்பிடுகிறார்

.22: கட்டுவோர் புறக்கணித்த கல் முலைக்கல் ஆகிற்று என்ற தமிழ் மொழி பெயர்ப்புஎபிரேயவிவிலியத்தில் (אֶבֶן מָאֲסוּ הַבּוֹנִ֑ים הָיְתָ֗ה לְרֹאשׁ פִּנָּה׃ 'எவென் மா'அசூ ஹபோனிம்ஹாய்தாஹ் லெரோ'ஷ்பின்னாஹ்) என்று உள்ளதுஇது ஒரு பழிமொழியாக இருந்திருக்க வேண்டும்இதற்கானசரியான காரணம் சரியாக தெரியவில்லைபல அர்த்தங்கள் இந்த 'மூலைக்கல்லுக்குகொடுக்கப்படுகிறதுசிலர் இதனை 'தலைக்கல்என்கின்றனர்சாதாரணமாக மூலைக்கற்கள்அல்லது தலைக்கற்கள் நிலத்தினுள் மறைந்துவிடும்இருப்பினும் இவை முக்கியமான கற்களாகஇருக்கின்றனஇந்த கற்களின் உறுதியில்தான் கட்டடம் நிலைத்துநிற்கிறதுஇதனைவிட வேறுபல அர்த்தங்களும் இந்த கல்லுக்கு கொடுக்கப்படுகிறதுசிலர் சுவரில் இருக்கும்பெயரைக்கொண்ட கல்லை இந்தக் கல்லாக பார்க்கின்றனர்இன்னும் சிலர்இதனை அழகாகசெதுக்கப்பட்டுஉயரத்தில் இருக்கும்
இணைக்கும் கல்லாகவும் இதனை பார்க்கின்றனர்எது எப்படியாயினும் இதுமுக்கியமான கல்என்பது மட்டும் மிக தெளிவாக தெரிகிறது.   
 புதிய ஏற்பாட்டு ஆசிரியர் இந்த 'மூலைக்கல்அடையாளத்தை இயேசுவிற்கு பாவிக்கின்றனர்(காண்க லூக் 20,17: தி.பணி 4,11: 1பேதுரு 2,7). முதல் ஏற்பாட்டில் பல இடங்களில் இந்தஉதாரணம் காணக்கிடைக்கிறது (எசாயா 8,14: 28,16-7)அனைத்து இடங்களிலும் இதுஆண்டவரின் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது

.23: சாதாரண கல் முலைக்கல் ஆவது நிச்சயமாக மனிதர்களின் கண்களுக்கு வியப்பே
இதனைத்தான் இந்த வரி காட்டி அதனை ஆண்டவரின் அதிசயமாக பார்க்கிறது

.24: இந்த பாடல் ஒரு முக்கியமான விழா அல்லது வரலாற்று நிகழ்வு நாளில் பாடப்பட்டிருக்கவேண்டும்இந்த வரியின் வார்த்தைகள் அதனை குறிப்பது போல உள்ளதுஇந்த குறிப்பிட்டநாளை ஆண்டவரின் வெற்றியின் நாள் என்கிறார் ஆசிரியர் அத்தோடுஅந்த நாளில்ஆர்ப்பரிக்கவும் அகமகிழவும் கேட்கிறார் (נָגִילָה וְנִשְׂמְחָה நாகிலாஹ் வெநிஷ்மெஹாஹ்நாம்மகிழ்வோம்நாம் களிப்படைவோம்). 

.25: இந்த வரி இன்னொரு வேண்டுதல் போல காட்டப்படுகிறதுஇதனை பாடலுக்கானபதிலுரையாகவும் எடுக்கலாம்ஆண்டவரே மீட்டருளும் மற்றும் ஆண்டவரே வெற்றிதாரும் என்றவரிகள் ஒரே அர்த்தத்தையும் கொடுக்கலாம்போரில் பாவிக்கப்படக்கூடிய வார்த்தைகள்போலவும் இவை உள்ளனהוֹשִׁיעָה נָּא ஹோஷி'ஆஹ் நா' - மீட்டருளும்הַצְלִיחָה נָּא ஹட்சிஹாஹ் நா'- வெற்றி தாரும்.

.26: இந்த வரி இன்னொருவர் சொல்வதைப்போல உள்ளதுஅனேகமாக இந்த வரியைகுருக்கள் அல்லது இந்த குறிப்பிட்ட நிகழ்வில் அரசரை போற்றுகிறவர்கள் சொல்லியிருக்கலாம்இந்த பாடல் பலர் படிக்கும் பாடல் என்பதை இந்த வரியும் நன்றாக காட்டுகிறது
 ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர் (בָּרוּךְ הַבָּא בְּשֵׁם יְהוָה பாரூக் ஹபாபெஷெம்அதேனாய்) என்பதுஇந்த பாடலின் கதாநாயகரைக் குறிக்கலாம்பிற்காலத்தில் இந்த பகுதிபுதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு ஆண்டவருக்கு கொடுக்கப்பட்டதுஇந்த வரியின் இறுதிப்பகுதி மக்களுக்கு கொடுக்கப்படும் ஆசீர் போல வார்த்தைப் படுத்தப்பட்டுள்ளது (בֵּרַכְנוּכֶם מִבֵּית יְהוָה׃
பெராக்னூகெம் மிபெத் அதேனாய் - கடவுளின் இல்லத்திலிருந்து உங்களை ஆசீக்கின்றோம்). 

.27: அனைத்து திருப்பாடல்களினதும் முதன்மையான கதாநாயகர் இறைவன் என்பது இங்கேநன்றாக புலப்படுகிறதுஆண்டவரே இறைவன் என்பது இஸ்ராயேலரின் முதன்மையான விசுவாசபிரகடணம் (אֵל ׀ יְהוָה֮ 'ஏல் அதேனாய்ஆண்டவரே இறைவன்)அதோனாய் அல்லது யாவேஎன்பதுஇஸ்ராயேலர் கடவுளை குறிக்க பயன்படுத்திய தனித்துவப் பெயர்ச்சொல்யாவேஎன்பது அதி பரிசுத்தமான சொல்லாக இருப்பதனால்அதனை எழுதியவர்வாசிக்கும் போது'அதோனாய்;' என்றனர்பெயரும் ஆளும் எபிரேயர்களுக்கு ஒரே அர்த்தத்தைக் கொடுத்ததும்இதற்கான காரணமாக இருந்திருக்கலாம்
 ஆண்டவரை ஒளியாக கருதுவதால்அவரை ஒளிர்ந்தார் என்கிறார் ஆசிரியர்கிளைகளைகையிலேந்து விழாவை தொடங்கக் கேட்கிறார் ஆசிரியர்முதல் ஏற்பாட்டுக் காலத்தில்இஸ்ராயேல் நாட்டில் ஒலிவ இலைகள் வெற்றியைக் குறிக்க பயன்பட்டனகிரேக்க நாட்டில்வேறு கிளைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்இலைகளைப் போலவே மாட்டுக்கொம்புகளும்வெற்றிப் பவனிக்கு பாவிக்கப்ட்டனஇந்த கொம்புகளுக்குள் நறுமண தைலங்களும்இடப்பட்டனபிற்கால பந்தங்கள் மற்றும் எக்காள வாத்தியங்கள் போன்றவை இந்தகொம்பிலிருந்து வந்தவையே

.28: மீண்டும் ஒருமுறை நம்பிக்கை சொல்லப்படுகிறதுஇதுதான் திருப்பாடல்களின் நோக்கம்ஆசிரியர் கடவுளை தன் இறைவன் என்கிறார் (אֵלִי אַתָּה 'எலி 'அத்தாஹ் - என் இறைவன் நீரே)
இந்த இறைவனுக்கு அவர் நன்றியும் செலுத்திஅவரை புகழ்ந்துரைக்கவும் செய்கிறார் (אוֹדֶךָּ 'ஓதெஹா நன்றி சொல்வேன்אֲרוֹמְמֶךָּ 'அரோம்மெகாபுகழ்ந்தேற்றுவேன்).  

). .29: குழு புகழ்ச்சிக்கான இறுதி அழைப்பு.
 இங்கே குருவின் குரல் மீண்டும் ஒலிக்கிறதுஅரசரைப் போல மக்கள் கூட்டம் அனைவரையும்நன்றி செலுத்தி ஆண்டவரைப் புகழக் கேட்கிறார்ஆண்டவர் நல்லவர் மற்றும் என்றென்றும்உள்ளது அவரது பேரன்பு என்பதுஅதிகமாக பாவிக்கப்படும் விவிலிய வரி 
(ט֑וֹב כִּ֖י לְעוֹלָ֣ם חַסְדּֽוֹ தோவ் கி லெ'ஓலாம் ஹஸ்தோநல்லவர்அதாவது அவரது பேரன்பு என்றும்உள்ளது).  



கொலோசேயர் 3,1-4
1நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். 2இவ்வுலகு சார்ந்தவை பற்றிஅல்லமேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். 3ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு 
இறந்துவிட்டீர்கள்உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. 4கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர்அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடுமாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

 கொலோசுஉரோமையர் பேரரசின் காலத்தில் ஒரு முக்கியமில்லாத நகராக அறியப்பட்டதுபவுல் எபேசில் நற்செய்தி அறிவித்த காலத்தில் இங்கும் நற்செய்தி பரவியிருக்க வேண்டும்பவுலுடைய உடன்-பணியாளர்களில் ஒருவர் இங்கே நற்செய்தியை கொண்டுவந்திருக்கவேண்டும்எபாஃபிரஸ் (Ἐπαφρᾶς) (காண்க கொலோ 4,12) என்னும் கொலோசேய நபர் அந்தசீடராயிருக்க வாய்ப்புள்ளதுஇக்கடிதத்தின் முகவுரைசெய்தி மற்றும் முடிவுரையிலிருந்துஇதனை பவுலே எழுதினார் என நம்பினால் தவறில்லைஇதற்கு எதிர்கருத்துக்கள் இல்லாமலும்இல்லைகொலோசேயில் சில தப்பறைகள் இருந்ததாகவும் அதனை களைவதற்கே பவுல் இந்தகடிதத்தை எழுதினார் எனவும் நம்பப்படுகிறதுஇது எப்படியான தப்பறைகள் என்பதில் பலகருத்துக்கள் உள்ளனசில இதனை யூதர் கால அட்டவணை சார்ந்த பிரச்சனைகளாகவும்சிலர்இதனை பிறமத சிலை வழிபாட்டு பழக்கவழக்கங்கள் எனவும் காண்கின்றனர்இன்றைய வாசகம்சிறிய பகுதியாக இருந்தாலும்முக்கியமான கொலோசேய செய்திகளை தாங்கி வருகின்றதுஇந்த பகுதியிலே பவுல் பிழையான மெய்யறிவு-வாதிகளை சாடிஏதற்காக மக்கள் கிறிஸ்துவைபின்பற்ற வேண்டும்என்ற இறையியல் வாதத்தை முன்வைக்கிறார்

வவ. 1-2: கொலோசேயர் ஏற்கனவே கிறிஸ்துவோடு இணைந்துவிட்டதால் அந்த இணைப்புஅவர்கள் வாழ்வில் மாற்றத்தை காட்ட வேண்டும் என்கிறார் பவுல்அதாவது கிறிஸ்து மேலுலகைசார்ந்தவர் என்பதால்அவரைச் சார்ந்தவர்களும் மேன்மையானவர்களாக இருக்க வேண்டும்என்பது பவுலின் எதிர்பார்ப்பு(τὰ ἄνω ζητεῖτε, οὗ ὁ Χριστός ἐστιν ἐν δεξιᾷ τοῦ θεοῦ καθήμενος டா ஆனோ ட்சேடெய்டெஹு கிறிஸ்டொஸ் எஸ்டின் என் தெக்ட்சியா டூ தியூ காதேமெனொஸ்மேலுலகு சார்ந்வற்றை தேடுங்கள் அங்கேதான் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில்வீற்றிருக்கிறார்). இதில்  மேலுலகு மற்றும் கீழுலகு என்று இரண்டு வகையான வாழ்கை முறையைபவுல் விவாதிப்பதைக் காணலாம்மேலுலகு என்பது விண்ணகம் என்பதைவிடஇங்கு நல்லகிறிஸ்தவ நம்பிக்கை வாழ்வை குறிக்கிறதுகீழுலகு என்பது கொலோசேய அக்கால மெய்யறிவுவாதத்தை குறிக்கலாம்இதன் வார்த்தை பிரயோகம் சாதரண உலகத்தைக் குறிக்கிறது (τὰ ἐπὶ τῆς γῆς டா எபி டேஸ் கேஸ்உலகத்தின் மேல்). கடவுளின் வலது பக்கத்தில் இருக்கிறார்என்பதன் மூலம்கிறிஸ்துவின் வழியும்அவர் இருக்கும் உலகமும்தான் உண்மையானது எனகாட்டப்படுகிறது

. 3: ஏன் இவர்கள் கிறிஸ்துவோடு இணைந்திருக்க வேண்டும் என்பதற்கு விளக்கம்கொடுக்கிறார்கிறிஸ்துவோடு இறந்துள்ளார்கள் என்பதுஇவர்களின் திருமுழுக்கையும்உயிர்ப்பையும் குறிக்கும்வாழ்வு மறைந்திருக்கிறது என்பதுஇந்த புதிய வாழ்வை யாரும் திருடமுடியாது என்பதை விளக்குகிறது

. 4: 'கிறிஸ்துவே உங்கள் வாழ்வு(ἡ ζωὴ  ὑμῶν ஹே ட்சோன் ஹுமோன்என்றும் சில பாடங்கள்மொழிபெயர்க்கப்படுகிறதுஏன் மாட்சி இன்னும் தென்படவில்லை என்ற வாதம் இவர்களிடையே 
இருந்திருக்கலாம்ஆனால் கிறிஸ்து வரும்போதுதான் அந்த மாட்சி தொன்படும் என்கிறார்பவுல்


யோவான் 20,1-9
1வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியாகல்லறைக்குச் சென்றார்கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். 2எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும்வந்து, 'ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்அவரைஎங்கே வைத்தனரோஎங்களுக்குத் தெரியவில்லை!' என்றார். 3இதைக் கேட்ட பேதுருவும்மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். 4இருவரும் ஒருமித்து ஓடினர்மற்றச் சீடர்பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். 5அவர் குனிந்துபார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்ஆனால் உள்ளே நுழையவில்லை. 6அவருக்குப்பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார்நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார்அங்குத்துணிகளையும், 7இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார்அத்துண்டு மற்றத்துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. 8பின்னர்கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்கண்டார்நம்பினார். 9இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரைபுரிந்துகொள்ளவில்லை.


 திருவிழிப்பு சனியில் வாசித்த மத்தேயுவின் பதிவைத்தான் யோவானின் நடையில் இங்குகாண்கின்றோம்ஆண்டவரின் உயிர்பின் பின் நடைபெறும் காட்சிகள் நாடக அரங்கேற்றத்தைப்போல்சிறிய-பெரிய-முக்கிய பாத்திரங்களினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன

வவ. 1-2: மகதலா மரியா இங்கே ஒரு சிறிய பாத்திரம்அவர் கண்ட காட்சியிலிருந்துஆண்டவரின் உயிர்ப்பை நம்பவில்லை மாறாக சாதாரண மனக் குழப்பத்தையேவெளிப்படுத்துகிறார்

எப்படி யூத மற்றும் உரோமைய காவலர்களால் பாதுகாக்கப்பட்ட கல்லறையின் வாயில்திறக்கப்பட முடியும்? (மத்தேயுவிற்கு இந்த கல்லை வானதூதர் திறந்தார்)

எப்படி உடலை களவாடி கொண்டு செல்ல முடியும்இது ஓர் பாரதூரமான குற்றம்

 வாரத்தின் முதல் நாளே விடியும் முன் (ஞாயிறு விடியல்கல்லறைக்கு சென்றது அவர்ஆண்டவர்மேல் கொண்ட அன்பை காட்டுகிறதுபேதுருவிடமும் யோவானிடமும் சொன்னது
இவர்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறதுயோவான் நற்செய்தியில்இந்த தனிஅன்புகொண்டிருந்த சீடர் (τὸν ἄλλον μαθητὴν ὃν ἐφίλει ὁ Ἰησοῦς டொன் அல்லொன் மாதேடேன்ஹொன் எபிலெய் ஹொ இயேசூஸ்) யார் என்று இலகுவில் அடையாளம் காண முடியாதுஅவர்யோவானாக இருப்பதற்கு வாய்ப்புகள் பாரம்பரிய முறைப்படி அதிகமாகவே உள்ளனஎங்களுக்கு தெரியவில்லை (οὐκ οἴδαμεν ஊக் ஒய்தாமென்)என்று மகதலா மரியா கூறுவதனால்அவருடன் இன்னும் பலர் சென்றிருந்தனர் என ஊகிக்கவைக்கிறதுஏன் யோவான் மற்றையபெண்களின் பெயர்களை குறிப்பிடவில்லைஒருவேளை மகதலா மரியாவின் பாத்திரத்தைமையப்படுத்தவென நினைக்கலாம்இந்த ஊகம் சரியாக இருக்கலாம்ஏனெனில் அனைத்துநற்செய்திகளும் இந்த மகதலா மரியாவை பெயர்சொல்லி விவரிக்கின்றன.

.3: மகதலா மரியாவின் அவதானத்தைக் கேட்ட இந்த இருவர்பேதுரு மற்றும் அன்புச் சீடர் (Πέτρος καὶ ὁ ἄλλος μαθητὴς ஹொ பெட்ரொஸ் காய் ஹொ அல்லொஸ் மாதேடேஸ்)உடனடியாக கல்லறைக்கு புறப்படுகின்றனர்இந்த இருவர் யோவான் நற்செய்தியில் மிகமுக்கியமான பாத்திரங்கள்

வவ. 4-5: இந்த வரிகள் பல கேள்விகளை எற்படுத்துகிறனஆசிரியர் பல வேiளைகளில் அன்புச்சீடரை முக்கியமாக உள்வாங்குவது சாதாரணம்அது வரலாற்று நிகழ்வாகக்கூட இருக்கலாம்
அல்லது அப்படியான தேவை ஒன்று இருந்திருக்கலாம்இங்கு அவர் பேதுருவைவிட வேகமாகஓடியதன் மூலம்அன்புச் சீடர் அல்லது அன்புச் சீடரின் கிறிஸ்தவ குழுபேதுருவின் குழுவிற்குஎந்த விதத்திலும்எதிரானதோ அல்லது குறைவானதோ இல்லை எனக்காட்டுகிறார் எனநிச்சயமாக நம்பலாம்அவர் உள்ளே நுழையவில்லை என்பதால்யோவான் பேதுருவுக்காககாத்திருப்பது புலப்படுகிறதுயோவான் பேதுருவுக்காக காத்திருப்பது பேதுருவின்முக்கியத்துவத்தையும்ஆரம்ப கால திருச்சபை பேதுருவுக்கு கொடுத்த மரியாதையையும்காட்டுகிறது

. 6: பேதுரு உடனடியாகநிற்காமல் உள்ளே நுழைவது அவரின் தலைமைத்துவத்தையும்திருச்சபையில் அவருக்கிருந்த பொறுப்பையும்அல்லது இயேசுவின் மீது அவர்கிருந்தஅன்பையும் காட்டுகிறதுஅவர்தான் வெறுமையான கல்லறையை முதலில் காண்கிறார்இங்கேஅவர் யோவானை (அன்பு சீடரை) மிஞ்சுகிறார்

. 7: சுருட்டி வைக்கப்பட்டிருந்த துண்டுகளும்வேறு வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்ததும்அதனால் சுற்றப்பட்டிருந்தவர்எழுந்து அதனை அவிழ்த்து வைத்தது போல உள்ளதுதலையைமூடியிருந்த துண்டை இயேசு முதலில் கழட்டியிருக்க வேண்டும்அதனால்தான் அது தனியேவைக்கப்பட்டிருக்கிறதுயோவான் இவ்வாறுயாரும் இயேசுவின் உடலை கொண்டுபோய் 
இருக்கமுடியாது அத்தோடு இந்த பெண்கள் சொல்வது அறியாமையினாலும் அல்லதுதுன்பத்தினாலும் என்று விவரிக்கின்றார்

. 8: இது முக்கியமான வசனம்(εἶδεν καὶ ἐπίστευσεν· எய்தென் காய் எபிஸ்டெயுசென்கண்டார்நம்பினார்)யோவான் நற்செய்தியில் நம்புதல் முக்கியமான விழுமியம்யோவான் தனதுநற்செய்தியின் நோக்கமாகவும் இதனையே தருகிறார் (யோவான் 20,31)யோவானின் நற்செய்திநம்பகமானதுஏனெனில் அவர் இயேசுவைக் கண்டவர் அத்தோடு நம்பியவர்

வவ. 9-10: சீடர்களின் தற்போதைய நிலை விவரிக்கப்படுகிறதுஅவர்கள் இன்னும் நிறைவாகபுரிந்துகொள்ளவில்லை. 8வது வசனத்தில் அன்புச் சீடர் நம்பினார் என்று சொல்லப்பட்டுள்ளதுஆக நம்பிக்கையும் புரிந்துகொள்ளுதலும் இரண்டு வேறு விழுமியங்கள் எனலாம்இந்தநற்செய்தி எழுதப்பட்ட காலத்தில் ஏற்கனவே இயேசுவின் உயிர்ப்பை யோவான் முழுமையாகபுரிந்திருப்பார்ஆனால் வெறுமையான கல்லறையில் அந்த பக்குவத்தை அவர் அப்போதுபெற்றிருக்கவில்லை என்பதை அவர் பின்நோக்கி நினைத்துப் பார்க்கிறார்இறுதியாக அவர்கள்வெறும் கல்லறையை பார்த்துவிட்டு தங்கள் இடத்திற்கே திரும்பி செல்கிறார்கள்அதாவதுதங்களது பழைய பயத்திற்கும்ஒழிந்த வாழ்க்கைக்கும் திரும்புகிறார்கள்இயேசு இன்னமும்அவர்களுக்கு தோன்றவில்லை

ஆண்டவரை புரிந்து கொள்ளுதல் இரண்டாவதாக வரலாம்
ஆனால் அவரை நம்புதல் எங்களது வாழ்வின் மையமாகவும்
முதலாவதாகவும் இருக்கவேண்டும்
யோவான் ஆண்டவரை நம்பினதற்கு 
அவர் ஆண்டவரின் மார்பில் இடம் பிடித்துக்கொண்டமையே காரணம்.

அன்பான ஆண்டவரேஉமது உயிர்ப்பு
எங்ளது நாளாந்த வாழ்வில் மாற்றம் ஏற்றபடுத்த உதவிசெய்யும்.

ஆமென்!!! 

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) மி . ஜெகன்குமார் அமதி , சங்கமம் , அமதிகள் ஆன்மீக...