செவ்வாய், 24 டிசம்பர், 2019

கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு திருப்பலி (அ,ஆ,இ) 24,12, 2019 (A commentary of the readings of the Christmas Vigil



கிறிஸ்து பிறப்பு திருவிழிப்பு திருப்பலி (,,)
24,12, 2019
(A commentary of the readings of the Christmas Vigil

M. Jegankumar Coonghe OMI,
‘Sangamam,’ 
Kopay South, Kopay, Jaffna.
Sri Lanka.
சனி, 23 டிசம்பர், 2017

முதல் வாசகம்எசாயா 62,1-5
பதிலுரைப்பாடல்திருப்பாடல் 89
இரண்டாம் வாசகம்திருத்தூதர்பணி 13,16-17.22-25
நற்செய்திமத்தேயு 1,1-25


எசாயா 62,1-5
1சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும்அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரைஅதனைமுன்னிட்டு மவுனமாயிரேன்எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். 2பிற இனத்தார் உன்வெற்றியைக் காண்பர்மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்ஆண்டவர் தம் நாவினால் சூட்டும்புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். 3ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்உன்கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். 4'கைவிடப்பட்டவள்என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; 'பாழ்பட்டதுஎன இனி உன் நாடு அழைக்கப்படாதுநீ 'எப்சிபாஎன்று அழைக்கப்படுவாய்உன் நாடு 'பெயுலாஎன்று பெயர் பெறும்ஏனெனில்ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்உன் நாடு மணவாழ்வு பெறும். 5இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து 
கொள்வார்மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

 எசாயாவின் 62வது அதிகாரம்சீயோனின் மகிமை என்ற பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது
இது ஒருவகை கவிநடையில் அமைக்கப்பட்டுள்ளதுஇன்னும் விசேடமாக இந்த பகுதியில் 
சீயோன் ஒருபெண்ணாக வர்ணிக்கப்படுகிறாள்

.1: எசாயா ஆசிரியர் எதோ எதிர்காலத்திற்கான இறைவாக்கு போல இதனை பதிவு செய்கிறார்இந்த வரியின்மூலமாக எருசலேம் தற்காலத்தில் துன்பப்படுகிறது ஆனால் எதிர்காலத்தில் நிச்சயமாக மகிழ்வுறும்என்பதனைப்போல காட்சியமைக்கப்படுகிறதுசீயோன் צִיּוֹן֙ (ட்சியோன்) 
இங்கு வழக்கம்போல எருசலேமை குறிக்கிறதுவைகறை ஒளியும்சுடர் விளக்கும் நம்பிக்கையின்அடையாளங்கள்இதனை வைத்துத்தான் அக்காலத்தில் விடியலை கணித்தார்கள்

.2: பிற இனத்தார் மற்றும் மன்னர்கள் என்னும் சொற்கள் இங்கே ஒத்த கருத்துச்சொற்களாகபாவிக்கப்பட்டுள்ளனஎருசலேமிற்கு ஆண்டவர் ஒரு புதிய பெயரை שֵׁם חָדָ֔שׁ (ஷெம் ஹாதாஷ்
சூட்டுவார் என்றுசொல்லப்படுகிறதுபுதிய பெயர் என்பது புதிய வாழ்வையும்புதிதான நம்பிக்கையையும் குறிக்கிறதுஇஸ்ராயேலின் வெற்றி (צֶדֶק ட்செதெக் நீதி), மற்றும் அதன் மகிமை நினைவூட்டப்படுவதன் மூலமாகதற்காலத்தில் எருசலேம் தோல்வியில் துவண்டாலும்பல தாழ்வுகளைக் 
கண்டாலும் அவை நிரந்தரம் இல்லைஎன்பது சொல்லப்படுகிறது

.3: ஆண்டவரின் கையில் எருசலேம் மணிமுடியாகவும் עֲטָרָה ('அதாராஹ்)அரச மகுடமாகவும்
 צָנִיף (ட்சாநிப்)சித்தரிக்கப்படுவது எருசலேமின் மேன்மையையும் விசேட கவனிப்பையும் காட்டுகிறதுமணிமுடி மற்றும்அரசமகுடம் என்பன ஒருவரின் இறைமையை காட்டும் அடையாளங்கள்
இந்த அடையாளங்கள் மூலமாகஎருசலேமிற்கு நம்பிக்கை கொடுக்கப்படுகிறது

.4: எருசலேம் தன்னுடைய போர் தோல்விகளாலும்அன்நியரின் படையெடுப்புக்களாலும் சீரழிக்கப்பட்டதுஇதனால் அதற்கு முக்கியமான பெயர்கள் கொடுக்கப்பட்டன -ம்עֲזוּבָה 
அட்சுவாஹ்கைவிடப்பட்டவள், שְׁמָמָהஷெமாமாஹ்  புறக்கணிக்கப்பட்டவள். 
ஆனால் கடவுளின் கண்பார்வையால் இந்த பெயர்கள் மாற்றம்பெறுகின்றனஅவை
חֶפְצִי־בָהּ ஹெப்ட்சிபாஹ்மகிழ்ச்சிבְּעוּלָה பெ'வுலாஹ்திருமணமானவள்
இவை சாதாரணபெயர்மாற்றங்கள் அல்ல மாறாக வாழ்வின் முழுமையான மாற்றங்கள்

.5: ஒரு இளைஞனின் திருமண அனுபவம் இங்கே உவமிக்கப்படுகிறதுஇளைஞன் பலவிதமானஎதிர்பார்ப்புக்களோடு தன்னுடைய திருமணத்தை அரங்கேற்றுகிறார்அங்கே புதிய உறவுகாதல்சுவாசம்என்பன அவர் இதயத்தில் ஏற்படுகிறதுஇதனை எசாயா எருசலேமை மணமகளாகவும்
கடவுளை திருமணம்செய்யப்போகும் இளைஞனாகவும் ஒப்பிட்டு காட்சிப்படுத்துகிறார்(உன்னை எழுப்பியவர் என்ற தமிழ்மொழிபெயர்ப்பு எபிரேய விவிலியத்தில் בָּנָיִךְ உன் மைந்தர் (பானாயித்) 
என்றே உள்ளதுஇதற்கு பலர் பலஅர்தங்களைக் கொடுக்கின்றனர்அதில் ஒன்றுதான் 
உன்மைந்தர் என்ற சொல்லை உன்னை எழுப்பியவர் בֹּנָיִךְ (போனாயித்)  என்று மாற்றுவது
அர்த்தத்தை பொறுத்த மட்டில் இது சரியாக தோன்றினாலும் மொழியியலில்அவ்வாறு சரியாக தோன்றாது.)

திருப்பாடல் 89
நாடு இடருற்றபோது பாடியது
(எஸ்ராகியரான ஏத்தானின் அறப்பாடல்)

  என்பத்தொன்பதாம் திருப்பாடல் ஐம்பத்திரண்டு வரிகளைக் கொண்ட அழகான ஒரு பாடல்இந்த பாடலை(מַשְׂכִּ֗יל மஸ்கில்) எஸ்ராகியரான ஏத்தான் אֵיתָן ('ஏதான்பாடினார் என்று இப்பாடலின் 
முகவுரை சொல்கிறதுஇந்த ஏத்தான் ஒரு இசைக்கருவி மீட்டுகின்ற குழுவிற்கு தலைவராக 
இருந்திருக்க வேண்டும் என்றுவாதாடப்படுகிறதுஆனால் இவரது காலத்தை கணிப்பது சற்றுக் 
கடினம்அத்தோடு இவரின் இசையைவிடசாலமோனின் இசைஞானம் மேலானது என்றும் 
விவிலியம் கூறுகிறது (காண்க 1அர 4,31).
(எசுராகியனான ஏத்தானைவிடஏமான்கல்கோல்தர்தா என்ற மாகோலின் புதல்வர்மற்ற மனிதர்அனைவரையும் விடஅவரே ஞானத்தில் சிறந்து விளங்கினார்.)

  ஒரு குழும வியாகுலப் பாடலானஅரசரினதும் நாட்டு மக்களினதும் தோல்வி கடவுளின் தோல்விக்குநிகரானது என நினைத்து இந்தப் பாடல் புலம்புகிறதுகடவுளிள் உலக படைப்பையும் அவருடையவல்லமையையும் சக்தியையும் நினைவூட்டுகின்ற நல்லதொரு செய்திஆனால் ஆண்டவரின் பணியாளனாகியமண்ணுலக அரசரின் தோல்வி ஏற்றுக்கொள்ளப்பட முடியாததுகடவுள் தாவீதையும் அவர் வழிமரபையும்என்றென்றைக்கும் ஆசீர்வதித்துள்ளமையால் அவர்களின் தோல்விகள் கடவுள் மீதான நம்பிக்கையை கேள்விகேட்க வாய்ப்பளிக்கக்கூடியவை என புலம்புகிறார் ஆசிரியர்கடவுள் உலகை படைத்ததையும்இஸ்ராயேலர்கானான் நாட்டில் குடியேறியதையும் ஒப்பிட்டுவெற்றி என்றும் கடவுளுக்குரியதுஅதேபோல் மண்ணக வெற்றிஅவர் பணியாளர்களாகிய தாவீதின் வீட்டாருக்கு இருக்க வேண்டும் என்கிறார்
  இஸ்ராயேலின் நம்பிக்கை இப்படியிருக்கதம் நாட்டின் தலைவரும் அவர் நிலமும் ஆக்கிரமிக்கப்படுவதும்துன்பமானது என கடவுளுக்கு நினைவூட்டுகிறார்எது எவ்வாறெனினும் அனைத்து 
புலம்பல் பாடல்களும்இறுதியாக நம்பிக்கையை வாசகர்களுக்கு கொடுப்பதே வழக்கம் 
அதனையே இந்தப்பாடலும் கொண்டுள்ளது


திருத்தூதர்பணி 13,16-17.22-25
16அப்போது பவுல் எழுந்து கையால் சைகைகாட்டிவிட்டுக் கூறியது: 'இஸ்ரயேல் மக்களேகடவுளுக்குஅஞ்சுவோரேகேளுங்கள். 17இந்த இஸ்ரயேல் மக்களின் கடவுள் நம்முடைய மூதாயரைத் தேர்ந்தெடுத்தார்அவர்கள் எகிப்து நாட்டில் அன்னியர்களாகத் தங்கியிருந்தபோது அவர்களை ஒரு பெரிய மக்களினமாக்கினார்பின்பு அவர்தம் தோள்வலிமையைக் காட்டி அவர்களை அந்த நாட்டைவிட்டு வெளியேஅழைத்துக்கொண்டுவந்தார்;. 

22பின்பு கடவுள் அவரை நீக்கிவிட்டுத் தாவீதை அவர்களுக்கு அரசராக ஏற்படுத்தினார்அவரைக் குறித்து'ஈசாயின் மகனான தாவீதை என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன் என் விருப்பம் அனைத்தையும் அவன்நிறைவேற்றுவான்என்று சான்று பகர்ந்தார்.
23தாம் அளித்த வாக்குறுதியின்படி கடவுள் அவருடைய வழிமரபிலிருந்தே இஸ்ரேலுக்கு இயேசு என்னும் மீட்பர்தோன்றச் செய்தார். 24அவருடைய வருகைக்கு முன்பே யோவான், 'மனம்மாறி திருமுழுக்குப் பெறுங்கள்என்றுஇஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் பறைசாற்றி வந்தார். 25யோவான் தம் வாழ்க்கை என்னும் ஓட்டத்தைமுடிக்கும் தறுவாயில் 'நான் யார் என நீங்கள் நினைக்கிறீர்களோ அவரல்ல நான்இதோஎனக்குப்பின் ஒருவர்வருகிறார்அவருடைய மிதியடிகளை அவிழ்க்கவும் எனக்குத் தகுதியில்லைஎன்று கூறினார்.

 இந்த பகுதி பவுலுடைய முதலாவது தூதுரைப் பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறதுஎரோதின்கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலாபனையின் பின்னர்ஏரோது எப்படியான சாவினை தழுவினான் எனதிருத்தூதர் பணி காட்டுகிறதுஇதன் பின்னர் தூய ஆவியார் பவுலையும் பர்னபாவையும் விசேட 
பணிக்கெனதெரிவு செய்வதாக திருத்தூதர் பணி ஆசிரியர் (லூக்காகுறிப்பிடுகிறார்இவ்வாறு 
இவர்கள் சிரியாவின்அந்தியோக்கியாவிலிருந்து சைப்பிரஸ் தீவு வழியாக பம்பிலியாவை அடைந்து பின்னர் பிசிதியாவைஅடைகிறார்கள் (தற்போதைய தெற்கு துருக்கியின் இடங்கள்). இந்த 
பிசிதியாவிலிருந்த அந்தியோக்கியாசெபக்கூடம் ஒன்றில் அவர்கள் செப வழிபாட்டில் பங்கு 
பெறுகிறார்கள் (காண்க தி.பணி 13,13-15: அந்தியோக்கியா என அக்காலத்தில் பல இடங்கள் பெயரிடப்பட்டிருந்தனஅந்தியோக்குஸ் என்ற பிரசித்திபெற்ற ஒரு கிரேக்க அரசன் இந்த இடங்களை தன் பெயரில் நிறுவினான் என நம்பப்படுகிறது.).செபக்கூடத்திலே வழக்கம்போல சட்டமும் இறைவாக்கும் வாசிக்கப்பட்டதன் பின் முக்கியமானவர்கள்உரையாற்றுவது வழக்கம்இது நம்முடைய மறையுரை போல அமைந்ததுபவுலும் பர்னபாவும் விருந்தாளிகளாகஇருந்ததால் அந்த வாய்ப்பு இவர்களுக்கு தரப்படுகிறதுஇந்த வேளையிலே பவுல் தன்னுடைய மிக முக்கியமானமறையுரையை ஆரம்பிக்கிறார்இதனை பவுலுடைய கன்னி மறையுரை என்றும் சிலர் பாக்கின்றனர்மரியோன்சோர்ட்ஸ் (Marion L. Soards) என்னும் விவிலிய ஆய்வாளரின் ஆய்வுப்படி
திருத்தூதர் பணிகள் நூலில் இருபத்திநான்கு (24) மறையுரை உரைகள் காணப்படுகின்றன
அவற்றில் யாக்கோபுஸ்தேவான்பேதுரு மற்றும் பவுல்போன்றவர்களின் உரைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவைஅத்தோடு இந்த உரைகளுக்கும் அக்காலகிரேக்க உரோமைய 
இலக்கியங்களுக்ககும் நெருங்கிய தொடர்புள்ளதாகவும் இவர் கருதுகிறார். (உசாத்துணை: Soards, Marion L., The Speeches in Acts. Their Content, Context, and Concerns (Kentucky 1994).). 

.16: இந்த வசனத்தை பல விதமாக நோக்கலாம்முதலாவதாக பவுல் இஸ்ராயேல் மக்களை விழிக்கிறார் (ἄνδρες Ἰσραηλῖται அந்த்ரெஸ் இஸ்ராயேலிடாய் - இஸ்ராயேல் மனிதர்களே!), 
இரண்டாவதாக அவர் கடவுளுக்கு அஞ்சுவோரே (οἱ φοβούμενοι τὸν θεόν ஹொய் பொபூமெனொய் டொன்தீயோன்எனவும் விழிக்கிறார்இந்த இரண்டாவது விழிப்பு இஸ்ராயேல் மக்கள் இல்லாதவர்களை குறிக்கிறதுஎன பல ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்(இது இஸ்ராயேல் மக்களுக்கு ஒரு ஒத்தகருத்துச் சொல்லாகக்கூடஇருக்கலாம்). இதன் வாயிலாக 
இஸ்ராயேல் மதத்தை தழுவாமல் இஸ்ராயேல் வழிபாடுகளில் பங்கெடுத்தவர்கள்செபக்கூடங்களிலே இருந்திருக்கிறார்கள் என்பது புலப்படுகிறதுபவுலுடைய கையசைவுகேட்பவர்களுடைய 
அவதானத்திற்கானபவுலின் அறிகுறியாக இருக்கலாம்

.17: இந்த வசனத்தில் பவுல் முழு மீட்பின் வரலாற்றையும் சுருக்கமாக சொல்லிவிட்டார்
நாம் வணங்குகின்ற கடவுள் இஸ்ராயேல் மக்களுடைய கடவுள்.
அவர் நம் மூதாதையரைத் தேர்ந்தெடுத்தார்.
அவர்கள் எகிப்தில் அன்னியர்களாக தங்கியிருந்தனர்
அங்கே அவர்களை பெரிய இனமாக்கினார்
கடவுள் தன் தோள் வலிமையினால் அவர்களை வெளியே கொணர்ந்தார்

.18: பாலைவனத்தில் மக்கள் திரிந்தலைந்ததுநாற்பது வருடமாக கருதப்பட்டதுஇந்த காலம் அவர்களுக்குசோதனை மற்றும் தூய்மையாக்களுக்கான காலமாகவும் கருதப்பட்டதுநாற்பது என்பது ஒரு அடையாளஇலக்கமாகவும் இருக்கலாம்

.19-20: இஸ்ராயேல் மக்கள் கானான் நாட்டை அடைய பல இன்னல்களையும் போர்களையும்சந்திக்கவேண்டியிருந்ததுகடவுள் ஏழு மக்களினங்களை அழித்துத்தான் கானானை 
இஸ்ராயேலருக்கு கொடுத்ததாக பவுல் உரைக்கிறார்இந்த மக்கள் கூட்டத்தின் பெயர்களை 
. 7,1இல் காணலாம்அத்தோடு இஸ்ராயேல் 450 ஆண்டுகள் கானானை உரிமைச் சொத்தாககொண்டதாகவும் கூறுகிறார்இந்த காலம் நீதிபதிகளின் காலமாக இருக்கலாம்இதனை பவுல் 450 ஆண்டுகள்எனக் கணக்கிடுகிறார்இந்த கணிப்பு அக்காலத்தில் பிரபல்யமாக இருந்திருக்கலாம்
சாமுவேல் இறுதியான நீதிபதியாகவும் முக்கியமான இறைவாக்கினராகவும் இன்றுவரை 
இஸ்ராயேல் வரலாற்றால் கருதப்படுகிறார்.  
(1நீ உரிமையாக்கிக் கொள்ளைப்போகும் நாட்டில்உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்துஉன்னைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுந்த மக்களாகிய இத்தியர்கிர்காசியர்எமோரியர்கானானியர்பெரிசியர்இவ்வியர்எபூசியர் எனும் ஏழு மக்களினங்களையும் உன்கண்முன்னே விரட்டியடித்து,)

.21: சவுல் அரசனானது மக்களின் விருப்பத்தினாலேயே என்று பவுல் நாசூக்காக் சொல்கிறார்சவுல் நாற்பதுஆண்டுகள் அரசான்டிருக்கிறார் என்று சொல்வது அவர் நிறைவான ஆண்டுகள் ஆட்சிசெய்தார் என்பதையும்குறிக்கலாம்

.22: இஸ்ராயேலருடைய மீட்பின் வரலாற்றில் தாவீது மாமன்னர் மிக முக்கியமானவர்இது பவுலுக்கு நன்குதெரிந்திருந்ததுதிருத்தூதர் பவுல்அரசர் சவுலுடைய பெஞ்சமின் குலத்தை சார்ந்தவர் இருப்பினும் யூதாகுலத்தின் தாவீதுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவர் வரலாற்றை பொதுவாக பார்க்கிறார் என்பதற்கான நல்அடையாளம்அத்தோடு தாவீதை நியாயப்படுத்திபவுல் இறைவாக்குகளையும் கோடிடுகிறார் (தி.பா 90,20: ❀❀)இந்த இறைவாக்குகள் மூலமாக தாவீதுதான் உண்மையாக தேர்ந்துகொள்ளப்பட்ட அரசர் எனநிரூபிக்கப் பார்க்கிறார்

(20என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்)
(❀❀14ஆனால் உமது அரசு நிலைக்காதுஆண்டவர் தம் மனதிற்கு ஏற்ப ஒருவரைத் தமக்கெனத்தேடிஅவரையே தம் மக்களின் தலைவராய் நியமித்துள்ளார்ஏனெனில் ஆண்டவர் கட்டளையின் படி நீர்நடக்கவில்லை என்றார்.)

.23: இந்த வரிதான் பவுலுடைய இந்த உரையின் மிக முக்கியமான நோக்கம்அதாவது தாவீதின் உண்மைவாரிசு இயேசுஅவரிலேதான் தாவீதின் அரியணை சாகாவரம் பெறுகிறது என்கிறார்பவுல் இயேசுவை 'மீட்பர்இயேசு' (σωτῆρα Ἰησοῦν சோடேரா ஏசூன்என்று தைரியமாக அறிக்கையிடுகிறார்

.24: யோவானை நினைவூட்டுவதன் வாயிலாக அவர் மெசியாவல்லமாறாக மெசியாவிற்காக வந்தவர் என்பதைஅழுத்திச் சொல்கிறார்அத்தோடு யோவானின் முக்கிய செய்தியாக இருந்தது மனமாற்றத்திற்கான அழைப்பேஇந்த அழைப்பு அனைத்து இஸ்ராயேலருக்கும் கொடுக்கப்பட்டது என்பதன் வாயிலாக இந்த அழைப்பிற்குள்தற்போது இதனை கேட்கிறவர்களும் உள்வாங்கப்படுகிறார்கள் என்பதையும் நினைவூட்டுகிறார்

.25: பவுல் தான் யோவானைப்பற்றி சொன்னவற்றை யோவானின் வாயிலிருந்தே எடுக்கிறார்அதாவதுயோவானைப் பற்றி மக்களின் பொதுவான நினைப்பு தவறானது என்கிறார்யோவானைப் பற்றி மக்கள் என்னநினைத்தார்கள் என்பதை பவுல் கூறாமல் விடுகிறார்ஒருவேளை இது பவுலின் வாசகர்களுக்குதெரிந்திருக்கலாம். (யோவானை சிலர் மெசியாவாக கருதினார்கள் என்ற வாதமும் ஆரம்ப கால திருச்சபைக்குஒரு சவாலாக இருந்தது). இரண்டாவதாக யோவான் தான் இயேசுவின் மிதியடிகளையும் அவிழ்க்கதகுதியில்லாதவர் என்கிறார்மிதியடிகளை அவிழ்ப்பது அக்காலத்தில் அடிமைகளின் வேலையாகக்கருதப்பட்டதுஅதேவேளை மிதியடிகளை அவிழ்த்து இன்னொருவரிடம் கொடுப்பதன் மூலம் ஒருவர்குறிப்பிட்டவிடயத்தில் தனக்கு முழு உரிமையுள்ளது என்று கூறுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது (காண்க ரூத்து 4,7)ஆகஇந்த அடையாளத்தின் மூலம் யோவான் தனக்கு மீட்பு வேலையில் தகுதியோ பங்கோ கிடையாது எனசொல்வதை அடையாளமாக குறிக்கிறார் எனலாம்

(7இஸ்ரயேலரிடையே பண்டைக் காலத்தில் ஒரு வழக்கம் இருந்ததுநிலவிற்பனை அல்லது கொடுக்கல்வாங்கல் நடைபெறும்போது எடுக்கும் முடிவை உறுதிப்படுத்துவதற்காகஒருவர் தம் காலணியைக் கழற்றிமற்றவரிடம் கொடுத்துவிடுவார்எடுக்கப்பட்ட முடிவை உறுதிப்படுத்தும் முறை இதுவே.)

மத்தேயு 1,1-25
இயேசுவின் பிறப்பும் குழந்தைப் பருவமும்
இயேசுவின் மூதாதையர் பட்டியல்
(லூக் 3:23 - 38)

1தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:
2ஆபிரகாமின் மகன் ஈசாக்கு;
ஈசாக்கின் மகன் யாக்கோபு;
யாக்கோபின் புதல்வர்கள்
யூதாவும் அவர் சகோதரர்களும்.
3யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த
புதல்வர்கள் பெரேட்சும் செராகும்;
பெரேட்சின் மகன் எட்சரோன்;
எட்சரோனின் மகன் இராம்.
4இராமின் மகன் அம்மினதாபு;
அம்மினதாபின் மகன் நகசோன்;
நகசோனின் மகன் சல்மோன்.
5சல்மோனுக்கும் இராகாபுக்கும்
பிறந்த மகன் போவாசு;
போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த
மகன் ஓபேது;
ஓபேதின் மகன் ஈசாய்.
6ஈசாயின் மகன் தாவீது அரசர்;
தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம்
பிறந்த மகன் சாலமோன்.
7சாலமோனின் மகன் ரெகபயாம்;
ரெகபயாமின் மகன் அபியாம்;
அபியாமின் மகன் ஆசா.
8ஆசாவின் மகன் யோசபாத்து;
யோசபாத்தின் மகன் யோராம்;
யோராமின் மகன் உசியா.
9உசியாவின் மகன் யோத்தாம்;
யோத்தாமின் மகன் ஆகாசு;
ஆகாசின் மகன் எசேக்கியா.
10எசேக்கியாவின் மகன் மனாசே;
மனாசேயின் மகன் ஆமோன்;
ஆமோனின் மகன் யோசியா.
11யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும்இவர்கள் காலத்தில்தான் யூதர்கள்பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
12பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்செயல்தியேலின் மகன் செருபாபேல்.
13செருபாபேலின் மகன் அபியூது
அபியூதின் மகன் எலியாக்கிம்;
எலியாக்கிமின் மகன் அசோர்.
14அசோரின் மகன் சாதோக்கு;
சாதோக்கின் மகன் ஆக்கிம்;
ஆக்கிமின் மகன் எலியூது.
15எலியூதின் மகன் எலயாசர்;
எலயாசரின் மகன் மாத்தான்;
மாத்தானின் மகன் யாக்கோபு.
16யாக்கோபின் மகன்
மரியாவின் கணவர் யோசேப்பு.
மரியாவிடம் பிறந்தவரே
கிறிஸ்து என்னும் இயேசு.
17ஆக மொத்தம் ஆபிரகாம்முதல் தாவீது வரை தலைமுறைகள் பதினான்குதாவீது முதல் பாபிலோனுக்குச்சிறைப்பிடித்துச் செல்லப்பட்டவர்கள் வரை தலைமுறைகள் பதினான்குபாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச்செல்லப்பட்டவர்கள் முதல் கிறிஸ்து வரை தலைமுறைகள் பதினான்கு.
இயேசுவின் பிறப்பு
(லூக் 2:1 - 7)
18இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும்திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததுஅவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்ததுஅவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர்அவர் மரியாவைஇகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20அவர் இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பேதாவீதின் மகனேஉம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம்ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூயஆவியால்தான். 21அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார்அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர்ஏனெனில் அவர் தம்மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்என்றார்.22-23'இதோகன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப்பெற்றெடுப்பார்அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'
என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தனஇம்மானுவேல்என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்என்பது பொருள். 24யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்துஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். 25மரியா தம் மகனைப்பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லையோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்றுபெயரிட்டார்.

 இன்றைய மத்தேயு நற்செய்தியின் வாசகப் பிரிவு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளதுஒவ்வொன்றும்தவிர்க்கமுடியாத முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளனவவ 1-17 இயேசு ஆண்டவரின் பரம்பரைஅட்டவணையையும், 18-25 இயேசு ஆண்டவரின் பிறப்பு நிகழ்சியையும் விவரிக்கின்றன

மத்தேயு நற்செய்தியின் படி இயேசுவின் பரம்பரை அட்டவணை:
 இந்த பரம்பரை அட்டவணையின் தலைப்பு மத்தேயு நற்செய்தின் நோக்கத்தை அப்படியே தெளிவாகவாசகர்க்கு ஆரம்பத்திலேயே காட்டிவிடுகிறதுமத்தேயு தன்னுடைய நற்செய்தியின் வழியாக இயேசுதான்ஆபிரகாமிற்கு கடவுள் வாக்களித்த ஆசீர்வாதத்தின் நிறைவு எனவும்அவரின் வாயிலாகத்தான் அனைத்துஇனங்களும் கடவுளின் ஆசீரைப் பெறுகின்றன எனவும்அத்தோடு தாவீதின் உண்மையான வாரிசு இயேசுதான்என்பதையும் அழுத்தம் திருத்தமாக முன்மொழிகிறார்
 பரம்பரை அட்டவணை (Γενεαλογία கெனெயலொகியா) மத்தேயுவின் கண்டுபிடிப்பு கிடையாதுஏற்கனவேஇந்த பரம்பரை அட்டவணை இலக்கியம்புராதன மத்திய கிழக்கு நாடுகளின் (ANE) வரலாற்றில் அதிகமாகவேகாணப்படுகின்றதுமொசெப்பத்தோமியர்எகிப்தியர்கிரேக்கர் மற்றும் உரோமையர் என பலரும் இந்தஇலக்கிய வகையை தங்கள் தேவைக்கேற்றவாறும்நம்பிக்கைக்கு ஏற்றவாறும் உருவாக்கிபாவித்திருக்கின்றனர்
இஸ்ராயேலருக்கு இந்த பரம்பரை அட்டவணை நன்கு பரிசித்தியமானதொன்றாக இருந்திருக்கிறதுமுதல்ஏற்பாட்டில் ஏறக்குரைய 25 இப்படியான அட்டவணைகள் (תּוֹלֵדוֹת தொலெதொத்) காணக்கிட்க்கின்றனஒவ்வொன்றும் பலவிதமான தேவைகளுக்காக விசேடமாக எழுதப்பட்டனஅத்தோடு அவை எபிரேயஇலக்கியத்தின் முக்கியமான வடிவங்களில் ஒன்றுஇந்த பரம்பரை அட்டவணைகள் ஒருவருக்குஅடையாளத்தையும்உரிமையையும்முழு அந்தஸ்தையும் அவர் சமூக கட்டமைப்பிலே கொடுத்ததுமுதல்ஏற்பாட்டு பரம்பரை அட்டவணையில் சிலஏறு வரிசையிலும்சில இறங்கு வரிசையிலும் காணப்படுகிறதுமத்தேயுவின் பரம்பரை அட்டவணை இறங்கு வரிசை அட்டவணைமத்தேயுவைத் தவிர புதிய ஏற்பாட்டில்இன்னொரு பரம்பரை அட்டவணை இயேசுவின் மூதாதையரைப் பொறுத்தமட்டில் காணப்படுகிறது (ஒப்பிடுகலூக்கா 3,23-38)மத்தேயுவின் அட்டவணையைப் போலல்லாது லூக்காவின் அட்டவணை அமைப்பிலும்எண்ணிக்கையிலும் இறையியலிலும் மாறுபட்டதுலூக்கா 77 நபர்களின் பெயர்களை வரிசைப்படுத்திஅவற்றைஏறுவரிசையில் காட்டி இயேசுவை முதல் மனிதனான ஆதாமோடு
இணைக்கிறார்இவ்வாறு இயேசு இரண்டாவது ஆதாமாகவும்உண்மையான கடவுளின் மகனாகவும்அனைத்துபடைப்புக்களின் தலையாகவும்நிறைவாகவும்அத்தோடு ஆதாமின் மீட்பராகவும் காட்டப்படுகிறார். (விவிலியஆய்வாளர் றேமன் பிறவுன் தன்னுடைய படைப்பான 'மெசியாவின் பிறப்புஎன்ற நூலில் இந்த புதிய ஏற்பாட்டுபரம்பரை அட்டவணைகளை அழகாக விளக்கியுள்ளார்(காண்க BROWN, R. E., The birth of Messiah. A Commentary on the Infancy Narratives in the Gosples of Matthew and Luke (London 1993).). 



 மத்தேயுவின் பரம்பரை அட்டவணை சில முக்கியமான இறையியில் கூறுகளை தன்னுள்ளேகொண்டுள்ளதுஅவை:

மத்தேயு தன்னுடைய பரம்பரை 'அட்டவணை-இலக்கியவகையின் ஊடாக தொடக்க நூலைநினைவூட்டுகிறார்

மத்தேயு ஆபிரகாமை மையப்படுத்துவதன் ஊடாக இயேசுதான் ஆபிரகாமின் உண்மையான புதல்வர்என்பதை அறிவூட்டுகிறார் (Ἰησοῦ Χριστοῦ υἱοῦ Ἀβραάμ. இயேசூ கிறிஸ்டூ ஹுய்யூ ஆப்ராம்இயேசு ஆபிரகாமின்மகன்ஒவ்வொரு இஸ்ராயேல் மகனுக்கும்மகளுக்கும் ஆபிரகாம்தான் அடையாளம்ஆபிரகாமின்வழிமரபில்லாமல் இஸ்ராயேல் இல்லைஆக 
இயேசு இஸ்ராயேல் வழிமரபின் முக்கியமான தொடக்கமும் நிறைவும் என காட்டப்படுகிறார்

மத்தேயு நற்செய்தியில் வருகின்ற அடுத்த முக்கியமான நபர் தாவீதுபல அரசர்களை நினைவூட்டினாலும்மத்தேயு தாவீதை மட்டுமே அரசர் என அடைமொழியில் விழிக்கிறார் (τὸν Δαυὶδ τὸν βασιλέα. டொன் தாவித்டொன் பசிலெயாஆக தாவீது எவ்வளவு முக்கியமானவரோ அதனைவிட இயேசு மிக முக்கியமானவராகிறார்தாவீதுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதியின் நிறைவும்முழுமையும் இயேசுதான் என்பது மத்தேயுவின் அழகானஇறையியல்மற்ற அனைத்து அரசர்களும் அழிவையும் சாபத்தையும் நோக்கியவர்களாகவேபார்க்கப்படுகிறார்கள்

மத்தேயு இந்த பரம்பரை அட்டவணையை மூன்றாக பிரித்து முதல் பிரிவை ஆபிரகாம் தொடக்கம் தாவீதுஅரசர் வரையாகவும்இரண்டாவது பிரிவை தாவீது தொடக்கம் பபிலோனிய அடிமைத்தனம் வரையாகவும்மற்றும் மூன்றாவது பிரிவை பபிலோனிய அடிமைத்தனம் முதல் கிறிஸ்துவரையாகவும் பிரித்துள்ளார்இந்த மூன்றுஎன்ற இலக்கம் ஒரு முக்கியமான இறையியல் அடையாளம்அத்தோடு இந்த மூன்று பிரிவுகளும் பதிநான்கு (14) தலைமுறைகளை உள்ளடக்கியதாக காட்டுகிறார் (.17). அவை உண்மையாக பதிநான்காக இல்லாவிடினும்பதிநான்கு என்பதும் இன்னொரு முக்கியமான இறையியல் இலக்கம்தாவீதின் எபிரேய சொல்லின் எபிரேயஎண்ணிக்கையும் ஏழாக (7) வருகிறது (דּוד). இதுவும் அவதானமாக நோக்கப்படவேண்டும் ஏனெனில் ஏழுஎன்கின்ற இலக்கமும் நிறைவின் அடையாளமாகும்

மத்தேயு மிக விசேடமாக ஐந்து பெண்களை உள்ளடக்கியிருக்கிறார்அவர்கள்தாமார் (Θαμάρ தாமார்),இராகாபு (Ῥαχάβ ராகாப்)ரூத்து (Ῥούθ ரூத்)உரியாவின் மனைவி பெத்சேபா (τῆς τοῦ Οὐρίου டேஸ் டூ ஊரியூ),மற்றும் மரியா (Μαριάμ மாரியாம்)இவர்கள் தங்கள் விசேடமான வரலாற்றால் நம் பார்வையை ஈர்க்கிறார்கள்
 தாமார் யூதாவின் மருமகள்இவருடைய கணவனும்யூதாவின் மூத்த மகனுமான ஏர் (עֵר), கடவுள்பார்வையில் தீயவனாக இருந்ததால் அழிந்துபோனான்வாரிசில்லாத ஏருக்காக அவன் தம்பி ஓனானை யூதாதாமாருக்கு கணவனாக கொடுத்தார்ஓனான் செய்த அசிங்கமான காரியம் அவனையும் அழித்ததுஇரண்டுமகன்களையும் இழந்த யூதா தன் இளைய மகன் சேலாவை தாமாருக்கு கொடுக்க தயங்கினார்சட்டப்படிஇறந்த சகோதரர்களுக்கு வாரிசு இல்லாவிடின்உயிரோடிருக்கும் சகோதரர்கள் இறந்த சகோதரரின்மனைவியை மணந்து வாரிசு உண்டாக்க வேண்டும் என்பது இவர்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாகஇருந்ததுஇருப்பினும் யூதா பயத்தினால் சேலாவை தாமாருக்கு மணமுடிக்கவில்லைதாமார் இறந்த தன் மூத்தகணவனுக்கும் தன் மாமாவின் வீட்டிற்கும் வாரிசு உண்டாக்குவது ஒரு நல்ல மருமகளின் கடமை என உணர்ந்துஒரு விலைமாது போல் நடித்துதன் மாமாவுடன் (யூதாஉறவுகொண்டு வாரிசு உருவாக்கினார்
இதனைக் கண்ட யூதா தன் தவறை உணர்ந்துதாமாரை உண்மையான பெண்மணியாக ஏற்றார். (காண்கதொ.நூல் 38), (மத் 1,3). 
 இராகாபு எரிக்கோவின் விலைமகளாக அறிமுகமாகிறார்யோசுவாவின் உளவாளிகள் எரிக்கோவையும்முழு கானானையும் உளவு பார்த்தபோதுஇராகாபு இஸ்ராயேலின் கடவுளின் வல்லமையை அறிந்தவராய்உளவாளிகளுக்கு தன் வீட்டில் ;டம் கொடுத்தார்இதற்கு மரியாதை செய்யும் விதமாக எரிகோவை கடவுள்அழித்த போது இவருடைய வீடு மட்டும் தப்பித்துக் கொள்கிறதுயோசுவாவும் இவர் வீட்டாருக்கு வாழ்வாதாரம்கொடுக்கிறார்(காண்க யோசுவா 2,15-18. மற்றும் 6)முதல் ஏற்பாட்டில் நம்பிக்கைக்கு ஒரு நல்ல உதாரணமாகஇராகாபு திகழ்கிறார்மத்தேயு இராகாபை போவாசின் தாயாக அட்டவணையிடுகிறார் (காண்க மத் 1,5).
 ரூத்து போவாசின் மனைவியும் நாவோமியின் அன்பு மருமகளுமாவார்ரூத்து புத்தகம் காலத்தால் அழியாதமனிதநேயத்தின் தெய்வீக காவியம்மாமி மருமகளுக்கான உறவிற்கு தெய்வீக சாயல் கொடுத்தவர் ரூத்துஇவர்மோவாபிய பெண்மணிநாவோமியின் மூத்த மகனுக்கு மனைவியாக மோவாபிலே தெரிவுசெய்யப்படுகிறார்மோவாபிலே நாவோமியின் கணவரும்இரண்டு மகன்களும் இறந்து போகவே நாவோமி தன் தாயகம் (யூதேயாநோக்கி பயணமாகிறார்அப்போது தன் வயது முதிர்ந்த மாமியாரை தன்தாயைப் போலவே நோக்கி அவருடையநாட்டிற்கு வந்து அவர் கடவுளுளையும்நாட்டையும்மக்களையும் தன்னுடையதாக்குகிறார் ரூத்போவாஸ்என்ற வயது முதிர்ந்த மனிதரை திருமண முடிக்கவும் இதன் மூலம் தன் மாமியாருக்கும்இறந்த கணவருக்கும்வாரிசு தேட இவர் செய்யும் நியாயமான முயற்சிகள் மிகவும் இனிமையானவை மற்றும் ஆழமானவைபொறுப்புணர்ச்சிக்கும்அன்பிற்கும்பிரமாணிக்கத்திற்கும் ரூத்தை மிஞ்ச முதல் ஏற்பாட்டில் யாருமில்லை(காண்க ரூத்து 1,16-18. 4,18-22). மத்தேயு தன் பரம்பரை அட்டவணையில் ரூத்தை தாவீதின்பேத்தியாக்குகிறார்; (பாட்டி) (காண்க மத் 1,5).   
 பெத்செபா இவர் உரியாவின் மனைவிஇவருடைய கணவர் தாவீதின் படையில் முக்கியமான தகுதிவாய்ந்தவீரராக இருந்தவர்இவர்கள் இத்திய இனத்தை சார்ந்தவர்கள்இத்தியா பலாஸ்தீனாவிற்கு வடக்கே இருந்தமிக முக்கியமான பேரரசுமுற்காலத்தில் எகிப்திற்கு சவாலான ஒரு எதிரிப் பேரரசுஇன்றைய துருக்கியின்தென் கிழக்கு பிராந்தியம்இந்த இடத்தின் பல வீரர்கள் மற்றைய நாட்டில் வாடகைக்கு போர்வீரர்களாய்இருந்தனர்உரியாவும் இப்படியான வரலாற்றை கொண்டவராக இருக்கலாம்முக்கியமான ஒரு போரிலேஉரியாதாவீதிற்காக போர்செய்த வேளையில்தாவீது நயவஞ்சகமாக அவர் மனைவியைதன்னுடையவளாக்கினார்இந்த குற்றத்தை மறைக்க உரியாவையும் அன்நியர் கையாலே சாவடித்தார்இதற்குதகுந்த தண்டனையையும் அவர் பெற்றார்இந்த பெத்சேபாதான் சாலமோன் மன்னனின் தாயாரும்தாவீதின்முக்கியமான அரசியல் பொறுப்பாளியுமாவார்நல்லதொரு தாயாக இவர் காட்டப்பட்டாலும்ஆண் ஆதிக்கசமூதாயத்திலே பெண்களின் பலவீனத்திற்கான நல்லதொரு அடையாளம் இவர்அந்த நாள் சமுதாயம்எப்படியெல்லாம் பெண்களை துஷ்பிரயோகம் செய்தது என்பதற்கு இவர் ஒரு வாழும் அடையாளம் (காண்க2சாமு 11,1-12,25)மத்தேயு இவரையும் இயேசுவின் மூதாதையரின் அட்டவணையில் பிழையின்றிஉள்வாங்குகிறார் (காண்க மத் 1,6)
 மரியாநான்கு நற்செய்திகளிலும் இயேசுவிற்கு அடுத்த படியாக மிக முக்கியமான கதாபாத்திரம்இவர்நாசரேத்தூர்சாதாரண யூத குலப் பெண்லூக்கா இவரை தாவீதின் வழிமரபு என்கிறார்மத்தேயுவிற்கு இவர்யோசேப்பின் வாயிலாக தாவீதின் வழிமரபுயோசேப்பிற்கு மண ஒப்பந்தமாகியிருக்கையில் தூய ஆவியால் இவர்இயேசு ஆண்டவரை கருத்தரிக்கிறார்உலகில் தோன்றிய பெண்களில் இவர்தான் உன்னதமான பெண்ணாகதிருச்சபை இவரை மரியாதை செய்கிறதுஇயேசுவின் பிறப்பும்இவருக்கு வானதூதர்கள்இடையர்கள்அயலவர்கள்மற்றும் நண்பர்கள் சொன்ன வாழ்த்துக்களும்இவரை கடவுளின் அருளைக் கண்டடைந்த ஒரேஉத்தமதூய பெண்ணாக அடையாளம் காட்டுகிறது (லூக்கா 1,28)
 மத்தேயு இந்த வீரப் பெண்மணிகளை உள்வாங்கியதன் வாயிலாக இயேசு ஒரு சாதாரண தலைவர் அல்லஎனவும்இஸ்ராயேலின் கடவுள்ஆண்ணாதிக்க கடவுள் இல்லை எனவும் ஆழமாகச் சொல்கிறார்கடவுள்அனைத்து வரையறைகளையும் கடந்தவர்மனித சிந்தனைக்கு கட்டுப்பட்டவர் அல்லர்அத்தோடு மனிதகுலத்தின் தொடர்ச்சி பெண்களின்றி கிடையாது என்பதையும் அழகாக காட்டுகிறார்(குணமாக்க முடியாதஆண்நோய் பிடித்தவர்களுக்கு இது புரிந்தால் சரிஈழத்தின் வரலாறு பெண்களை மறக்க முடியாததுஇதனைமுதலில் பெண்கள் உணர வேண்டும்). 


. 18: இயேசுவின் பிறப்பு மறைபொருளை ஒரே வரியில் அறிமுகப்படுத்துகிறார் மத்தேயுஇப்படித்தான்இயேசுவின் பிறப்பு நிகழ்ந்தது என்று கூறி பிழையான வதந்திகளை நிறுத்தவோஅல்லது இயேசுவின் பிறப்புநிகழ்ச்சிகளை அறியாதவர்களுக்கு அதனை அறிவிப்பதையோ மத்தேயு நோக்கமாகக் கொண்டிருக்கலாம்இயேசு மரியாவையும் யோசேப்பையும் இரண்;டாம் தடவையாக அறிக்கையிடுகிறார்மரியா யோசேப்பிற்கு மணஒப்பந்தமானவர் என்று மத்தேயு கூறுவதன் வாயிலாக இவர்கள் இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள்என்பதை காட்டுகிறார்மண ஒப்பந்தம் (μνηστεύω ம்னேஸ்டெயுஓஎன்பது கிட்டத்தட்ட தமிழ் திருமணநிச்சயதார்த்தத்தைக் குறிக்கும்இது திருமணத்திற்கு முன் செய்யப்படுகின்ற ஒரு சடங்குஇதன் பின்னர்மணமகள் தன் பெற்றோரின் வீட்டில் இருந்தாலும் அவர் மண ஒப்பந்தம் செய்யப்பட்டவரின் பெண்ணாகவேகருதப்படுவார்இந்த வேளையில் இவர் வேறு ஆணுடன் உறவு வைத்தால்அதுவும் திருமணத்திற்கு எதிரானபாவமாகவே கருதப்படும்
 மரியா திருமணமாவதற்கு முன் கருவுற்றிருந்ததாகவும் அதற்கான காரணம் தூய ஆவியார் என்பதையும்வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்திருமணம் என்பது கிரேக்க விவிலியத்தில் கூடிவருதல் (συνέρχομαι சூனெர்கொமாய்) என்பதைக் குறிக்கிறதுலூக்கா நற்செய்தி வாசகர்களுக்கு இந்த தூய ஆவியாரின்செயற்பாடுகள் நன்கு தெரிந்திருக்கும்அந்த நற்செய்தியில் இந்த பகுதி இன்னும் தெளிவாகசொல்லப்பட்டிருக்கிறதுஒருவேளை இந்த பகுதிகளை தன் வாசகர்கள் நன்கு அறிந்திருந்த காரணத்தால்மத்தேயு அதனை சுருக்கமாகச் சொல்கிறார் போல

.19: மத்தேயு யோசேப்பிற்கு கொடுக்கும் வரைவிலக்கணம்: Ἰωσὴφ δὲ ὁ ἀνὴρ αὐτῆς, δίκαιος (யோசேப் தெஹொ ஆனெர் அவுடேஸ்திகாய்யோஸ்) யோசேப்பு அவர் ஒரு நேர்மையான மனிதர். மத்தேயு ஒரு யூதகிறிஸ்தவர் என்றால் அவருக்கு நேர்மையாளருக்கான வரைவிலக்கனம் நன்கு தெரியும்கடவுளின் சட்டங்ளைகடைப்பிடிப்பவர்தான் முதல் ஏற்பாட்டில் நேர்மையாளராக கருதப்படுவார்விவிலியத்தில் முதலில் நோவா ஒருநீதிமானாக அறிமுகப்படுத்தப்படுகிறார் (காண்க தொ.நூல் 6,9). வெளிப்பார்வையில் கடவுளின் சட்டத்தைமீறுகிறவர் போல காணப்படுகிற யோசேப்பு நீதிமானாக கருதப்படுபதுமத்தேயுவின் சட்டம் பற்றியஉண்மையான அறிவைக் காட்டுகிறது(✻✻ஒப்பிடுக வி.. 20,14). யோசேப்பு மனித பார்வையில் சட்டத்தைவார்த்தைக்கு மட்டும் கடைப்பிடிப்பவரானால்அவர் மரியாவிற்கு தண்டனை தர முயற்சி எடுத்திருப்பார்(✻✻✻லேவி 20,10). அவருக்கு மரியாவின் கர்ப்பத்திற்கான காரணம் தெரியாதிருந்தும்தண்டனை தரமுயற்சிக்காமல்இன்னொரு படி மேலே சென்று ஒரு பெண்ணை இகழ்ச்சிக்கு உட்படுத்த விரும்பாதவாரகஇருக்கிறார்இவர் ஒரு உண்மையான யூதன்இந்த ஒரு வரிமட்டுமே போதும் அவர் இயேசுவின் வளனாரகாவும்நீதிமானாகவும் இருக்கஅவர்அதேவேளை மரியா பாவியாக 
இருந்தால் அவருடன் வாழவும் விரும்பவில்லைஇது அவருக்கு நீதியானதேஎனவே மரியாவை மறைவாகவிலக்கிவிட தீர்மானிக்கிறார்இதற்கான வழிமுறைகள் மோசேயின் சட்டங்களில் இருந்தன

(நோவானின் வழி மரபினர் இவர்களேதம் காலத்தவருள் நோவா நேர்மையானவராகவும்குற்றமற்றவராகவும்இருந்தார்நோவா கடவுளோடு நடந்தார்).
(✻✻விபசாரம் செய்யாதே).
(✻✻✻அடுத்திருப்பவன் மனைவியோடு உடலுறவு கொள்பவனும் அந்தப் பெண்ணும் கொலை செய்யப்படவேண்டும்.)

.20: யோசேப்பின் எல்லா கேள்விகளுக்கும் பதில் கடவுளின் தூதர் மூலம் வருகிறதுமரியாவின் கருவிற்குகாரணம் தூய ஆவியார் என்பது அறிவுறுத்தப்படுகிறதுகடவுளின் தூதருக்கு மத்தேயு பெயர் கொடுக்கவில்லைஅத்தோடு யோசேப்பின் கலக்கம் நியாயமான கலக்கமே என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறதுமத்தேயு இரண்டுமுறை (.18 மற்றும் .20) தூய ஆவியாரை மையப்படுத்துவதன் மூலம் (πνεύματος ἁγίου புனூமாடொஸ் ஹகியூ)இயேசுவின் பிறப்புதூய ஆவியாரின் செயலால்தான் நடைபெறுகிறது என்பதை ஆழப்படுத்த முயல்கிறார்,

.21: மரியாவிடம் பிறக்கப்போகிறவரைப் பற்றியும் யோசேப்பிற்கு சுருக்கமாக சொல்லப்படுகிறதுமரியாவிற்குபிறக்கப்போகிறவர் ஒரு மகன்அவருக்கு இயேசு என்று பெயரிடுமாறு யோசேப்பிற்கு சொல்லப்படுகிறதுலூக்காநற்செய்தியில் இந்த கட்டளை மரியாவிற்கு கொடுக்கப்பட்டது (காண்க லூக் 1,31). பெயரைப் பொறுத்தமட்டில் இரண்டு நற்செய்தியாளர்களும் ஒருமித்து இருக்கிறார்கள்இயேசு என்னும் பெயருக்கும் அர்த்தம்கொடுக்கப்படுகிறதுஇயேசு என்றால் தம் மக்களை பாவங்களிலிருந்து மீட்கிறவர்என்கிறார் வானதூதர்

இயேசு (Ἰησοῦς ஏசூஸ்): இந்த உலக வரலாற்றையே புரட்டிப்போட்ட பெயர்இவருடைய பிறப்பாலேஉலகத்தின் காலங்கள் முன்பின் என பிரிக்கப்பட்டனமத்தேயுவிற்கு இவர் மீட்பரும் மெசியாவும்லூக்காவிற்குஇவர் பிரபஞ்சத்தின் கடவுள்மாற்குவிற்கு இவர் இறைமகன்யோவானுக்கு இவர்தான் முதல் ஏற்பாட்டின்கடவுளாகிய ஆண்டவர்இயேசு என்ற பெயரை ஒவ்வொரு நற்செய்தியாளர்களும் அப்படியே பாவிக்கின்றனர்இயேசு என்பதற்கு 'கடவுள் மீட்கிறார்என்று பொருள்கடவுள் இவருக்கு உதவியாக இருக்கிறார் என்றபொருளும்இயேசு என்ற பெயருக்கு உண்டுஇந்த பெயரின் எபிரேய வடிவம் יְשׁוּעָה யெஷு'ஆஹ் என்று வரும்இதன் அரமயிக்க வடிவம் יֵשׁוּעַ (யேஷுவா') என்று வரும்ஆனால் அர்த்தம் அனைத்து மொழியிலும் ஒன்றாகவே 
இருக்கிறது

(இதோகருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்.)

வவ.22-23: மத்தேயு இங்கே எசாயாவின் இறைவாக்கை கோடிடுகிறார் ஆனால் மத்தேயுவின் வார்த்தைகள்செப்துவாஜின்து விவிலியத்தையே ஒத்திருக்கிறது.

மத்தேயு: ἰδοὺ ἡ παρθένος ἐν γαστρὶ ἕξει καὶ τέξεται υἱόν καὶ  καλέσουσιν τὸ ὄνομα αὐτοῦ Ἐμμανουήλ,(பார்தெனொஸ் கன்னி)
செப்துவாஜின்து: ἡ παρθένος ἐν γαστρὶ ἕξει καὶ τέξεται υἱόν καὶ καλέσεις τὸ ὄνομα αὐτοῦ Εμμανουηλ· . (பார்தெனொஸ் கன்னி)
הִנֵּ֣ה הָעַלְמָ֗ה הָרָה֙ וְיֹלֶ֣דֶת בֵּ֔ן וְקָרָ֥את שְׁמ֖וֹ עִמָּ֥נוּ אֵֽל׃  
எபிரேய விவிலியம் (ஹா'அல்மாஹ்- இளம்பெண்
மத்தேயுவிற்கு இது இறைவாக்கின் நிறைவுஅவர் கன்னியின் மகன்அவர் இம்மானுவேலன் அதாவது அவர்'கடவுள் நம்மோடு'. 

. 24: இந்த வரியின் மூலம் யோசேப்பு கனவில்தான் காட்சி காண்கிறார் என்பது புலப்படுகிறதுலூக்காவில்மரியா உண்மையாகவே வானதூதரைக் காண்கிறார்அக்காலத்தில் கனவு ஒரு முக்கியமான கடவுளின்வெளிப்படுத்தல் ஊடகமாகக் கருதப்பட்டது (ὕπνος ஹஉப்னொஸ் கனவு).

.25: இந்த வரியை பலர் தங்களுக்கு தேவையான முறையில் திரித்துக் கூறுகின்றனர்ஆனால் இதன் கிரேக்கபாடம்இயேசுவையே மையப்படுத்துகிறதுஅதாவது யோசேப்பிற்கு 
இயேசுவின் கருத்தரிப்பில் தொடர்பில்லை என்பதே இங்கே எழுவாய்ப் பொருள்மரியாவுடன் யோசேப்புதொடர்பு வைத்திருந்தால் பிறந்தவர் யோசேப்பின சொந்த மகனாகவே கருதப்பட்டிருப்பார்அத்தோடுஅவர்கடவுளின் மகன் எனக்காட்டவேமத்தேயு மரியா யோசேப்பின் உறவை மையப்படுத்துகிறார்இதனை விடுத்துசொந்த தர்க்கத்திற்காக மரியாவையும்யோசேப்பையும் வாத-விதாதத்திற்கு எடுப்பது நியாயமாகாது
  

இயேசுவின் பிறப்பு முழு மனித குலத்துக்குமான முழுமையான ஒரு நற்செய்தி,
இன்று இயேசுவின் பிறப்பை கொண்டாடுகிறவர்களுள் அதிகமானவர்களுக்கு எதிராகத்ததான் 
அன்று இயேசுவின் சிந்தனைகளும் செய்தியும் அமைந்தது
இயேசு அரசியல்சமயசமூக முதலைகளுக்குத்தான் சாட்டையடித்தார்.
இன்று வாணிப கூடங்களும்மதுக் கடைகளும்கொள்ளையரின் குகைகளுமே
விமரிசையாக கிறிஸ்து பிறப்பை கொண்டாடுகின்றன
இவர்களுக்கு கிறிஸ்து பிறப்பு ஒரு களியாட்டம்
ஆனால் இயேசுவின் அன்பு மக்களான
பெண்கள்சிறுவர்ஏழையர்கைவிடப்பட்டோர்உதவியற்றோர்பலவீனமானவர்,
நல்மனத்தோருக்கு இவ்வருட கிறிஸ்து பிறப்பும் சவாலகவே இருக்கிறது.

அன்பு ஆண்டவரே உம்முடைய பிறப்பு ஒரு நினைவுமட்டுமே,
ஏனெனில் நீவீர் ஏற்கனவே பிறந்து எம்மில் வாழ்கிறீர் 
என்பதை உணரப்பண்ணும்
இந்த நத்தார் எமக்கு அருள் வழங்க பிறந்துவாரும்ஆமென்.


அனைவருக்கும் இனிய இயேசு பிறந்த நாள் வாழ்த்துக்கள்


(துன்புறும் குழந்தைகளுக்கு சமர்ப்பணம்). 










கிறிஸ்து பிறப்பு காலைத் திருப்பலி (,,)



முதல் வாசகம்எசாயா 62,11-12
பதிலுரைப் பாடல்திருப்பாடல் 96
இரண்டாம் வாசகம்தீத்து 3,4-7
நற்செய்திலூக்கா 2,15-20


எசாயா 62,11-12

11உலகின் கடைக்கோடி வரை ஆண்டவர் பறைசாற்றியது: 'மகள் சீயோனிடம் சொல்லுங்கள்
இதோஉன் மீட்பு வருகின்றதுஅவரது வெற்றிப்பரிசு அவருடன் உள்ளது அவரது செயலின் பயன் அவர் முன்னேஉள்ளது.' 12'புனித மக்களினம்என்றும் 'ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்என்றும் அவர்கள்அழைக்கப்படுவார்கள்நீயோ, 'தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்என்றும் இனி 'கைவிடப்படாத நகர்என்றும்பெயர் பெறுவாய்.

 எசாயாவின் 62வது அதிகாரம்மிகவும் அழகிய பாடல் போல் அமைக்கப்பட்டுள்ளதுஇந்த அதிகாரம் முழுவதும்நம்பிக்கை வசனங்களால் நிறைந்துள்ளதுஅதேவேளை மூன்றாம் எசாயாவின் இறையியல் சிந்தனைகளைஇப்பகுதி தாங்கி வருகிறதுஎவ்வாறு முழு உலகும் எருசலேமின் வீழ்ச்சியைக் கண்டதோஅதே போலஅவளுடைய மீட்பையும் காணும் என்பது மையக்கருத்து

.11: ஆண்டவர் எருசலேமை 'மகள் எருசலேம்என்று அழைக்கும் படி எசாயா வாhத்தைகளை பாவிக்கிறார்(בַת־צִיּוֹן பாத்-ட்சியோன் மகள் சீயோன்). அத்தோடு ஆண்டவருடைய இறைவாக்கு உலகின் கடைக்கோடிக்கும்அறிவிக்கப்படுகிறதுஅதாவது ஆண்டவருடைய வாக்கிற்கு எந்த நாடும் அல்லது மக்களினமும் வெளியில்இல்லை என்பது சொல்லப்படுகிறதுமகள் சீயோனுக்கு சொல்லப்படும் முதலாவது நற்செய்திஷஉன் மீட்புவருகிறது(יִשְׁעֵךְ בָּא யிஷ்எஹ் பா), 
இந்த சொல்லுக்கும் இயேசு என்கிற சொல்லுக்கும் வேர்ச் சொல்லில்தொடர்பிருக்கிறது.    கைவிடப்பட்டவர்கள் என அறியப்பட்ட மக்கள் இனி தூயவர்கள் என அறியப்படுவார்கள்ஒரு மக்கள் போரில் தோற்றால் அவர்கள் தெய்வமும் தோற்றதற்கு சமம்கடையெல்லைவரைஎன்று சொல்லிஆசிரியர் பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறார்இஸ்ராயேல் வீழ்த்தப்பட்டபோது அனைவரும்அதனைக்கண்டார்கள் ஆகவே மீட்பு வருகின்ற வேளையிலும் அனைவரும் அதனை அறியவேண்டியவர்களாகஇருக்கிறார்கள்
 ஆண்டவரின் வெற்றிப்பரிசு (שָׂכָר சாகார்) என்பது இங்கே போர் வெற்றிப்பொருட்களைக் குறிக்கிறதுஇதுஅடிமைத்தனத்திலிருந்து மீண்டு வருதலைக் குறிக்கலாம்அடிமைகளாக 
இருக்கிறவர்கள் என்ன ஊதியத்யைப் பெற்றாலும் அது விடுதலை என்ற உன்னதமான பரிசுக்கு நிகராகமுடியாதுஅதேபோல 'கைமாறுஎன்ற சொல்லும் (פְּעֻלָּה  பெ'யூலாஹ் செயலின் பயன்) இங்கேபயன்படுத்தப்படுகிறதுஇவற்க்கு மேலாக சீயோனுக்கு மீட்பு (יָשַׁע யாஷ') என்ற செய்தி வருகிறதுஇதற்கு ஒத்தகருத்தாகத்தான் மற்ற சொற்பதங்கள் பாவிக்கப்படுகின்றன.

.12: இஸ்ராயேல் தூய மக்களினமாக மாற்றம் பெருகிறது (עַם־הַקֹּדֶשׁ  'அம் ஹகோதெஷ் புனித மக்களினம்).  அத்தோடு அவர்கள் ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள் என்ற பெயரையும் பெறுகிறார்கள் (גְּאוּלֵי יְהוָה கெ'ஊலெ அதேனாய் - ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள்)
 இங்கே இனி இஸ்ராயேல் மக்களும் அவர்கள் கடவுளும் தோற்றவர்கள் அல்ல என எசாயா நம்பிக்கைகொடுக்கிறார்அழிக்கப்பட்ட எருசலேமிற்கு புதுப்பெயர் கொடுக்கப்படுகிறதுஷதேடப்படுகிற நகர் (דְרוּשָׁ֔ה עִירதெரூஷாஹ் 'இர் - பிரசித்திபெற்ற), கைவிடப்பட்ட நகர் அல்ல(לֹא נֶעֱזָבָה׃ லோநெ'எட்ஸாவாஹ் - கைவிடப்பட்டவள் அல்ல). 

தீத்து 3,4-7
4நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, 5நாம் செய்த அறச்செயல்களைமுன்னிட்டு அல்லமாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டுபுதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூயஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். 6அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியைநம்மீது நிறைவாகப் பொழிந்தார்.7நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகிநாம் எதிர்நோக்கிஇருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்

 திருத்தூதர் பவுலுடைய மேய்புப்பணி மடல்களில் ஒன்றான தீத்துவிற்கான திருமுகம்செய்தியிலும்இறையியலிலும் திமோத்தேயுவிற்கான மடல்களை ஒத்திருக்கிறது

ஷநம் மீட்பராம் கடவுள்(σωτῆρος ἡμῶν θεοῦ சோடேரோஸ் ஹேமோன் தேயூ) என்பது 
இயேசுவுக்கு ஆரம்ப காலத்திலே வழங்கப்பட்ட சிறப்பு பெயர் சொற்கள்இங்கே பவுல் இயேசுவை முதல்ஏற்பாட்டு கடவுளாக காண்கிறார்இயேசுவை கடவுளாக கண்டது திருச்சபை தந்தையர்களின் கண்டுபிடிப்புஎன்ற பிற்கால பேதகத்திற்கு இந்த சொற்பதம் நல்லதொரு விசுவாசச் சான்று

ஷநன்மையும் மனித நேயமும்(ἡ χρηστότης καὶ ἡ φιλανθρωπία ஹே கிரேஸ்டொடேஸ் காய் ஹேபிலான்த்ரோபியாஇவை பவுல் மேய்புப்பணி நூல்களிலே அதிகமாக பயண்படுத்தும் சொற்றொடர்இதுநன்மையையும்பரிவையும் பிரிக்க முடியாது எனக் காட்டுகிறது

கடவுளிடம் இருந்து பெறும் எந்தக் கொடைக்கும் மனிதர் உரிமை கோர முடியாதுஅது கடவுளின்இரக்கத்தினால் மட்டுமே பெறப்படுகிறது என்கிறார் பவுல்தீத்துவை (ஆயர்களைஅதனைச் செய்யச்சொல்கிறார்கடவுள் மனித குலத்தை மீட்டது தூய ஆவியால் என்பதன் மூலம்கிறிஸ்தவர்கள் பாரபட்சத்தைக்கண்டு அஞ்ச வேண்டியதில்லை என்கிறார்

 பவுல் தன்னுடைய இறுதி காலம் நெருங்கியதை உணர்ந்தவராகஇனி வரும் காலங்களில் திருச்சபையைவழிநடத்துகிற ஆயர்கள் எவ்வாறு அக்கால சவால்களை சந்திக்க வேண்டும் என்று இம்மடல்களை எழுதியதாகபாரம்பரியம் கருதுகிறதுஇம்மடல்களை வாசிக்கும் போதுஅக்கால பிரச்சனைகளும்அக்கால கிறிஸ்தவநம்பிக்கையும் நமக்கு புரியும்கிறிஸ்தவம் பாலஸ்தீனத்தில் இருந்து விடுபட்டு முழு உலகை அடைவதனை இங்குகாணலாம்.

லூக்கா 2,15-20
15வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்புஇடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, 'வாருங்கள்நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்என்றுசொல்லிக்கொண்டு, 16விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்தகுழந்தையையும் கண்டார்கள். 17பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத்தெரிவித்தார்கள். 18அதைக் கேட்ட யாவரும்இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்துவியப்படைந்தனர். 19ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். 20இடையர்கள் தாங்கள் கேட்டவைகண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப்போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள்அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம்நிகழ்ந்திருந்தது. 21குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்ததுதாயின் வயிற்றில்உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

  லூக்கா அவதானமாக இயேசுவின் பிறப்பை அறிவிப்பதைக் காணலாம்மத்தேயு இயேசுவை புதியமோசேயாகவும்மெசியாவாகவும் காட்டுகிற அதேவேளைலூக்கா இயேசுவை கைவிடப்பட்டவர்களின் அல்லதுஅனைத்தின மக்களின் கடவுளாகக் காட்டுவார்லூக்காவின் கடவுள் அனைவரினதும் கடவுள்இயேசுவின்பிறப்பையும் திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் லூக்கா ஒப்பிடுகிற விதத்தை கவனித்தால்இயேசுவை அவர்எப்படிப்பட்ட கடவுளாக அல்லது யாருடைய கடவுளாக காட்டுகிறார் என்பது புரியும்லூக்கா சின்கிறேசிஸ்(Syncresisஎன்ற ஒரு கிரேக்க இல்க்கிய வகையை இங்கே பாவிக்கிறார்அதாவது லூக்கா யோவானையும் 
இயேசுவையும் ஒப்பிடுகிறார்இறுதியாக இயேசுவின் பக்கத்திலுள்ள உயர்வுகளையும் விசேட தன்மைகளையும்காரணம் காட்டி அவர்தான் மெசியா என்கிறார்லூக்கா நற்செய்தியின் இரண்டாம் அதிகாரம்இயேசுவின்பிறப்புஇடையர்களும் வானதூதர்களும்இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல்நாசரேத்திற்கு திரும்பிச்செல்லுதல்மற்றும் கோவிலில் சிறுவன் இயேசு என்ற விதத்தில் இயேசுவின் முழு குழந்தைப் பருவமும்உள்ளடக்கப்பட்டுள்ளதுஇன்றைய பகுதியிலே,

வானதூதர்கள்.| (ἄγγελος ஆன்கலோஸ்) இயேசுவின் பிறப்பு வானதூதர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகக்காட்டுகிறார்மத்தேயு நற்செய்தியில் வான்வெள்ளியும்கீழைத்தேய ஞானிகளும் இயேசுவை அடையாளம்காட்டலூக்கா வானதூதர்களின் மகிழ்ச்சியை பதிவு செய்கிறார்வானதூதர்கள் முதல் ஏற்பாட்டில் பலவேளைகளில் கடவுளின் தூதர்களாகவும் (מַלְאָךְ மல்'ஆக்)சில அதிவிசேடமான இடங்களின் கடவுளின்பிரசன்னத்தையும் காட்டுகிறவர்களாகவும் வருகிறார்கள்புதிய ஏற்பாட்டு காலத்தில் வானதூதர்கள் பற்றியஅறிவு நன்கு வளர்ந்திருந்தது
இதற்கு கிரேக்க இலக்கியங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதுநற்செய்தியில் வருகின்ற வானதூதர்கள்கடவுளின் செய்தியை கொண்டுவருகின்ற முக்கியமான செய்தியாளர்களாக 
இருக்கிறார்கள்.

இடையர்களின் பெத்லகேம் வருகை(ποιμένες  பொய்மெனஸ் இடையர்கள்) இடையர்கள் பற்றி இயேசுபிறந்த காலத்தில் நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லைஅவர்கள் திருடுபவர்களாகவும் மற்றவர்களின் மேய்ச்சல்நிலத்துள் பிரவேசிப்பவர்களாகவும் கணக்கெடுக்கப்பட்டனர்சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்தவர்கள்உடலிலும் உடையிலும் அழுக்காக இருந்தார்கள்அந்த சமூதாயம் அவர்களை உள்ளத்திலும் அழுக்கானவர்கள்எனக் கண்டதுஇவர்களை அதிகமான அக்கால மக்கள் திருடர்களாகவே கண்டார்கள் (பிழையாக). 
 ஆனால் விவிலியத்தின் கண்ணோட்டம் இவ்வாறு இல்லைகடவுள் தன்னை இஸ்ராயேலின் ஆயனாகவேகாட்டினார்தலைவர்களையும் அவரைப்போலவே நல்ல ஆயராகவே இருக்கச் சொல்கிறார்இயேசுவும் தன்னைநல்ல ஆயன் என பல வேளைகளில் வெளிப்படுத்தினார் (காண்க யோவான் 10,1). புதிய ஏற்பாட்டில் இயேசுவின்மிக முக்கியமான வசனம் இதுபேதுருவையும் அவர் உடன்பணியாளர்களையும்ஆயர்களாகவேஇருக்கச்சொல்கிறார்லூக்கா இங்கு இரண்டு வாதங்களை முன்வைக்கிறார்ஒன்றுநல்ல ஆயரின் பிறப்புஏழை ஆயர்களுக்கு அறிவிக்கப்படுகிறதுஇரண்டுதாவீதின் ஊரிலேதான் இயேசு பிறந்தார் என்பதையும்லூக்கா அறிவிக்கிறார்.

( Ἐγώ εἰμι ὁ ποιμὴν ὁ καλός எகோ எய்மி ஹொ பொய்மேன் ஹொ காலோஸ்நானே நல்ல ஆயன்

இடையர்களின் விரைந்து செல்லுதலையும் அவர்களின் கண்டடைதலையும் லூக்கா விவரிக்கும் விதம்சிந்திக்க வைக்கிறதுஏழைகளாகவும் சாதாரணமானவர்களாகவும் இருந்தாலும் ஆண்டவரின் இரக்கம்அவர்களை திருக்குடும்பத்தையே காணவைக்கிறதுஅத்தோடு அவர்களின் விரைவு ஒர் ஆவலைக் காட்டுகிறதுசோம்பல்தான் பல தோல்விகளுக்கு காரணம் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்

பின்பு குழந்தையைப்பற்றி அறிக்கையிட்டார்கள்யாருக்கு சொன்னார்கள்மரியாவுக்கும் யோசேப்புக்கும்என்று நினைக்கிறேன்யோசேப்பு வழக்கம் போல அமைதியாய் இருக்கிறார்மற்றவர்கள் அனைவரும்வியப்படைந்தனர்இந்த மற்ற அனைவரும் யார்(πάντες οἱ ἀκούσαντες பான்டெஸ் ஹொய் அகூசான்டெஸ்கேட்ட அனைவரும்) இது இஸ்ராயேல் மக்களையோ அல்லது அனைத்து மக்களையோ குறிக்கலாம்வியப்படைதல் விவிலியத்திலே மிகவும் முக்கியமான செயல்(θαυμάζω தௌமாட்சோ: வியப்படைஆச்சரியப்படுமகிழ்பயங்கொள்மரியாதைகொள்வணங்குஆண்டவரின் வெளிப்பாடுகளுக்கு மக்களின்இந்த பதிலுணர்வுவெளிப்படுத்துவது ஆண்டவர்தான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தார்லூக்காவின் மரியா சாதாரண இளம்பெண் அல்லஅவர் திருச்சபையின் முன்னோடிநம்மை சிந்திக்க கேட்கிறார் லூக்காமரியா பல வேளைகளில்இவ்வாறு செய்வதாக லூக்கா எழுதுவதுமரியாவை யார் எனக் காட்டுகிறது

இடையர்களின் ஆட்டமும் பாட்டும்கடவுளை நம்புகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களாகக்காட்டுகிறார்எல்லாம் நிகழ்ந்திருந்தது என்று சொல்லிகடவுள் சொல்பவை அனைத்தும் நடக்கும் எனவும்சொல்கிறார்.

பிறந்த குழந்தை ஆண்டவர்நமது குழந்தைப் பருவத்தை நமக்கு நினைவுபடுத்துவாராக!
தன்னலத்தாலும்
போர் வெறியாலும்சமய மூட நம்பிக்கையாலும் 
அல்லலுறும் இவ்வுலகை
குழந்தை இயேசு தன் சிரிப்பால் கழுவுவாராக!
சத்தம் சந்தடியாக மாறிபோயிருக்கும் நத்தார் விழாவை,
அதன் உண்மையான நிலைக்கு ஆண்டவர் கொண்டுவருவாராக.

இயேசு ஆண்டவரின் பிறப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொண்டுவர வாழ்த்துகிறேன்

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) மி . ஜெகன்குமார் அமதி , சங்கமம் , அமதிகள் ஆன்மீக...