வியாழன், 1 மே, 2025

Third Sunday in Easter Season C, 2025: பாஸ்காக் காலம் மூன்றாம் வாரம், 04.05.2025

 



பாஸ்காக் காலம் மூன்றாம் வாரம்,

04.05.2025

மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?

 

 

M. Jegankumar Coonghe OMI,

Blessed Sacrament Retreat House,

Hanwela, Sri Lanka.

Thursday, May 1, 2025

 

முதல் வாசகம்தி.பணி 5,27-32.40-41

திருப்பாடல்: 30

திருவெளிப்பாடு 5,11-14

யோவான் 21,1-19

 

தி.பணி 5,27-32.40-41

27அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள்தலைமைக் குரு அவர்களை நோக்கி, 28'நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையாஎன்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள்மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!' என்றார். 29அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, 'மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? 30நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். 31இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். 32இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்என்றனர். 40பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப்புடைத்துஇயேசுவைப்பற்றிப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். 41இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.

 

இந்தப் பகுதி திருத்தூதர்கள் துன்புறுத்தப்பட்ட வரலாற்றை விவரிக்கின்றதுஇதற்கு முன் உள்ள பகுதியில் ஏற்கனவே திருத்தூதர்கள் எச்சரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர்ஆண்டவரின் தூதரின் வல்லமையால் இவர்கள் விடுதலையாகி ஆலயத்தின் வாயிலில் வாழ்வு தரும் வார்த்தைகளை கற்பிக்கும்படி கேட்கப்பட்டிருந்தனர்தலைமைச் சங்கம் (συνέδριον சுனெத்ரியொன்தலைமைச் சங்கம்அவர்களை விசாரனை செய்யும்படி சிறையை ஆய்வு செய்தபோது அவர்கள் ஏற்கனவே தப்பியிருந்தனர்சிறையில் இல்லாத திருத்தூதர்களைமீண்டும் கோவிலில் கைது செய்து தலைமைச் சங்கத்தின் முன் கொண்டு வருகின்றனர்அதன் பின்னர் நடந்தவற்றையே இன்றைய முதலாம் வாசகம் நமக்கு காட்டுகிறது

 

வவ.27-28: இந்த தலைமைக்குரு அநேகமாக கயபாவாக இருக்கலாம்அவர் இரண்டு விதமான 

குற்றச்சாட்டுக்களை திருத்தூதர்கள்மேல் சுமத்துகிறார்

). கீழ்படியாமை 

). மரணப்பழி

லூக்கா இந்த இரண்டு குற்றச்சாட்டுக்கள் வாயிலாக இரண்டு செய்திகளை ஆழமாக கற்பிக்கிறார்அவைஇயேசுவின் போதனைகளை முன்னெடுக்கிறவர்களும் அவரை பின்பற்றுகிறவர்களும் நிச்சயமாக சமய தலைவர்களினால் சோதிக்ப்படுவார்கள்எனவே அவர்கள் அதற்கு தயாராக இருக்கவேண்டும் என்பதுஅவர்கள் வித்தியாசமான கட்டளைகளை அதிகாரத்தின் பேரில் முன்வைப்பார்கள்இங்கே இவர்கள் இயேசுவை பற்றி கற்பிக்கக்கூடாது என்று கட்டளை வைக்கிறார்கள்இயேசுவை கற்பிக்கக்கூடாது என்று கட்டளை கொடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்ததுகடவுளை தடுக்க மனிதர்கள் முயல்வதை இங்கே காணலாம்(இன்றும் இயேசுவை அறிவிப்பதை தடுக்க பல மனித அரசாங்கங்கள் கட்டளை கொடுப்பதை என்னவென்று சொல்வதுபயங்கரவாதிகள் இப்போது இதில் புதிதாக இனைந்துள்ளார்கள்பாஸ்கா விழாவன்று அப்பாவி கிறிஸ்தவர்கள் கொலை செய்யப்பட்டதும் இந்த வரலாறே (21.04.2019) இதில் இன்னும் நசைக்சுவையான விடயம்

சில கிறிஸ்தவ அரசுகளே தங்களை அறிவாளிகளாகவும்அரச-தந்திரிகளாகவும் நினைத்து 

ஆண்டவரை தடுக்க முயலுவார்கள்சமரசமும் செய்வார்கள்!!!). 

இறுதியாக இயேசுவின் இரத்தபழி தங்களுடையது அல்ல என்று மறுதலிக்கின்றனர்பிலாத்துபல முறை முயன்றும் இதே தலைமைச் சங்கம்தான் ஆண்டவரை சிலுவையில் அறையக்கேட்டதுபிலாத்து ஆண்டவருடைய இரத்தப்பழியை கழுவியபோதுதங்கள்மேலும்தங்கள் பிள்ளைகள் மீதும் இவர்கள்தான் கேட்டு வாங்கிக்கொண்டார்கள்ஆக இந்த கேள்விக்கான விடையை இவர்கள் தங்கள் வாயிலாக அவர்களே சொல்வதை அழகாக லூக்கா படம்பிடிக்கிறார்.

 

.29: லூக்கா இங்கே கிரேக்க பொதுக் கூட்டங்களில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் விவாதம் செய்வதனைப்போல காட்சியமைக்கிறார்இப்போது எதிர்கட்சியாக உருவெடுத்திருக்கும் பேதுருவின் தலைமையிலான ஆரம்ப கால திருச்சபை பேசுகிறதுஇங்கே பேதுருவின் பதில்இந்த தலைவர்கள் தங்களுக்கு கடவுள்கள் அல்ல எனவும்தங்களின் கடவுள் இயேசுஆகவே வானதூதர் சொன்ன கட்டளையைத்தான் தாங்கள் செய்வதாக (காண் .20) காரணம்காட்டுகிறது.  

 

வவ.30-31: இங்கே திருச்சபை பல குற்றச்சாட்டுக்களையும் கடவுளின் செயல்களையும் முன்வைக்கிறதுஇயேசுவை சிலுவையில் அறைந்து கொலை செய்ததாக தலைமைச் சங்கத்தை சாடுகிறதுஏற்கனவே பேதுரு தன்னுடைய தலைமையுரையில் மக்களையும் உரோமையரையும் குற்றம் சுமத்தியிருந்தார்இங்கே தலைமைச் சங்கத்தை சாடுகிறார்அத்தோடு பேதுரு தன்னுடைய மறைபோதனையை அழகாக தலைமைச்சங்கத்திற்கே முன்வைக்கிறார்அதாவதுமனமாற்றத்தையும் பாவமன்னிப்பையும் வழங்க கடவுள் இயேசுவை தனது வலப்பக்கத்திற்கு உயிர்பித்துள்ளார் எனவும்அதற்கு தாங்களும் தூய ஆவியும் சாட்சிகள் என்கிறார்இங்கே ஆழமாக பார்கப்படவேண்டியவை 

இரண்டுமுதலாவதுவலப்பக்கம் என்பது

(δεξιᾷ αὐτοῦ தெக்ட்சியா அவ்டூஅவரின் வலப்பக்கம்இனி கடவுளின் அதிகாரம் 

இயேசுவையே சாரும்தலைமைச் சங்கத்தையோ அல்லது அவர்களின் சட்டங்களையோ சாராது என்பதைக் குறிக்கிறதுஇரண்டாவதுமனிதர்களின் சாட்சியத்தை தலைமைச் சங்கம் மறுக்கலாம்ஆனால் தூய ஆவியை மறுத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்பதாகும்

 

வவ.40-41: எப்படித்தான் திருச்சபை உண்மையை உரைத்தாலும் தண்டிக்கப்படுவாள்என்று கூறுகிறார் லூக்காஇறுதி வசனம்திருத்தூதர்கள் தண்டிக்கப்பட்டாலும் மகிழ்சியோடு சென்றார்கள் என்று காட்டுகிறதுஆக துன்பங்களில் இருந்து தப்பியோடுதல் சாட்சியம் அல்ல மாறாக அதனை தாங்கிதாண்டி வருவதே மகிழ்சியளிக்கும் என்று பாடம் புகட்டுகிறார் லூக்கா

 

திருப்பாடல் 30

நன்றி செலுத்தல்

(புகழ்ப்பர் திருக்கோவில் அர்ப்பணப்பர் தாவீதுக்கு உரியது)

1ஆண்டவரேஉம்மை ஏத்திப் புகழ்வேன்ஏனெனில்நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்;

என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.

2என் கடவுளாகிய ஆண்டவரேஉம்மிடம் உதவி வேண்டினேன்என்னை நீர் குணப்படுத்துவீர்.

3ஆண்டவரேநீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்சாவுக்குழியில் இறங்கிய

எனது உயிரைக் காத்தீர்.

4இறையன்பரேஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.

5அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்மாலையில் அழுகைகாலையிலோ ஆர்ப்பரிப்பு.

6நான் வளமுடன் வாழந்தபோது, என்னை ஒருபோதும் அசைக்க முடியாதுஎன்றேன்.

7ஆனால்ஆண்டவரேஉமது கருணையினால் மலையென உறுதியாக என்னை

நிலைநிற்கச் செய்தீர்உம் முகத்தை மறைத்துக்கொண்டீர்நான் நிலைகலங்கிப் போனேன்.

8ஆண்டவரேஉம்மைநோக்கி மன்றாடினேன்என் தலைவரிடம் எனக்கு இரங்குமாறு வேண்டினேன்.

9நான் சாவதால்படுகுழிக்குப் போவதால்உமக்கு என்ன பயன்புழுதியால் உம்மைப் புகழ முடியுமாஉமது வாக்குப் பிறழாமையை அறிவிக்க இயலுமா?

10ஆண்டவரேஎனக்குச் செவிசாயும்என்மீது இரங்கும்ஆண்டவரேஎனக்குத் துணையாய் இரும்.

11நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு

எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.

12ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்மௌனமாய் இராது;

என் கடவுளாகிய ஆண்டவரேஉமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.

 

  நன்றிப்பாடல்கள் அனேகமான வேளைகளில்செபங்களாக இருப்பதனைக் காணலாம் 

இதனை இந்த முப்பதாவது திருப்பாடலிலும் காணலாம்அத்தோடு நன்றிப்பாடல்களில் பழைய 

நிகழ்வுகளையும் நினைவூட்வதனையும் காணலாம்இறுதியாகவேண்டுதல்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டது எனவும்பாடலாசிரியர் தான் எக்காலமும் நன்றி செலுத்துவதாகவும் அமையும்இந்தப் பாடல்தேவை-மீட்பு-நன்றி என்ற தோரணையில் அமைந்துள்ளதனைக் காணலாம்

தாவீதின் ஆலய அர்பணப் பாடல் என்று இத் திருப்பாடலின் தலைப்பு தொடங்குகிறது

இங்கு ஆலயம் என்பது (הַבַּיִת לְדָוִד  ஹபாயித் லெதாவித்தாவிதின் வீடு என்று 

குறிப்பிடப்பட்டுள்ளதால் இதனை அறிவது கடினமாய் இருக்கிறதுதாவிதின் காலத்தில் எருசலேம் 

ஆலயம் கட்டப்படவில்லை என்பதும் முக்கியமானதுசாலமோனின் ஆலயத்தை தாவிதின் ஆலயம் என்று சொல்வதும் அக்காலத்தில் வழக்கிலிருந்ததுசிலர் இந்த ஆலயத்தை சாலமோனின் முதல் ஆலயம்அல்லது யூதர்கள் பபிலோனிலிருந்து திரும்பி வந்து புதுப்பித்த இரண்டாவது ஆலயம்அல்லது கிரேக்கர்கள் இரண்டாவது ஆலயத்தை தீட்டுப்படித்தியபின் மக்கபேயரின் ஆலய தூய்மைப்

படுத்தும் சடங்கிற்கான பாடல் எனவும் காண்கின்றனர்எவ்வாறெனினனும்இது ஒரு 

புகழ்சிப்பாடல் என்பது மட்டும் புலப்படுகிறது

מִזְמוֹר שִׁיר־חֲנֻכַּת הַבַּיִת לְדָוִד׃  மிட்ஸ்மோர் ஷிர்-ஹனூகாத் ஹபாயித் லெதாவித்ஆலய அர்ப்பணிப்பு திருவிழா பாடல்தாவீதிற்குரியது

 

.1: ஆண்டவரை ஏந்திப் புகழ்வதாக வாக்களிக்கிறார் ஆசிரியர்அதற்கான காரணமாகஅவர் ஆண்டவர் தன்னை எதிரிகளின் மகிழ்வில் இருந்து பாதுகாத்தார் என்கிறார்.

  לִֽי׃  לֹא־שִׂמַּחְתָּ אֹיְבַי

 லோ'- சிம்ஹதா 'ஓய்வாய் லிஎன் எதிரிகள் என்னில் மகிழவிடவில்லை

எதிரிகள் கதாநாயகரின் தோல்வியில் மகிழ்வதுஅவருக்கு தோல்வியை விட மிகுதியான சங்கடத்தைக் கொடுக்கும்அப்படியான ஒரு உணர்வைத்தான் தாவீதும் கொண்டுள்ளார் போலஎதிரிகள் யார் என்று ஆசிரியர் குறிப்பிடவில்லைஆசிரியர் தாவீதாக இருந்தால்எதிரிகள் வேற்று நாட்டு அரசர்களாக இருந்திருக்கலாம்பிலிஸ்தியர்கள் தாவீதின் நேரடியான எதிரிகளாக இருந்தார்கள்

 

.2: ஆண்டவர் குணப்படுத்துகிறார் என்பது முதல் ஏற்பாட்டின் நம்பிக்கையில் மிக முக்கியமானதுஉடல் ரீதியான குணப்படுத்தலையும்உள ரீதியான குணப்படுத்தலையும்ஆசிரியர் மாறி மாறி குறிப்பிடுவதால்இந்த இடத்தில் என்ன குணப்படுத்தல்காட்டப்படுகிறது என்பது 

புரியவில்லைתִּרְפָּ אֵנִי  திர்பா'எனி - என்னை குணப்படுத்தினார்

ஆசிரியர் ஏதோ ஒரு பொல்லாத நோயால் பாதிக்கப்பட்டிருந்து குணமாகியது 

போல தோன்றுகிறது

 

.3: ஆண்டவர் தன்னை சாவிலிருந்து பாதுகாத்தார் என்கிறார்சாவைக் குறிக்க இரண்டு சொற்கள் பாவிக்கப்படுகின்றனபாதாளம்சாவுக்குழிஆண்டவர் இவரை பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்கிறார் அத்தோடு சாவுக்குழியில் இறங்கிய இவரை ஆண்டவர் காக்கின்றார் 

(שְׁאוֹל ஷெ'ஓல், בוֹר போர்). இந்த வரியும் ஆசிரியர் ஏதோ ஒரு ஆபத்திலிருந்து 

பாதுகாக்கப்பட்டார் என்ற அனுபவத்தைக் கொடுக்கிறது எனலாம்

 

.4: இறையன்பர்களுக்கு கட்டளை கொடுக்கிறார் ஆசிரியர்இறையன்பர்களைக் குறிக்க (חָסִידஹசித் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்

பிற்காலத்தில் சட்டஙக்ளை பின்பற்றியவர்கள்எசேனியர்கள்புனிதர்கள் போன்றவர்களுக்கு இந்த சொல் பாவிக்கப்பட்டது. ஆண்டவருடைய புனிதமான பெயரை நினைவுகூர்வது இந்த தூயவர்களின் முக்கியமான பணியாக கருதப்பட்டது.

   לַיהוָה      זַמְּרוּ  ட்சம்ரூ லஅதோனாய்

 

கடவுளை நினைவுகூருங்கள்

 

.5: ஆசிரியர் கடவுளின் சினத்தையும்இரக்கத்தையும் நன்கு அனுபத்திருக்கிறார் போல பாடுகிறார்ஆண்டவரின் சினத்தையும்இரக்கத்தையும் ஒப்பிடுகிறார்ஆண்டவருடைய சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும் என்கிறார் 

(כִּי רֶגַע ׀  בְּאַפּוֹ֮ கி றெகாபெ'அபோஅவர் கோபம் ஒரு கணம்). 

ஆண்டவரின் சினம் ஒரு நொடிப்பொழுதுதான் என்பதை அவர் அடையாளமாகவே பாவிக்கிறார் எனலாம்

அதற்கு எதிராக ஆண்டவருடைய கருணையை வாழ்நாட்கள் முழுவதற்கும் ஒப்பிடுகிறார் 

(חַיִּ֪ים בִּרְצוֹנוֹ  ஹய்யிம் பிர்ட்சோனோவாழ்நாட்கள் அவர் நன்மைத்தனம்). 

இந்த ஒப்பிடுதலைக் குறிக்க இன்னோர் உதாரணத்தை முன்வைக்கிறார்அதாவது மாலையின் ஆழுகை கடவுளின் தண்டனையைக் குறிக்ககாலையின் விடியல் ஆண்டவரின் ஆசீரைக் குறிக்கிறது

 

.6: தன்னுடைய பழைய வாழ்க்கையை ஆசிரியர் நினைத்துப் பார்க்கிறார்தான் வழமுடன் வாழ்ந்தபோது என்று இறந்த கால வினையில் பேசுகிறார் (אָמַ֣רְתִּי 'அமர்த்தி-நான் சொன்னேன்). 

தன்னை யாரும் அசைக்க 

முடியாது என்று சொன்னதை எதிர்மறையாக நினைவுகூர்கிறார் 

(בַּל־אֶמּוֹט לְעוֹלָם׃ பால்-'எமோத் லெ'ஓலாம்எக்காலமும் அசையாது). 

 

.7: ஆண்டவர்தான் ஒருவரின் பலம் என்பதைக் காட்ட மலையை உருவகத்திற்கு எடுக்கிறார் ஆசிரியர்மலை இஸ்ராயேலருக்கு மிக நன்கு தெரிந்த உருவகம்மலை அசையாது நிற்பதாலும்நில நடுக்கத்திலும் அவை அசையாது இருப்பதாலும்மலை உயரமாக இருப்பதாலும் அதில் கடவுள் இருக்கிறார் என்று நம்பப்பட்டதுமுதல் எற்பாட்டில் பல இடங்களில் ஆண்டவரின் காட்சி மலையில்தான் வெளிப்படுத்தப்படுகிறதுஇதன் காரணமாக உறுதிக்கு உதாரணமாக மலை மாறுகிறது

    ஆண்டவருடைய கருணையால் தான் மலைபோல உறுதியாக நின்றதாகச் சொல்கிறார் 

(לְהַרְרִ֫י עֹז லெஹர்ரி 'ஓட்ஸ்உறுதியான மலைபோல). 

இதற்கு எதிர்மாறாககடவுள் தன் முகத்தை மறைத்தால் உடனே தான் நிலைகலங்கிப் போனதாகச் சொல்கிறார்ஆண்டவரின் முகத்தை யாரும் கடண்டதில்லைஇருந்தும் முகத்தை மறைத்தல் என்பதுஆண்டவரின் கரிசனை இல்லாமல் போனதை குறிக்க பாவிக்கப்படும் உருவகம் 

(הִסְתַּרְתָּ פָנֶ֗יךָ  ஹிஸ்தார்த்தா பானெகாஉம் முகத்தை மறைத்தீர்). 

 

.8: ஆண்டவரை தன் தலைவர் என விழிக்கிறார்இந்த சொல் விவிலியத்தில் ஆண்டவருக்கு பாவிக்கப்படும் பிரத்தியோகமான ஒரு சொல் 

(אֲדֹנָ֗י 'அதோனாய்-என் தலைவர்). இந்த பெயரைத்தான் விவிலிய ஆய்வாளர்கள் 

ஆரம்ப காலத்தில் கடவுளுடைய இயற்பெயருக்கு பதிலாக பாவித்தனர்ஆண்டவருடைய இயற்பெயர் அதிதூய்மையாக இருந்த படியால் (יְהוָה  யாவேயெஹோவாஅதனை உச்சரிக்க தயங்கி

அதோனாய் (என் தலைவர்என்ற சொல்லை பயன்படுத்தினர்தனக்கு இரங்குமாறு ஆண்டவராகிய தலைவரிடம் கேட்கிறார் ஆசிரியர்.

 

.9: சாவு ஆண்டவருக்கு பயனற்றது என்பதை அழகாகக் காட்டுகிறார்சாவினால் மனிதர்கள் படுகுழிக்குள் செல்கிறார்கள் என இஸ்ராயேலர் கருதினர் (שָׁחַתஷாஹத்-குழி). 

இங்கே மரணத்தை குறிக்க மூன்று விதமான சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன

 

இரத்தத்தை எடுத்தல் (דָּם தாம்): இரத்தத்தில்தான் உயிர் உள்ளதாக கருதப்பட்டது.

படுகுழியினுள் செல்லல் (שָׁחַת ஷாஹத்): இது சீயோலைக் குறிக்கிறது

தூசாக மாறுதல் (עָפָר'ஆபார்): மனிதர் தூசினால் உருவாகினர்மரணத்தின் பின் தூசாக மாறினர் என நம்பப்படுகிறது

படுகுழியினுள் இருப்பவர்களும்தூசியாக போனவர்களாலும் கடவுளின் மாட்சிக்கு எதுவும் செய்ய முடியாதுஎனவே இந்நிலையில் இவர்கள் இருப்பதனால்கடவுளுக்கு நன்மையில்லை 

என்பதைப் போல சொல்கிறார்உயிரோடு இருப்பவர்களால்தான் கடவுளின் வாக்குப் பிறழாமை தெரிவிக்கப்படுகிறது என்கிறார்

 

.10: எபிரேய திருப்பாடல்கள் எவ்வகையான பாடல்களாக இருந்தாலும்அவற்றில் வேண்டுதல் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும்இந்த பாடலிலும் வேண்டுதல் மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது

            ஆசிரியர் கடவுளை தனக்கு செவிசாய்க்கவும் (שְׁמַעஷெமா'- கேளும்)இரங்கவும் 

(חָנֵּנִיஹான்னேனி), துணையாக இருக்கவும் (הֱיֵה־עֹזֵר ஹெயெஹ்-'ஓட்செர்உதவியாக இரும்

கேடக்கிறார்இந்த மூன்று வினை சொற்களும் ஒத்த கருத்தில் பாவிக்கப்படுகின்றன

 

.11: புலம்பலை கடவுள் களிநடனமாக மாற்றிவிட்டார் என்கிறார் ஆசிரியர்இதனை மேலும் சொல்ல சாக்குடைக்கு பதிலாக மகிழ்ச்சியை உடுத்தினார் என்றும் சொல்கிறார்

புலம்பல் துன்பத்தைக் குறித்ததுஇந்த புலம்பலில் பலவகையான செயற்பாடுகள் காணப்பட்டனபுலம்பல்கள் பாடல்களாகவும் இருந்திருக்கின்றனசாக்குடை தரித்தலும் புலப்பலைக் காட்ட பயன்பட்டதுதாவீது தன்னுடைய முதல் மகனின் இறப்பிற்கு முதல் இந்த சாக்குடையைத்தான் தரித்து செபித்தார் என விவிலியம் காட்டுகின்றது (מִסְפֵּד மிஸ்பெத்புலம்பல்שַׂק சாக்சாக்கு). 

மகிழ்ச்சியை ஆடையாக காட்டுவது விவிலியத்திற்கே உரிய தனித்துவமான அடையாளம்மகிழ்ச்சி இங்கே ஆடையாக வர்ணிக்ப்படுவதுஒருவகையான சிறப்பு ஆடையைக் குறிக்கலாம் என்றும் வாதிடப்படுகிறது (וַתְּאַזְּרֵנִי שִׂמְחָה  வாத்தெ'அட்ஸ்ரெனி சிம்ஹாஹ்மகிழ்வை ஆடையாக உடுத்தினீர்). 

 

.12: இதனால் தன் உள்ளம் அமைதியாக இராமல்நன்றிசொல்லி புகழ்ந்துபாடும் என்கிறார்

உள்ளத்தைக் குறிக்க (כָבוֹדகாவோத் என்ற சொல் பாவிக்கப்படுகின்றதுஇந்த சொல்ல 'மாட்சியைகுறிக்கிறதுஏன் இந்த சொல் பாவிக்கப்பட்டடுள்ளது என தெரியவில்லை

சிலர் இதனை    כְּבֵדִי (கெவெதிஎன காண்கின்றனர்அதாவது 'என் ஈரல்என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறதுஈரல் ஒருவருடைய உணர்வுகளின் உறைவிடமாக கருதப்பட்டதுஆகவே இந்தச் சொல் இங்கே பொருத்தமாக இருந்திருக்கலாம்ஆரமப் கால விவிலியம் மெய்யெழுத்துக்களால் மட்டுமே எழுதப்பட்டதால்இப்படியான பல சிக்கல்கள் இன்றும் காணக்கிடக்கின்றன

 

திருவெளிப்பாடு 5,11-14

 

11தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதுஅரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்: 12'கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றதுஎன்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள். 13பின்புவிண்ணுலகுமண்ணுலகுகீழுலகுகடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும்அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், 'அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியனஎன்று பாடக் கேட்டேன்.

14அதற்கு அந்த நான்கு உயிர்களும், 'ஆமென்என்றனமூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.

 

வானுலக காட்சி என்ற பகுதியிலிருந்துஇன்றைய இரண்டாம் வாசகம் எடுக்கப்பட்டுள்ளதுஇந்த பகுதியில் யோவான் ஆட்டுக்குட்டியின் மாட்சியை விவரிக்கின்றார்

 

.11: நான் பார்த்துக்கொண்டிடுருக்கும் 

(Καὶ εἶδον காய் எய்தொன்போது என்று யோவான் தொடங்குவது

வெளிப்பாட்டு இலக்கியங்களின் முக்கியமான பண்பாகும்இந்த முறை அவர் பலவற்றைக் காண்கிறார்அவைஅரியணைமூப்பர்கள்கோடிக்கணக்கான வானதூதர்களின் குரல் என்பனவாகும். 4,10 இந்த மூப்பர்களை இருபத்தினாங்கு என்று வரையறுக்கிறதுஇந்த இலக்கம் பன்னிரண்டின் நிறைவான இன்னொரு இலக்கமாகும்அத்தோடு இது பன்னிரு குலங்களையோ அல்லது பன்னிரு திருத்தூதர்களையோ அல்லது நிறைவான திருச்சபையின் தலைவர்களையோ குறிக்கலாம்இந்த நான்கு உயிர்கள்முழு உலகத்தையும் குறிக்கிறதுஅல்லது முழு உலகத்திற்கு பொறுப்பான கடவுளின் அதிகாரத்தை குறிக்கிறது.  கோடிக்கணக்கான வானதூதர்கள் உண்மையில் ஆயிரம் ஆயிரம் 

(χιλιάδες χιλιάδων கிலியதெஸ் கிலியதோன்

வானதூதர்களின் கூட்டம் என்றே மூல மொழியில் அமைந்துள்ளது

 

.12: வானதூதர்கள் இங்கே மூப்பர்கள்உயிர்கள் முன்நிலையில் ஆட்டுக்குட்டிக்கு சாட்சியமும் தீர்ப்பும் சொல்கிறார்கள்இந்த ஆர்ப்பரிப்பு எசாயா நூலில் செராபீன்கள் கடவுளுக்கு புகழ்பாடி சாட்சியம் சொன்னதை நினைவூட்டுகிறதுகொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியின் பண்புகள் காட்டப்படுகின்றனவல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது (ἄξιόν ἐστιν τὸ ἀρνίον τὸ ἐσφαγμένον λαβεῖν τὴν δύναμιν καὶ πλοῦτον καὶ σοφίαν καὶ ἰσχὺν καὶ τιμὴν καὶ δόξαν καὶ εὐλογίαν அக்ட்சியொன் எஸ்டின் டொ அர்னியொன் டொ எஸ்பாக்மெனொன் லாபெய்ன் டேன் தூனாமின் காய் புலூடொன் காய் சொபியான் காய் இஸ்கூன் காய் டிமேன் காய் தொக்ஸ்சான் காய் எவ்லொகியான்).

 

.13: இந்த வசனத்தின் மூலம் இப்பொழுது முழு பிரபஞ்சமுமே ஆட்டுக்குட்டியை புகழத் தொடங்குகின்றனவிண்ணுலகுமண்ணுலகுகீழுலகுகடல் (πᾶν κτίσμα ὃ  ἐν τῷ οὐρανῷ καὶ ἐπὶ τῆς γῆς  καὶ ὑποκάτω τῆς γῆς⸌ καὶ ἐπὶ τῆς θαλάσσης  καὶ τὰ ἐν αὐτοῖς  ⸀πάντα பான் கிடிஸ்மா ஹொ என் டோ ஊரானோ காய் எபி டேஸ் கேஸ் ஹூபொகாடோ டேஸ் கேஸ் காய் எபி டேஸ் தாலாஸ்சேஸ் காய் டா என் அவ்டொய்ஸ் பான்டாஎன்பவை இந்த நான்கு உயிர்களுடன் தொடர்புடையவாழும் உலக உயிர்களைக் குறிக்கின்றனஆக முழு உலகமும் இங்கே அரியணையிலிருக்கும் கடவுளையும் அவருடைய ஆட்டுக்குட்டியான இயேசுவையும் புகழ்கின்றன

 

.14: உயிர்களின் அறிக்கையை கேட்டவுடன் நான்கு உயிர்கள் (τὰ τέσσαρα ζῷα டா டெஸ்ஸாசரா ட்சோஆநான்கு உயிர்கள்) ஆமென் என்று பதிலளிக்கின்றனஇது 

இஸ்ராயேல் மக்களின் செபத்தைக் குறிக்கிறதுஆமென் என்பது ஏற்றுக்கொள்ளுதலைக் குறிப்பவைமூப்பர்கள் விழுந்து வணங்குதலும் இன்னொரு ஏற்றுக்கொள்ளுவதற்கான அடையாளம்இந்த வரிகளின் அடையாளங்கள் மூலமாக யோவான்இயேசுவை அனைத்து உலகங்களும்கடவுளின் வானதூதர்களும் முறையாக ஏற்றுக்கொண்டனர் என்று விவரிக்கின்றார்.  

 

 

யோவான் 21,1-19

இயேசு தம் சீடர் எழுவருக்குத் தோன்றுதல்

 

1பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார்அவர் தோன்றியது இவ்வாறு:

2சீமோன் பேதுருதிதிம் எனப்படும் தோமாகலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல்செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்,

3அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், 'நான் மீன்பிடிக்கப் போகிறேன்என்றார்அவர்கள், 'நாங்களும் உம்மோடு வருகிறோம்என்று போய்ப் படகில் ஏறினார்கள்அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை.

4ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்ததுஇயேசு கரையில் நின்றார்ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை. 5இயேசு அவர்களிடம், 'பிள்ளைகளேமீன் ஒன்றும் கிடைக்கவில்லையா?' என்று கேட்டார்அதற்கு அவர்கள், 'இல்லைஎன்றார்கள். 6அவர், 'படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்மீன் கிடைக்கும்என்று அவர்களிடம் கூறினார்அவர்களும் அவ்வாறே வீசினார்கள்மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. 7இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், 'அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்என்றார்அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.

8மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள்அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லைஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். 9படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள்அங்கு அப்பமும் இருந்தது. 10இயேசு அவர்களிடம், 'நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்என்றார். 11சீமோன் பேதுரு படகில் ஏறிவலையைக் கரைக்கு இழுத்தார்வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தனஅவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்றுஇத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12இயேசு அவர்களிடம், 'உணவருந்த வாருங்கள்என்றார்சீடர்களுள் எவரும், 'நீர் யார்?' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லைஏனெனில்அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். 13இயேசு அவர்கள் அருகில் வந்துஅப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்மீனையும் அவ்வாறே கொடுத்தார்.

14இவ்வாறுஇயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

இயேசுவும் பேதுருவும்

 

15அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனேநீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார்அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரேஎனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!' என்றார்இயேசு அவரிடம், 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்என்றார்.

16இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், 'யோவானின் மகன் சீமோனேநீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார்அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரேஎனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!' என்றார்இயேசு அவரிடம், 'என் ஆடுகளை மேய்என்றார்.

17மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், 'யோவானின் மகன் சீமோனேஉனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று கேட்டார். 'உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்றுஅவரிடம், 'ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமேஎனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?' என்றார்இயேசு அவரிடம், 'என் ஆடுகளைப் பேணிவளர்.

18'நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய்உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்வேறொருவர் உன்னைக் கட்டிஉனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்என்றார். 19பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார்இதைச் சொன்ன பின் பேதுருவிடம், 'என்னைப் பின் தொடர்என்றார்.

 

இந்த பகுதியில் பேதுருவிக்கு ஆண்டவர் பொறுப்பாளர் பட்டம் கொடுக்கும் நிகழ்வை யோவான் அழகான கிரேக்க வார்த்தைகளில் காட்சிப்படுத்துகிறார்யார் இந்த பேதுரு என்ற சற்று பார்ப்போம்

 

சிமோன் பார்யோனா என்பது அரமேயத்தில் யோனாவின் மகன் சிமோன் என்று பொருள்படும் (Σίμων  Βαριωνᾶ ட்சிமோன் பார்யோனா). சீமோன் பேதுரு தனது சகோதரர் போல ஒரு கலிலேய மீனவராவர்நற்செய்தியாளர்கள் பல விதமான அழைப்புக் கதைகளை பேதுருவுக்கு கொடுக்கின்றனர்மாற்கு-லூக்காவின் காட்சிப்படி இவர் மீன்பிடித்தபோது இயேசுவால் 

அழைக்கப்படுகிறார் 

(மாற்கு 1,16-17: லூக்கா 5,1-11). 

யோவான் இவரை அவர் சகோதரர் அந்திரேயா இயேசுவிடம் அழைத்துவந்தாக காட்டுவார் 

(யோவான் 1,35-42). 

ஆக பேதுரு அழைக்கப்பட்ட முக்கியமான திருத்தூதர் என்பது புலப்படுகிறதுஅனைத்து நற்செய்தியாளர்களும் பல விதமாக பேதுருவின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றனர்மத்தேயுவின் நற்செய்தியில் பேதுரு முக்கியமான பாத்திரம்முக்கியமான மூன்று பேர்களிலும் சரிபன்னிருவரிலும் சரி மிக முக்கியமானவராக பேதுரு இருப்பார்பேசுவார்பிறகால முதல் திருச்சபையும் பேதுருவிற்கு முக்கியமான இடத்தை கொடுத்திருந்ததுபவுலடிகளார் கூட பேதுருவுடன் கருத்தில் முரன் பட்டாலும்அவரது முக்கியத்துவத்தை கேள்வியாக்கமாட்டார் என்பதை நோக்க வேண்டும் (1கொரி 15,5). 

 

ஆளுமையைப் பொறுத்த மட்டில் ஒரு சாதாரண மீனவராக இருந்தார்அதீத ஈடுபாட்டாலும்இயேசுவின் மீது கொண்ட ஆழமான அன்பினாலும் சில வேளைகள் இடம் பொருள் ஏவல் மறந்து செயல் பட்டு இயேசுவிடம் அன்பு-குட்டு வாங்குவார்நற்செய்தியாளர்களும் சரி பவுலும் சரி பேதுருவை சுயநலவாதியாகவே அல்லது தீய என்னங்கள் உடையவராகவோ 

காட்ட மாட்டார்கள்பலவீனனான பேதுரு இயேசுவின் அசைக்க முடியாத கட்டளைத் தளபதி என்பதை புதிய ஏற்பாடு விதவிதமாக விவரிக்கிறதுஆண்டவரை மறுதலித்த காட்சி உண்மையில் பேதுருவிற்கு எதிரான காட்சியல்ல மாறாக அது பேதுருவிற்கு முக்கியமான படிப்பினையும்சாட்சியமும் தந்த காட்சிபேதுருவின் மறுதலிப்பைவிட அவரது அழுகையையும்விசுவாச பிரமாணங்களையும் நாம் உற்று நோக்க வேண்டும்

 

பேதுரு பல கடிதங்களை எழுதியதாக பாரம்பரியம் நம்புகிறதுஅவற்றுள் இரண்டு புதிய ஏற்பாட்டில் தரப்படுத்தப்பட்டுள்ளதுபேதுரு உரோமைக்கு மறை பயணம் செய்ததாகவும்உரோமையில் ஏற்பட்ட பெரிய தீச் சம்பவத்தின் பின் (கி.பி 64) சிலுவையில் தழைகீழாக அறையப்பட்டு மறைசாட்சியானதாகவும் பாரம்பரியம் ஏற்றுக்கொள்கிறதுதிருமுகங்களைவிடபேதுருவின் பணிகள்பேதுருவின் வெளிப்பாடுபேதுருவின் நற்செய்திபேதுருவின் போதனைகள்பேதுரு-பவுலின் பாடுகள்பேதுரு மற்றும் பன்னிருவரின் பணிகள்பேதுரு யாக்கோபுக்கு எழுதிய கடிதம்மற்றும் பேதுரு பிலிப்புக்கு எழுதிய கடிதம் என்பவை விவிலியத்திற்கு வெளியால் ஏற்றுக்கொள்ளப்படாமல் மறைந்திருக்கின்றனஇவற்றை பேதுரு எழுதாவிட்டாலும்அவை பேதுருவிற்கு அர்பணிக்கப்பட்டிருப்பதிலிருந்து அவரின் முக்கியத்துவம் கேள்வியின்றி புலனாகின்றது

 

  அதிகமான அறிஞர்கள் இந்த பகுதியை பிற்சேர்ப்பு என்றே அழைக்கின்றனர்இவர்கள்

இந்தப் பகுதி யோவான் நற்செய்திக்கு முடிவுரை போலவும்திருச்சபையை மையப் படுத்தியதாகவும் இருக்கிறது என்று காரணம் காட்டினாலும் சில முக்கியமான தற்காலயோவான்-நற்செய்தி அறிஞர்கள் இப்பகுதி யோவான் நற்செய்தியின் பிரிக்க முடியாத பகுதியே என்றும் வாதாடுகின்றனர்இந்த நற்செய்தி இரண்டு முக்கியமான காட்சிகளை உள்ளடக்கியிருக்கிறதுவவ.1-14: இயேசுவின் காட்சிவவ.15-24: பேதுருவுடனான இயேசுவின் உரையாடல்

 

வவ. 1-3: கானாவூர் திருமண வீட்டுக் காட்சி போலுள்ளதுநேரம்இடம்காலம் சொல்லப்பட்டுள்ளதுதிபேரியாக்கடல் என்று காட்டி உயிர்த்த ஆண்டவர் எருசலேமைவிட்டு வெளியில் தோன்றுவது காட்டப்படுகிறதுஇயேசு தோன்றினார் என்றுகடவுளின் காட்சிக்கு பயன்படுத்தும் வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது (φανερόω பானெரோவோதோன்று). ஏழு சீடர்கள் இங்கே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்நத்தானியேல் முதல் தடவையாக பெரிய நிகழ்வொன்றைக் காண்கிறார்மூன்றாவது வசனம் சீடர்கள் தங்கள் பழைய வாழ்விற்கு திரும்பியதை காட்டுவதாக அமைந்துள்ளதுசிலர்பேதுருவின் தலைமையில் புது மீன்பிடித்தலில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என்றும் இதனை பார்க்கின்றனர்ஆண்டவர் இல்லாமல் மீன்பாடு குறைவாக இருக்கிறது

 

வவ. 4-6: நற்செய்தியாளருக்கு (ஆசிரியர்கரையில் நிற்பவர் இயேசு என்று தெரிகிறதுசீடர்களுக்கல்லபகல் நம்பிக்கையை குறிக்கிறதுபிள்ளைகளே என்று நெருக்கமான வார்த்தையாலும்கேள்வி கேட்பதன் மூலம் தான் அவர்களின் சிக்கல்களை புரிந்துள்ளார் என்று காட்டுகிறார் (παιδίον பைதியொன்பிள்ளாய்). வலப் பக்கம் அதிகமான மீன்கள் இயேசுவின் அதிகாரத்தையும் ஆசீர்களையும் குறிக்கின்றன

 

வவ. 7-14: அதிகமான மீன் பாடு இயேசுவை அன்புச் சீடருக்கு (ὃν ἠγάπα ὁ Ἰησοῦς ஹொன் ஏகாபா ஹொ ஈயேசூஸ்இயேசு அன்பு செய்தவர்அடையாளம் காட்டுகிறதுகல்லறையில் நடந்ததைப் போலஇங்கே மீண்டுமாக அன்புச் சீடர்தான் இயேசுவை அடையாளம் காண்கிறார்பேதுரு அதே உற்சாகத்தை இங்கேயும் எண்பிக்கிறார்ஆர்வத்தோடும் கூட ஆடையணிவதில் முக்கியம் காட்டி ஆண்டவருக்கு மரியாதை செய்ய முயற்சிக்கிறார்ஆண்டவர் சீடர்களுக்கு அப்பமும் மீனும் கொடுப்பது அவர்தான் ஊற்றுக்களின் உறைவிடம் என காட்டுகிறதுபெரிய மீன்கள், 153 என்ற எண்ணிக்கைவலைகள் கிழியவில்லை என்றுமாக சொல்லி வாசகர்களின் பார்வையை திருப்புகிறார் ஆசிரியர்சிலர் இந்த எண்ணிக்கையை உருவகமாக பார்க்கின்றனர்உதாரணமாக அகுஸ்தினார் இதனை நிறைவின் அடையாளமாக பார்கிறார்அலெக்சாந்திரிய சிறில் இதனை திருத்துவத்தின் அடையாளமாக அகுஸ்தினாருடன் சேர்ந்து பார்க்கிறார்சிலர் இதனை திருச்சபையின் நிறைவின் அடையாளமாக பார்க்கின்றனர்பேதுரு வலையை இழுத்தது பிடிப்பட்டவற்றை இயேசுவோடு இணைக்கிறது என்று பார்க்கலாம்இங்கே பாவிக்கப்பட்டுள்ள வினைச்சொல் இதனையே குறிக்கிறது (ἕλκω இழு). கேள்வி கேட்காமையும்ஆண்டவரோடு உணவருந்தியமையும்உயிர்த்த ஆண்டவர் சீடர்களுடன் நல்ல உறவை கொண்டிருந்ததைக் காட்டுகிறதுஅத்தோடு சில பாடங்கள் இந்த நிகழ்வில் நற்கருணை ஏற்படுத்திய செபங்களையும் இணைத்துஇதனையும் நற்கருணைக் கொண்டாட்டமாக பார்க்கின்றன (.13). ஆண்டவர் மூன்றுமுறை தோன்றினார் என்பது பல முறை தோன்றினதை உறுதிப்படுத்துகிறது

 

வவ.15-17: 15வது வசனத்தில் தமிழில் இவர்களைவிட என்று மொழிபெயர்கப்பட்டுள்ளதுகிரேக்கத்தில் பலர்பால் வகையில் உள்ளது (πλέον τούτων பிலெயொன் டூடோன் - இவைகளைவிட

ஆதலால் கிரேக்கத்தில் இது பேதுருவின் பழைய சீடத்துவத்தையோ அல்லது அவரது தொழில் துறைகளையோ அல்லது மற்றைய சீடர்களின் மேல் அவருக்கிருந்த அன்பையோ குறிக்கலாம்இவையனைத்தையும் அவர் துறக்கவேண்டும்இங்கே ஆண்டவர் பேதுருவை தன்னுடைய ஆடுகளை மேய்குமாறு மூன்று தடவை கேட்கிறார்இது பேதுரு மூன்று தடவை ஆண்டவரை மறுதலித்ததை சரிபடுத்த என்று பலர் வாதிடுகின்றனர்இயேசு மூன்று தடவை பேதுருவை முழுப் பெயர் சொல்லி அழைத்தமைஅவரை நல்ல ஆயராக காட்டுகிறதுஏற்கனவே நல்ல ஆயன் தன் ஆடுகளை பெயர்சொல்லி அழைப்பான் என்று யோவான் சொல்லி இருக்கிறார்அன்பைக் குறிக்க இரண்டு முக்கியமான சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன 

(ἀγαπάω அகாபாஓஅன்புசெய், φιλέω ஃபிலெஓநட்புகொள்). அதேபோல ஆடுகளைக் 

குறிக்கவும் இரண்டு வேறு வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன 

(ἀρνίον அர்னியோன்செம்மறி, πρόβατον புரொபாடொன்மந்தை). இந்த அமைப்புகள்சாதாரண ஒத்த கருத்துச் சொற் பாவனை என்று சில அறிஞர்கள் பார்க்கின்றனர்சிலர் இதனையும் அடையாளமாக பார்க்கின்றனர்அதிகமானவர்கள் இந்த பகுதியை பேதுரு பொறுப்பெடுக்கும் காட்சியாக காண்கின்றனர்உண்மையில்இந்த பகுதியின் முக்கியத்துவம் பேதுருவுக்கும் இயேசுவிற்குமான உறவாகும்இங்கே ஆண்டவர் தன் ஆடுகளை பேதுருவின் அதிகாரத்திலோ அல்லது தனி கவனிப்பிலோ விடவில்லைமாறாக இயேசுவை அன்புசெய்வதென்றால்தன் ஆடுகளை பேணிகாப்பதே ஆகும் என்று விளங்கப்படுத்துகிறார்இயேசு மட்டுமேஎன்றும் ஆண்டவர்

 

வவ.18-19: இவ்வரிகள் பேதுருவின் சாட்சிய மரணத்தை பற்றியது என்று திருச்சபை பாரம்பரியமாக நம்புகிறதுகைகளை விரித்துக்கொடுத்தல் சிலுவை மரணத்தை குறிக்கலாம் (ஒப்பிடுகவி. 17,12: எசா 65,2).  இடையைக் கட்டுதல் ஒருவருடைய தனிச் சுதந்திரத்தை குறிக்கிறதுஇயேசுவைப் போல் பேதுருவும் தம் மரணத்தால் கடவுளை மாட்சிபடுத்தினார் என்கிறார் ஆசிரியர்இறுதியான வசனம் அனைத்து சீடர்களுக்கும் உரியதுபேதுருவின் அதிகாரம் அவரது தலைமைத்துவத்தில் இருந்து வரவில்லை மாறாக அவர் இயேசுவோடு கொண்ட உறவிலும்நட்பிலும் அவரது சாட்சியத்திலிருந்தும் வருகிறது என்பது யோவானின் ஆழமான போதனை

 

ஆண்டவர் இயேசு மட்டும்தான் ஆண்டவர்,

ஆடுகளுக்கிடையில் வெள்ளாடோ,

கறுப்பாடோ செம்மறியோ கிடையாது.

ஆடுகள் என்பதும் உருவகம் மட்டுமே.

நாம் அனைவரும் அவர் சீடர்கள்.

இயேசுவுடன் உள்ள உறவே பணியை தெரிவு செய்கிறது.

இந்த பணி இயேசுவை பற்றிக்கொள்ள கேட்கிறதுஅதிகாரத்தையல்ல.

பேதுருவின் அதிகாரம் என்ற மாயையை பார்க்காமல்அவர் இயேசுமேல் கொண்ட நம்பிக்கையையும்அவர் காட்டிய அன்பையும் பார்த்து வாழ்வோம்.

திருச்சபையிலோஇறையரசிலோஅதிகாரம் என்பது

பிழையான வாதம்.

 

ஆண்டவரேஅனைத்தையும் விட உம்மை அன்பு செய்வது கடினமாக இருக்கிறது,

அதனைச் செய்ய நம்பிக்கையையும் வல்லமையையும் தாரும்

தீவரவாத சிந்தனைகள், செயற்பாடுகளிலிருந்து கடவுள் உலகை காப்பாறாக.

தெற்காசியாவில் அமைதியும், பாதுகாப்பும் கிடைக்க மன்றாடுவோம்.

 

ஆமென்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தூய ஆவியார் பெருவிழா (09.06.2025): Feast of Pentecost 2025

  தூய ஆவியார் பெருவிழா M. Jegankumar Coonghe OMI, CASA GENERALIZIA, Via Aurelia, 290, Roma.  Friday, 6 June 2025   முதலாம் வாசகம்...