வியாழன், 31 ஆகஸ்ட், 2023

ஆண்டின் பொதுக்காலம் இருபத்தோராம் ஞாயிறு (அ)21st Sunday in Ordinary Time

 ஆண்டின் பொதுக்காலம் இருபத்தோராம் ஞாயிறு (அ)21st Sunday in Ordinary Time

27.08.2023



முதல் வாசகம்எசாயா 22,19-23
பதிலுரைப் பாடல்திருப்பாடல் 138
இரண்டாம் வாசகம்உரோமையர் 11,33-36
நற்செய்திமத்தேயு 16,13-20


கேள்விகள்
விவிலியத்தில் பல விதமான இலக்கிய நடைகளை அவதானிக்கின்றோம்விவிலியத்தில்கதைகள்புராண நம்பிக்கைகள்விடுகதைகள்பாடல்கள்கவிதைகள்விவரணங்கள்நேரடிப்பேச்சுக்கள்மறைமுகப் பேச்சுக்கள்கடிதங்;கள்வெளிப்பாடுகள் என்ற பல விதமான வகைகள்காணப்படுகின்றனஇவற்றுக்குள்ளும் பலவிதமான துணைப்பிரிவுகளும் காணப்படுகின்றன
இந்த இலக்கியவகைள் விவிலியத்திற்கு மட்மே உரித்தானவை என்று சொல்வதற்கில்லைஏனைய பாரசீகபபிலோனியஎகிப்திய மற்றும் மொசப்தேமிய இலக்கியங்களிலும் இவைகள்காணப்படுகின்றன
நமக்கு தெரிந்த படி விவிலியத்திலே எழுத்து ஆசிரியர்கள் (தொகுப்பாசிரியர்கள்மிகமுக்கியமான பங்கை வகிக்கிறார்கள்சிலவேளைகளில் இவர்கள் வரலாற்றை விவரிக்கிறார்கள்சில வேளைகளில் கடவுளின் வார்த்தைகளை அப்படியே பதிவு செய்கிறார்கள்இன்னும் சிலவேளைகளில் கடவுளின் கேள்விகளையும் இவர்கள் முன்வைக்கிறார்கள்இந்த கேள்விகளைஇறையியலையும் தாண்டி யோசித்தால் இவை ஒவ்வொரு வாசகருக்குமான கேள்வியாகஇருக்கின்றன என்பது தென்படுகிறதுஅனேகமான கேள்விகளுக்கு வாசகர்கள் உடனடியாகவிடைசொல்லிவிடுவார்கள்அப்படித்தான் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும்இந்த முறையைநவீன சினிமாக்கள் அல்லது நாவல்களும் பின்பற்றுவதை வாசகப் பிரியர்கள் அறிவார்கள்
இன்னுமாக சிலகேள்விகள்விடையைத்தராமல் பல கேள்விகளை உருவாக்குவதாகவும்விவிலியத்தில் அமைந்திருக்கின்றனஆக அனைத்து விவிலிய கேள்விகளும் விடையைஎதிர்பார்க்கின்றன என்பதற்கில்லைவிடையில்லாத கேள்வியை மட்டும் தரும் கேள்விகளும்இந்த வாழ்வின் புத்தகத்தில் உள்ளன
விவிலியத்தில் பல ஆயிரம் கேள்விகள் உள்ளனஅதேவேளை கடவுள் கேட்கும் பல நூறுகேள்விகளும் இருக்கின்றனஇப்படியான கடவுளின் கேள்விகளில் முக்கியமாக ஏழு (7) கேள்விகளை விவிலியத்தை தியானிப்பவர்கள் கண்டெடுத்துள்ளார்கள்அவற்றைதியானிப்போம்

1. நீ எங்கே இருக்கிறாய் (אַיֶּכָּה 'அய்யேகாஹ்எங்கே நீ)? (காண்க தொ.நூ 3,9).
இந்த கேள்வியை மொழியலாளர்கள் அல்லது சொல்லாட்சியாளர்கள் எரோடேசிஸ்(erotesisஎன அழைக்கின்றார்கள்இது ஒரு வகையான கடுமையான கேள்விஇங்கேஇப்படியான கேள்வியை கேட்கிறவர் எதிர்மறையான விடையை எதிர்பார்த்தே கேட்கிறார்வாசிப்போருக்கும் கடவுளுக்கும் தெரியும் ஆதாம் எங்கிருக்கிறார் என்றுஇருந்தும் இந்தகேள்வி கதை நடையை விறுவிறுப்பாக்கின்றதுஇந்த கேள்வியை கடவுள் ஆதாமிடம் கேட்டார்

2. இது என்ன நீ செய்துவிட்டாய் (מַה־זֹּאת עָשִׂית மாஹ்-ட்ஸோ'த் 'அசித்இது என்ன நீசெய்துவிட்டாய்)? (காண்க தொ.நூல் 3,13).
இதுதான் கடவுள் பெண்ணிடம் கேட்ட முதலாவது கேள்வி. 'இது என்னஎன்று அழுத்திக்கேட்க சுட்டிக்காட்டும்பெயர்ச்சொல் பாவிக்கப்பட்டுள்ளது (זֶה ட்செஹ்). இதனை பாவித்துஆசிரியர் குறித்த செயற்பாட்டின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறார்இந்த கேள்வி மூலம் ஏவாள்அந்த செயலை தவிர்த்திருக்கலாம்என்ற செய்தியை ஆசிரியர் காட்டுகிறார்இந்த கேள்விஏவாளிடம் கேட்டகப்பட்டது.

3. 'நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்'? (τί με λέγεις ἀγαθόν டி மெ லெகெய்ஸ் அகாதொன்)(காண்க மாற் 10,18இதனை ஒரு மெய்யியல் கேள்வி என எடுக்கலாம்இந்த கேள்வியைவிளங்கிக் கொள்ள இதன் இரண்டாவது வரி பார்க்கப்படவேண்டும்இதன் இரண்டாவது வரியில்'கடவுள் ஒருவரே நல்லவர்என்ற முதல் ஏற்பாட்டு நம்பிக்கையை இயேசு அந்த இளைஞருக்குநினைவூட்டுகிறார் (தி.பா 73,1). இதன் வாயிலாக தன்னை கடவுள் என காட்டுகிறார் எனஎடுக்கலாம்.   இதனை பிரதிபலிப்பு கேள்வி எனவும் எடுக்கலாம்

4. 'ஆனால் நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்'? (ὑμεῖς δὲ τίνα με λέγετε εἶναι ஹுமெய்ஸ் தெடினா மெ லெகெடே எய்னாய் - இருப்பினும் நீங்கள் என்னை யாராக இருக்கிறேன் எனசொல்கிறீர்கள்) (காண்க மாற்கு 8,29). 
இந்த கேள்வியை கேட்கும் முன் மக்கள் தன்னை யாரென கேட்கிறார்கள் என்ற கேள்வியைஇயேசு கேட்கிறார்அதற்கான பதிலையும் அவர்கள் கொடுக்கிறார்கள்அந்த கேள்வியில்திருப்தி
அடையாத இயேசு இன்னொரு கேள்வியையும் கேட்கிறார்இதற்கான விடையை அவர்எதிர்பார்க்கிறார்

5. மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? (δοκεῖτε ὅτι εἰρήνην παρεγενόμην δοῦναι ἐν τῇ γῇ தொகெய்டே ஹொடி எய்ரேனேன் பரெகெநொமேன் தூனாய் என்டே கே) (காண்க லூக் 12,51). 
இதனை எதிர்மறை கேள்வி எனலாம்அதாவது இதன் விடையாக 'இல்லை' என்பதேவரும்.வாசகர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றி யோசிக்க வேண்டும் என்பதை இந்த கேள்விகுறித்துக் காட்டுகிறதுஇந்த கேள்விக்கு வாசகர்கள் உடனடியாக பதிலை தெரிந்துவைத்திருக்க வாய்ப்பில்லை

6. மனிதருக்கு கிடைக்கும் பயன் என்ன? (ὠφεληθήσεται ἄνθρωπος ஓபெலேதேசெடாய்அந்த்ரோபொஸ்) (காண்க மத் 16,26). 
இதனை மெய்யறிவுக் கேள்வி என்ற வகைக்குள் அடக்கலாம்உலகத்தில் மனிதர் எதையும்நித்தியத்திற்கும் வைத்திருக்க முடியாதுஅனைத்தும் கடந்து போகும்ஆக ஆன்மாவைவிடுத்துமற்றவை அனைத்தையும் சேர்த்தாலும் ஏதும் பயனில்லை என்பது புலப்படுகிறதுஇதேகேள்வியை ஏற்கனவே பெரிய அலெக்சான்தர் அரசர் தன்னுடைய மரணத்தின்போது தன்வீரர்களிடம் கேட்டார்இப்படியான கேள்விகள் கிரேக்க உலகத்திற்கு நன்கு தெரிந்திருந்தகேள்விஇந்துகளின் புனித நூல்களில் ஒன்றான பகவத் கீதையிலும்புத்தபெருமானின்போதனைகளிலும் இப்படியான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளனஅவை மனிதருக்கு ஞானத்தைகொடுக்க கேட்கப்பட்டவை

7. நாளைக்கு உங்கள் வாழ்கை எப்படியிருக்கும்? (οἵτινες οὐκ τὸ τῆς αὔριον ποία  ἡ ζωὴ ὑμῶν ஹொடினெஸ் ஊக் டொ டேஸ்  அவுரியோன் பொய்யா ஹே ட்சோஏ ஹுமோன்) (காண்க யூதா4,16). 
இந்த கேள்வி எதிர்காலத்தை மையப்படுத்திய எதிர்மறை பதிலை எதிர்பார்க்கும் கேள்வி
உங்களுக்கு தெரியாதாஎன்ற தோறனையில் இந்த கேள்வி எழுப்பப்படுகிறதுஆகஉங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்இருந்தும் உங்களுக்கு தெரியவில்லை அல்லது நீங்கள்அறிவிலிகளாக 
இருக்கிறீர்கள் என்பது போல் அமைக்கப்பட்டுள்ளது

இப்படியாக விவிலியத்தில் கேள்விகள்சாதாரண வினாக்கள் என்பதையும் தாண்டி அவைபடிப்பினைகளாகவும்இலக்கிய வகையாகவும் இருப்பதை அவதானிக்கலாம்கேள்விகேட்கிறவர்ஆண்டவராகவோ அல்லது ஆசிரியராகவோ இருக்கலாம்சாதாரண மனிதர்களைப்போல விடைதெரியாமல் கேள்வி அமைக்கப்படாமல்விடையை வாசகர்கள் புரிய வேண்டும்என்பதற்காகவே இந்த கேள்விகள் அமைக்கப்படுகின்றன

எசாயா 22,19-23
19உன்னை உன் பதவியிலிருந்து இறக்கிவிடுவேன்உன் நிலையிலிருந்து கவிழ்த்து விடுவேன்.
20அந்நாளில் இல்க்கியாவின் மகனும் என் ஊழியனுமாகிய எலியாக்கிமை நான் அழைத்து, 21உன் அங்கியை அவனுக்கு உடுத்திஉன் கச்சையை அவன் இடுப்பில் கட்டிஉன்அதிகாரத்தை அவன் கையில் ஒப்படைப்பேன்எருசலேமில் குடியிருப்போருக்கும் யூதாகுடும்பத்தாருக்கும் அவன் தந்தையாவான். 22அந்நாளில் தாவீது குடும்பத்தாரின் திறவுகோலைஅவன் தோளின் மேல் வைப்பேன்அவன் திறப்பான்எவனும் பூட்டமாட்டான்அவன் பூட்டுவான்எவனும் திறக்கமாட்டான். 23உறுதியான இடத்தில் அவனை முளைபோல அடித்து வைப்பேன்அவன் தன் தந்தையின் குடும்பத்தாருக்கு மேன்மையுள்ள அரியணையாக இருப்பான்; 24ஆனால்அவன் தந்தை குடும்பத்தினராகிய பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் சிறு கலயங்கள்கிண்ணங்கள் முதல்கலயங்கள்குடங்கள் வரையுள்ள அனைத்துக் கலங்களைப் போல்அவன்மேல் சுமையாக மாட்டித் தொங்கினர். 25படைகளின் ஆண்டவர் உரைத்ததுஅந்நாளில்உறுதியான இடத்தில் அடிக்கப்பட்ட முளை பெயர்ந்து முறிந்து கீழே விழும்அதில் தொங்கியசுமையும் வீழ்ந்து அழியும்என்கிறார் ஆண்டவர்.

அதிகமான ஆய்வாளர்கள் எசாயா புத்தகத்தை மூன்று பரிவுகளாக பிரிப்பர்அதில் இந்த 
இருபத்திரண்டாவது அதிகாரம் முதலாவது பிரிவிற்குள் வருகிறதுஇந்த அதிகாரம் எருசலேமைஎச்சரிப்பது போல அமைந்துள்ளதுஇந்த காலப்பகுதியினுள் எசேக்கியா மன்னன் (கி.மு 715-687எருசலேமில்யூதாவின் அரசராக இருக்கிறார்ஏற்கனவே அசிரியாவடநாடானஇஸ்ராயேலை அழித்திருந்ததுஇந்த காலத்தில் யூதா நாட்டினர் அறிவற்ற விதத்தில்அசிரியாவுடன் உடன்படிக்கை செய்திருந்தனர்அசிரியாவுடன் இவர்கள் செய்தஉடன்படிக்கையே இவர்களுக்கு கண்ணியாக மாறியதுபெரிய அளவிலான பணத்தை தென்நாடுஅசிரியாவிற்கு கப்பமாக கட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதுஇதனை தாங்க முடியாதஅரசர் எசேக்கியாஅசிரியாவை எதிர்க்கத் துணிந்தார்இதற்கு இணையாக எசேக்கியாஎகிப்தின் உதவியையும் நாடினார்எகிப்தும் அசிரியாவும் பரம எதிரிகளாக இருந்தனர்இவர்கள்தங்கள் பேரரசுகளுக்கிடையிலிருந்த சிறிய நாடுகளை தங்கள் கைப்பொம்மைகளாக மாற்றிஅரசியல் விளையாடினர்
இந்த காலப்பகுதியில் எசாயாஎசேக்கியா மன்னனை எகிப்தின் பக்கம் சாராமலும்அசிரியாவிற்கு எதிராக கலகம் செய்யாமலும் இருக்கச் சொல்கிறார்எசாயா எந்த எதிரிநாட்டையும் ஆதரிக்கவில்லை எனினும்யூதாவின் பலவீனத்தையும்அசிரியாவின் பலத்தையும்கருத்தில் கொண்டும்அரசியல் சாணக்கியத்தை நினைவிற் கொண்டும்எசேக்கியா மன்னனைஎச்சரிக்கிறார்எசேக்கியா தனிபட்ட வாழ்வில் ஒரு நல்ல அரசராக இருந்தபடியால் எசாயாஇறைவாக்கினருக்கு அவர்மேல் மதிப்பு இருந்தது (காண்க எசாயா 38,10-20). எசேக்கியாவின்கிளர்ச்சி எருசலேமிற்கு பல அழிவுகளைக் கொண்டுவந்தது என்பதை வரலாற்றில்காண்கின்றோம்இப்படியாக எசேக்கியா மன்னனை தவறான வழியில் கொண்டு சென்றதற்குபலர் காரணமாக இருந்திருக்கிறார்கள்அவர்களில் முக்கியமானவாராக செப்னா-செபுனாஇருக்கிறார் (שֶׁבְנָא ஷெப்னா'). இவர் எசேக்கியா மன்னனின் அரண்மனையில் தலைமைஅதிகாரியாக பணியாற்றியிருக்க வேண்டும்இந்த அதிகாரி தன்னுடைய வரம்பை மீறி தன்அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துஅரசர் தவறான முடிவுகளை எடுக்க காரணமாகஇருந்திருக்கிறார்
(சிலவேளைகளில் தலை சரியாக இருந்தாலும்வால்களின் அலுப்புக்கள் தாங்கமுடியாததாக இருக்கும்இது 2700 ஆண்டுகளுக்கு முன்பும் நடந்திருக்கிறது)

வவ.15-18: இந்த வரிகள் அரண்மனைப் பொறுப்பாளராகிய செபுனாவிற்கு எதிராக வருகின்றனசெபுனா விலையுயர்ந்த கல்லறையை தனக்காக வெட்டியிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது
இஸ்ராயேலருடைய கல்லறை நம்பிக்கை வித்தியாசமானதுகல்லறைகள் வழமையாகஅலங்கரிக்கப்படாதவைஅவை நம்பிக்கையின் அடையாளம் அல்லஇந்த அடையாளம்எசாயாவின் கோபத்தை தூண்டுகிறதுஎசாயா இவர்மேல் கோபம் கொள்ள இது மட்டும்தான்காரணமாஎன்று தெரியவில்லை
செபுனாவை ஆண்டவர் தண்டிப்பார் என சில கடுமையான வார்த்தைகளையும் பாவிக்கிறார்எசாயா இவரிடம் காட்டும் கோபத்தை எசேக்கியாவிடம் காட்டவில்லைஇது எசாயாவிற்குஎசேக்கியாவின் மேல் உள்ள மரியாதையைக் காட்டுகிறதுஅத்தோடு எசாயா செபுனாவின்தேர்ப்படையைப் பற்றி பேசுகிறார்இது செபுனாவின் காலத்தில் யூதேயாவிற்கு ஒரு நல்லதேர்ப்படை இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது (מַרְכְּב֣וֹת כְּבוֹדֶ֔ךָ மர்கெவோத் கெவோதெகாபெருமதியா உன் தேர்கள்).

.19: இந்த வாக்கை ஆண்டவரின் வார்த்தையாக இறைவாக்குரைக்கிறார் எசாயாசெபுனாதன்னுடைய அலுவல்களை இழப்பார் என எச்சரிக்கப்படுகிறார்பின்நாட்களில் இது நடந்ததைவரலாறு காட்டுகிறதுசெபுனா தலைமை அதிகாரியாவிருந்து பின்னர் செயலாளாரக மாறினார்இதனை எசாயாவின் தண்டனையான வார்த்தைகள் என ஆய்வாளர்கள் காண்கின்றனர்

.20: இலக்கியாவின் மகன் எலியாக்கிம் காட்சிக்குள் உள்வாங்கப்படுகிறார் (אֶלְיָקִים בֶּן־חִלְקִיָּהוּ 
'எலியாகிம் பென்-ஹில்கியாஹு). இந்த எலியாக்கிம் செபுனாவை போலல்லாதுஅரசியல்சாணக்கியம் உள்ளவராகக் காட்டப்படுகிறார்இவரை எசாயாவின் வழிகடவுள் 'தன் ஊழியர்என்கிறார் (עַבְדִּי 'அவ்தி- என் பணியாளன்). 
இந்த எலியாக்கிம்தான் அசிரியர்கள் எருசலேமை சூழ்ந்து படைகட்டியபோது அரசருக்காகபரிந்து பேசி பேரம் செய்தவர்கள்எலியாக்கிம் அறிவு முதிர்ந்தவராய்அசிரிய இராணுவதலைவர்களை எபிரேயத்தில் கதைக்காமல்அரமேயத்தில் கதைக்கச் சொல்கிறார்இதனால்எருசலேம் வாழ் மக்கள் அவர்கள் பேசுவதை விளங்காமலும்பயப்படாமலும் இருப்பார்கள் எனநம்புகிறார் (காண்க எசாயா 36,3 - 37-7). இதிலிருந்து இரண்டு விடயங்கள் தெளிவாகிறதுஇந்தகாலத்தில் யூதேயா மக்கள் எபிரேயத்தைத்தான் கதைத்திருக்கிறார்கள்இரண்டாவதாகஎலியாக்கிம் மற்றும் ஏனைய அரச அதிகாரிகளுக்கு அரமேயிக்கம் தெரிந்திருக்கிறதுஇந்தஅரமேயிக்கம் அக்காலத்தில் பன்நாட்டு மொழியாக வழக்கிலிருந்திருக்கிறது
இன்னும் ஆச்சரியமாக அசிரியருக்கும் எபிரேயம் தெரிந்திருக்கிறது. (அக்கால உயர்அதிகாரிகள் தங்கள் அடையாளங்களை நேசித்தாலும்மற்றைய நாட்டு மொழிகளைஅறிந்திருந்தனர் என்பதுதற்கால நம் அதிகாரிகள் ஒரு மொழிக் கொள்கையை மட்டுமேகட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதை நகைக்கிறது). எசேக்கியா மன்னன் அசிரியர்களால்மனவுளைச்சலுக்கு உள்ளானபோதுஇந்த எலியாக்கிம்தான் எசாயா இறைவாக்கினரிடமிருந்துநம்பிக்கையான வார்த்தைகளை பெற்று வந்தார்

.21: அதிகாரமும் பணிகளும் செபுனாவிடமிருந்து எலியாக்கிமிற்கு மாறுவதை இந்த வரிகாட்டுகிறதுஅங்கி மற்றும் கச்சை (כֻּתֹּנֶת குத்தோநெத்ஆடைאַבְנֵט 'அவ்நெத்- இடைக் கச்சைஎன்பவை ஒருவருடைய சமூக அந்தஸ்தைக் காட்டுகின்றனஇவை கழையப்படும் போது அவர்அந்த நிலையை இழக்கிறார் எனவும்உடுத்தப்படும் போதுஅவர் அந்நிலையை அடைகிறார்எனவும் எடுக்கலாம்
இதற்கு மேலாக எலியாக்கிம் எருசலேமிலும் முக்கியம் பெறுகிறார்அவர் அதிகாரத்தைமட்டும் பெறவில்லைமாறாக அவர் எருசலேம் வாசிகளுக்கு தந்தை என்ற நிலையையும்அடைகிறார் (וְהָיָה לְאָב לְיוֹשֵׁב יְרוּשָׁלַ֖ם வெஹாயாஹ் லெ'அவ் லெயோஷெவ் யெரூஷாலாம்). இந்தநிலை யாக்கோபின் மகன் யோசேப்பு எகிப்தில் அடைந்த நிலையை நினைவூட்டுகிறது

.22: எலியாக்கிமின் முக்கியமான முடிவுகள் காட்டப்படுகின்றனதாவீதின் குடுபத்தின்திறவுகோல் இவருக்கு கொடுக்கப்படும் எனப்படுகிறது (מַפְתֵּחַ בֵּית־דָּוִד மப்தெஹா பெத்-தாவித்). இது வீட்டு தலைமை அதிகாரியின் பணியைக் குறிக்கலாம்இவருடைய பணியின் காரம்சொல்லப்படுகிறதுஅதாவது இவருடைய முடிவில் யாரும் தலையிடமாட்டார்கள் என்பதற்குஇவர் பூட்டித் திறப்பார் யாரும் தலையிடமாட்டார்கள் என விளக்கம் கொடுக்கப்படுகிறது

.23: எசாயா எலியாக்கிமை கூடார முளைக்கு ஒப்பிடுகிறார் (יָתֵד யாதெத்முளைபற்றிறுக்கிஆப்புக்கட்டை). முளையின் உறுதியைப் பொறுத்துத்தான் கூடாரத்தின் உறுதியியுமிருக்கும்இந்த கூடாரமாக தாவீதின் வீட்டாரை அதாவது எசேக்கியாவின் வீட்டாரையும்கூடாரமுளையாக எலியாக்கிமையும் ஒப்பிடுகிறார் இறைவாக்கினர்
எலியாக்கிமின் இந்த புதிய பொறுப்புக்கள் அவர் தந்தை வீட்டாருக்கு மாண்பைக்கொண்டுவரும் என்றும் சொல்கிறார்இந்த மாண்பைமேன்மையான அரியணை என்கிறார் 
(כִסֵּא כָבוֹד கிஸ்ஸே காவோத்). 

.24: இந்த வரி கதை நடையை மாற்றுகிறதுஇவ்வளவு நேரமும் எலியாகிமின் பெருமைகளைப்பேசிய எசாயாஎலியாக்கிமின் இறுதி நாட்களையும் எச்சரிக்கிறார்எலியாக்கிமின் மேன்மைக்குபாதகமாக அவர் குடும்பத்தார் மாறுவர் என்பதையும் காட்டுகிறார்அதிகமான விவிலிய பெரும்பாத்திரங்களின் பாதகமான முடிவுநாட்களுக்கு அவர்களின் குடும்பங்களே காரணமாக 
இருந்திருக்கிறார்கள்
எலியாக்கிம் குடும்பத்தார் விளங்கப்படுத்தப்படுகிறார்கள்அவர்கள் பிள்ளைகளும்பேரப்பிள்ளைகளுமாவர்இவர்களுடைய பிழைகளை கலயங்கள்சிறு கலயங்கள்குடங்கள்போன்ற சுமைகள் என்கிறார்எலியாக்கிம் ஒரு முளையாக காட்டப்பட்டிருக்கிறார்இந்தமுளையின் பெறுமதியில் அவர் குடும்பம் தொங்கப்போகிறதுஇதன் தொங்குதல்சுமையாகப்போகிறதுசாதாரணமாக அரசு உயர் அலுவலில் இருக்கும் ஒருவரின் குடும்பம்தாங்களும் அதன் சுகபேகத்தை அனுபவிப்பர்இது எல்லை மீறுகின்றபோது அதுஅந்தஅதிகாரியின் இருப்பையும் மாண்பையும் கேள்விக்குள்ளாக்கும்இந்த நிலைதான்எலியாக்கிமுக்கும் என்கிறார் எசாயாஎசாயா சொன்னது போலவே வரலாற்றிலும்நடந்திருக்கிறது
(அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை அரச பணிக்குள் உட்புகுத்துகின்ற வேளைபலவிதமான இன்னல்களை சந்திப்பர்இந்த நிலை அன்றும் நடந்திருக்கிறதுஇன்றும்நடக்கிறதுவீட்டில் ஒருவர் குருவானார்அவர் சகோதரர்கள் ஆயர்கள் ஆகிறார்கள்வீட்டில்ஒருவர் வைத்தியரானால் அவர் உறவினர்களும் வைத்திய ஆலோசகர்கள் ஆகிறார்கள்வீட்டில்ஒரு அமைச்சர் இருந்தால் அவர் உறவினர்கள் இல்லங்கள் எல்லாம் விரைவாக அபிவிருத்திஅடைகின்றனஎன்ன சொல்ல..). 

.25: எலியாக்கிமின் முடிவும் அவர் துணையில் தொங்கும் குடும்பத்தின் நிலையும்காட்டப்படுகிறதுஇந்த எச்சரிக்கையை படைகளின் ஆண்டவரே உரைத்ததாகச் சொல்லிதன்இறைவாக்கை உறுதிப்படுத்துகிறார்படைகளின் ஆண்டவர் (יְהוָה צְבָאוֹת அதோனாய் ட்செபா'ஓத்என்பது விவிலியம் பாவிக்கும் ஆண்டவரின் மிக முக்கியமான பெயர்
எலியாக்கிமின் நிலை இறுதிக்காலத்தில் பெயர்க்கப்படும் என்கிறார்இது யூதேயாவின்இறுதி நாட்களைக் காட்டுகிறதுஎலியாக்கிம் என்கின்ற முளைஉடைகின்றபோது அதில்தொங்குகின்ற பாத்திரங்களும் உடைகின்றனஇது இவர் குடும்பத்தின் நிலையைக்காட்டுகிறது

திருப்பாடல் 138
நன்றிப் பாடல்
(தாவீதுக்கு உரியது)

1ஆண்டவரேஎன் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்தெய்வங்கள் முன்னிலையில்உம்மைப் புகழ்வேன்
2உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்உம் பேரன்பையும்உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்ஏனெனில்அனைத்திற்கும்மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்
3நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்என் மனத்திற்கு வலிமை அளித்தீர்
4ஆண்டவரேநீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டுஉம்மைப் போற்றுவர்
5ஆண்டவரேஉம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்ஏனெனில்உமது மாட்சி மிகப்பெரிது! 6ஆண்டவரேநீர் உன்னதத்தில் உறைபவர்எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்ஆனால்செருக்குற்றோரைத் தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர்
7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும்என் உயிரைக் காக்கின்றீர்என் எதிரிகளின் சினத்துக்குஎதிராக உமது கையை நீட்டுகின்றீர்உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்
8நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்ஆண்டவரேஎன்றும் உள்ளதுஉமது பேரன்புஉம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.

திருப்பாடல் 138 தனிமனித புகழ்ப்பாடல் என திருப்பாடல் ஆய்வாளர்கள்வகைப்படுத்துகின்றனர்இதன் முன்னுரை இந்தப் பாடல் தாவீதுக்குரியது எனக் காட்டுகிறதுதனி மனித அனுபவங்கள் கூட கடவுளின் இயல்பை சமூகத்திற்கு காட்டக்கூடியவை என்பதைஇங்கே காணலாம்இந்த பாடலை தாவீதுதான் பாடினார் என்று சிலர் வாதிடுகின்றனர்தாவீதுகடவுளிடம் பெற்ற அருளுக்கு அடையாளமாக இந்த பாடலை இசைத்திருக்க வேண்டும்என்கின்றனர்இதன் பின்புலமாக பிலிஸ்தியருக்கு எதிரான போரை ஆய்வாளர்கள்காட்டுகின்றனர் (காண்க 2சாமுவேல் 5,17-21). 
பால்-பெராட்சிம் என்ற இடத்தில் தாவீது முதல் தடைவையாக அரசராக பிலிஸ்தியரைவென்று அவர்களுடைய தெய்வச் சிலைகளை கைப்பற்றுகிறார்இவை கடவுள் இஸ்ராயேலோடு 
இருக்கிறார் என்பதைக் காட்டியது

.1: தாவீது தான் கடவுளுக்கு முழு மனத்தோடு நன்றி செலுத்துவதாக சொல்கிறார் 
(אוֹדְךָ בְכָל־לִבִּי 'ஓதெகா வெகோல்-லிப்பி). முழு மனதைக் குறிக்க முழு இதயத்தோடு என்ற சொல்பாவிக்கப்பட்டுள்ளது
தெய்வங்கள் முன்னிலையில் தான் கடவுளைப் புகழ்வதாகவும் சொல்கிறார்இந்த வரிமூலமாக பல கடவுள் நம்பிக்கையில் இந்த ஆசிரியர் நம்பிக்கை உடையவராக இருந்தாரா என்றகேள்வி எழுகிறதுதெய்வங்கள் என்று இவர் கருதுபவை இவருடைய எதிரி நாட்டின் கடவுளாக 
இருந்திருக்கலாம் (אֱלֹהִים אֲזַמּרֶךָּ 'எலோஹிம் 'அட்சாம்மெரெகா). தெய்வங்களைக் குறிக்கஎலோஹிம் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளதுஇது கடவுளைக் குறிக்க பயன்படும் சொல்என்பதை நினைவில் கொள்வோம்

.2: தாவீது தான் திருக்கோவிலை நோக்கி திரும்பி தாள் பணிவதாக சொல்கிறார்இங்கேதிருக்கோவில் (היכַל קָדְשְׁךָ֡ ஹெகால் காத்ஷெகா- உம்முடைய திருக்கோவில்என்பது எதனைக்குறிக்கிறது என்பது தெரியவில்லைதாவீதுடைய காலத்தில்நிச்சயமாக எருசலேம் தேவாலயம்இருந்திருக்கவில்லைஆனால் ஆண்டவருடைய சந்திப்புக் கூடாரம் மற்றும் உடன்படிக்கைபேழை நகருக்கு வெளியில் இருந்ததுஇங்கே பாவிக்கப்படும் சொல் எருசலேம் தேவாலயத்தைகுறிப்பது போல உள்ளதுஇப்படியானால்இந்த பாடலின் ஆசிரியராக தாவீது இருக்கமுடியாது
ஆசிரியர் தான் ஆண்டவருக்கு அவருடைய பேரன்பையும் (חֶסֶד ஹெசெத்), உண்மையையும்(אֱמֶת 'எமெத்முன்னிட்டு நன்றி சொல்லவதாக அறிக்கையிடுகிறார்ஆண்டவருக்கு நன்றிசொல்வதை அவர்ஆண்டவரின் பெயருக்கு நன்றி சொல்வதாக சொல்கிறார்ஆண்டவரை காணமுடியாது எனவே அவரின் பெயருக்கு நன்றி சொல்வது அடையாளமாக அமைகிறது.
இதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார்அதாவது கடவுள் அனைத்திற்கும் மேலாக தன்பெயரையும் (שֵׁם ஷெம்வாக்கையும் (אִמְרָה 'இம்ராஹ்மேன்மையுறச் செய்துள்ளார்.  

.3: ஆண்டவரிடம் பலர் பலவற்றிக்காக மன்றாடுகின்றனர்சில வேளைகளில் இந்தமன்றாட்டுக்கள் காலம் தாழ்த்தியே கேட்கப்படுகின்றன என்ற அனுபவத்தை சிலர் பெறுகின்றனர்இதனால் மன்றாட்டுக்கள் சரியான காலத்தில் கேட்கப்பட்டால் அது வித்தியாசமானஉணர்வுகளைக் தரவல்லதுஇந்த அனுபவத்தைத்தான் ஆசிரியர் உணர்கிறார்ஆண்டவரின்செவிசாய்ப்பு (עָנָה 'ஆனாஹ்இவரின் மனத்திற்குமனவலிமையை (עֹז 'ஒட்ஸ்தருவதாகச்சொல்கிறார்

.4: ஆண்டவரின் சொற்களை நினைவுகூறுகிறார்இந்த சொற்கள் நம்பிக்கை அல்லதுவெற்றியின் சொற்களாக இருந்திருக்கலாம்இவை முக்கியமானவையாக இருப்பதால் அவற்றைபலர் நினைவுகூறுவர் என்கிறார் போல் (אִמְרֵי־פִֽיךָ 'இம்ரெ-பிகா- உம்முடைய வாயின் சொற்கள்). 
பூவுலகின் மன்னர்கள் என்பவர்கள் (כָּל־מַלְכֵי־אָרֶץ கோல்-மெல்கே-'அரெட்ஸ்தாவீதின்நாட்டைச் சுற்றியிருந்த அரசர்களைக் குறிக்கலாம்தாவீது இவர்களை எதிரிகள்என்றழைக்காமல்அவர்களை மரியாதையோடு ஒப்பிடுகிறார்

.5: இவர்கள் ஆண்டவரின் மிகப் பெரிய மாட்சிமையின் பொருட்டுஅவரை புகழ்ந்து பாடுவர்என்கிறார்ஆண்டவரின் மிகப் பெரிய மாட்சிமை என்பது பாடலாசிரியரின் வெற்றியைக்குறிக்கலாம்அந்த வெற்றி அவரின் கடவுளுடைய மாட்சியைக் காட்டுகிறது (גָדוֹל כְּבוֹד יְהוָה காதோல் கெவோத் அதோனாய்). 

.6: ஆண்டவர் உன்னதத்தில் உறைபவர் என்பது எபிரேய நம்பிக்கை (רָם יְהוָה ராம் அதோனாய்). இதே நம்பிக்கையைத்தான் இஸ்ராயேலரைச் சுற்றியிருந்தவர்களும் தங்கள் தெய்வங்களில்வைத்திருந்தனர்ஆனால் இஸ்ராயேலரின் நம்பிக்கை இதனையும் தாண்டிஇந்த கடவுள்உன்னதத்தில் இருந்தாலும்நேரடியாக மண்ணகவாசிகளை நேசிக்கிறார் என்பதைக்கூடுதலாகக் காட்டுகிறது.
இது ஆண்டவருடைய பலவீனம் அல்லஏனெனில் செருக்குற்றவர்களை அவர் அவர்களின்இடத்திலேயே அறிகிறார் என்கிறார் ஆசிரியர்

.7: இந்த வரி தாவீதின் தனிப்பட்ட அனுபவத்தையும்கடவுள் செய்த உதவியையும் நினைப்பதுபோல அமைந்திருக்கிறது
தான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும்அவருடைய உயிர் காக்கப்பட்டுள்ளது எனவிளக்கப்பட்டுள்ளதுதாவீது இப்படியான பல அனுபவங்களை கடந்திருக்கிறார்ஆசிரியர் எந்தஇடத்தில் இப்படியான அனுபவத்தை பெற்றார் என விளக்கவில்லைசிலர் இதற்குதாவீதுபிலிஸ்தயருடன் போரிட்டு வெற்றி கண்ட நிகழ்வை பின்புலமாகக் காட்டுகின்றனர்
தன்னுடைய எதிரிகளின் சினத்திற்கு எதிராக ஆண்டவர் தன் கையை நீட்டுகிறார் என்பதுதாவீதுடைய எதிரிஆண்டவருடைய எதிரியாக மாறுவதாகக் கொள்ளலாம்ஆண்டவருடையகை (יָדֶךָ யாதெகாஉமது கைஎன்பதுஅவருடைய வல்லமையை அல்லது பலத்தைக்குறிக்கிறது

.8: ஆண்டவர் வாக்களிக்கின்ற அனைத்தையும் செய்கிறவர்இதனை எதிர்கால வினையில்நினைக்கிறார் ஆசிரியர்அதற்கான காரணமாகஆண்டவருடைய பேரன்பைக் காட்டுகிறார்ஆண்டவருடய பேரன்பு என்றும் உள்ளபடியால் அவர் வாக்களித்த அனைத்தையும் செய்கிறவர்ஆகிறார்
தாவீது தன்னை ஆண்டவரின் கைவினைப் பொருளாகக் காண்கிறார் (מַעֲשֵׂי יָדֶיךָ மா'அசெயாதேகாஉமது வேலைப் பொருள்). இது சிற்பி மற்றும் சிற்பம் என்ற உருவகத்தைநினைவூட்டுகிறதுஆண்டவரை சிற்பியாகவும்குயவனாகவும் வருணிப்பது எபிரேயவிவிலியத்தில் அடிக்கடி வருகிறது.  

உரோமையர் 11,33-36
33கடவுளின் அருள் செல்வம் எத்துணை மிகுதியானதுஅவருடைய ஞானமும் அறிவும் எத்துணைஆழமானவைஅவருடைய தீர்ப்புகள் அறிவுக்கு எட்டாதவைஅவருடைய செயல்முறைகள்ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! 34'ஏனெனில் ஆண்டவரின் மனத்தை அறிபவர் யார்அவருக்குஅறிவுரையாளராய் இருப்பவர் யார்? 35தமக்குக் கைம்மாறாக ஏதாவது கிடைக்கும் எனமுன்னதாகவே அவரிடம் கொடுத்து வைத்தவர் யார்?' 36அனைத்தும் அவரிடமிருந்தே வந்தன்அவராலேயே உண்டாயின் அவருக்காவே இருக்கின்றனஅவருக்கே என்றென்றும் மாட்சிஉரித்தாகுகஆமென்.

உரோமையர் திருமுகத்தின் பதினொராவது அதிகாரம் மூன்று முக்கியமான தலைப்பில் 
இறையியல் செய்கிறதுவவ.1-10: இஸ்ராயேலருள் எஞ்சியோரைப் பற்றிப் பேசுகிறதுவவ.11-24: பிற இனத்தாரின் மீட்பை பற்றிப் பேசுகிறதுவவ.25-36: இஸ்ராயேலர் இழந்த நிலையைமீண்டும் அடைதல் என்று பிரிக்கப்பட்டுள்ளதுஉரோமைய திருச்சபை பிறவினத்தாரை மையமாககொண்டுள்ள திருச்சபை என்பதால் யார் பிறவினத்தவர்அவர்களின் நிலை என்னகடவுள்பார்வையில் அவர்களின் பெறுமதி என்னபோன்ற கேள்விகளை பவுல் அவதானமாகவிளங்கப்படுத்த வேண்டியவராக இருக்கிறார்பவுல் பிறவினத்தவர்களின் திருத்தூதர் எனஅறியப்பட்ட அதேவேளை அவர் யூத மக்களை வெறுக்கும் திருத்தூதர் அல்ல என்பதையும்தெளிவுபடுத்த வேண்டியவராக இருக்கிறார்
பின்வரும் வரிகள் கடவுளின் செல்வம்ஞானம்அறிவுதீர்ப்புபோன்றவை மனித அறிவிற்குஅப்பாற்பட்டவைஅத்தோடு அவற்றை மனிதர் ஆராச்சிக்கு உட்படுத்த முடியாது என்றும்முடிக்கிறார்இதற்கு எசாயா 40,13: தி.பா 139,17-18: எசாயா 55,8 போன்ற இறைவார்த்தைகளைபயன்படுத்தி தன்னுடைய விவாதத்தை முன்வைக்கிறார்

.33: பவுல் கடவுளின் அருட்செல்வத்தை எழுவாய்ப் பொருளாக எடுத்து விளக்க முயற்சிக்கிறார்கடவுளின் அருட்செல்வத்திற்கு ஒத்த கருத்துச் சொற்களாக அவருடைய ஞானத்தையும்அறிவையும் ஒப்பிடுகிறார் (πλοῦτος புளுடொஸ்- செல்வம்σοφία சோபியா- ஞானம்: γνῶσιςகுனோசிஸ்- அறிவு). 
இந்த சிந்தனையை இந்த வரியின் இரண்டாவது பிரிவு மேலும் விளக்குகின்றதுஆண்டவருடைய தீர்ப்புக்கள் அறிவிற்கு எட்டாதவை எனப்படுகிறதுஅதேபோல அவர்செயல்முறைகளும் ஆராய்சிக்கு அப்பாற்பட்டவை எனப்படுகிறது (κρίμα கிரிமாதீர்ப்புὁδόςஹொடொஸ்பாதை). இந்த வரியின் மூலம்கடவுள் மனித உலகத்திற்குள்ளும் அவர்களின்சிந்தனைகளுக்குள்ளும் அடக்கப்பட முடியாதவர் என்பது காட்டப்படுகிறது

.34-35: வசனம் 33 சொன்ன வாதத்தைசில முதல் ஏற்பாட்டு வரிகளைக் கொண்டு விளக்கமுயல்கிறார் பவுல்
.34, எசாயா 40,13-14 வரியை நினைவூட்டுகிறதுஇந்த வரியில் பவுல் கேள்வி கேட்கிறார்அதாவது ஆண்டவருடைய மனத்தை அறிபவர் யார்அவருக்கு அறிவுரையாக இருப்பவர் யார்இதனைத்தான் எசாயாவும் தன் இறைவாக்கில் 'இஸ்ராயேலின் ஒப்பற்ற கடவுள்என்ற பகுதியில்விளக்குகிறார்
13ஆண்டவரின் ஆவிக்கு வழிகாட்டியவர் யார்அவருக்கு அறிவுரையாளனாய் இருந்துகற்றுத்தந்தவர் யார்
14யாரிடம் அவர் அறிவுரை கேட்டார்அவருக்குப் பயிற்சி அளித்துநீதிநெறியைஉணர்த்தியவர் யார்அவருக்கு அறிவு புகட்டிவிவேக நெறியைக் காட்டியவர் யார்?

.35: இரண்டாவது கேள்வியை முன்வைக்கிறார் பவுல்இப்போது யோபு புத்தகத்திலிருந்துஇறைவார்த்தையை பாவிக்கிறார்காண்க யோபு 41,11. 
11அதனை எதிர்த்து உயிரோடிருந்தவர் எவராவது உண்டோவிண்ணகத்தின்கீழ்அப்படிப்பட்டவர் யாருமில்லைஇந்த இறைவார்த்தை யோபு புத்தக வரியை அப்படியே பிரதிபலிக்காவிட்டாலும்அதன் சிந்தனையை தாங்கியுள்ளது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

.36: இந்த வரி மிக முக்கியமான வரிஇந்த வரியில் பிரபஞ்சத்தின் இருப்பியலுக்கு முடிவுரைஎழுதுகிறார் பவுல்அனைத்தும் கடவுளிலிருந்து வந்தனகடவுளாலேயே உருவாயினஅவருக்காகவே இருக்கின்றன என்கிறார்ὅτι ἐξ αὐτοῦ καὶ δι᾿ αὐτοῦ καὶ εἰς αὐτὸν τὰ πάντα· ஹொடி எக்ஸ் அவுடுகாய் தி அவுடு காய் எய்ஸ் அவுடொன் டா பான்டா). இந்த வரி யோவான்நற்செய்தியின் 1,1 வரியை நினைவூட்டலாம்
இந்த கடவுளுக்கே மாட்சி என்றென்றும் கொடுக்கப்படவேண்டும் என முடிக்கிறார்

மத்தேயு 16,13-20
இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை
(மாற் 8:27 - 30: லூக் 9:18 - 21)
13இயேசுபிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார்அவர் தம் சீடரை நோக்கி, 'மானிடமகன்யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' என்று கேட்டார். 14அதற்கு அவர்கள், 'சிலர் திருமுழுக்குயோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிறஇறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்என்றார்கள். 15'ஆனால் நீங்கள்நான் யார்எனச் சொல்கிறீர்கள்?' என்று அவர் கேட்டார். 16சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியாவாழும் கடவுளின் மகன்என்று உரைத்தார். 17அதற்கு இயேசு, 'யோனாவின் மகனான சீமோனேநீ பேறு பெற்றவன்ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லைமாறாகவிண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். 18எனவே நான் உனக்குக்கூறுகிறேன்உன் பெயர் பேதுருஇந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. 19விண்ணரசின் திறவுகோல்களை நான்உன்னிடம் தருவேன்மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்என்றார். 20பின்னர்தாம்மெசியா என்பதை எவரிடமும் சொல்லவேண்டாம் என்று இயேசு சீடரிடம் கண்டிப்பாய்க்கூறினார்.

பேதுருவுக்கும் இயேசுவிற்கும் இடையிலான உரையாடல்கள் மிக சுவாரசியமானவைஅதிகமான உரையாடல்களில் பேதுரு சரியாக தொடங்கி முடிவில் பிழையான அறிவுரையைச்சொல்லப் போய் ஆண்டவரிடம் நல்ல திட்டு வாங்குவார்இந்த பகுதியில் பேதுரு அனைத்துசீடர்களின் மனநிலையையும் பிரதிபலிக்கிறார் எனலாம்இந்த பகுதி மூன்று நற்செய்திகளிலும்பதியப்பட்டுள்ளதுஇதனால் இந்த பகுதி மிகவும் முக்கியமான இடத்தை பெற்றிருக்கிறதுஎனலாம்
மத்தேயு நற்செய்தியின் 16வது அதிகாரம் நான்கு பிரிவுகளைக் கொண்டுஅமைக்கப்பட்டுள்ளது
ஆண்டவரிடம் அடையாளம் கேட்டல்வவ 1-4.
பரிசேயர்சதுசேயரைப் பற்றிய அவதானம்வவ. 5-12
பேதுருவின் அறிக்கைவவ. 13-20
இயேசு தன் சாவை முதல் தடவை அறிவித்தல் வவ.21-28
இந்த வரியை விசுவாசத்திற்கும்விசுவாசமின்மைக்கும் இடையிலான போராட்டத்தைவிளக்கும் அதிகாரம் என எடுக்கலாம்

.13: இயேசு பிலிப்பு செசாரியா பகுதிகளுக்குச் செல்கிறார்இந்த பிலிப்பு செசாரியா எர்மோன்மலைக்கு அடியில் இருந்த ஒரு பசுமையான நகர்கோடை காலத்திலும் நீர் கிடைக்கக்கூடியமிகவும் வளமான வட இஸ்ராயேலின் ஒரு பகுதிஇதனுடைய பழைய பெயர் பெனயாஸ்பெரியஏரோதின் மகனாக பிலிப்புபிலிப்பியாவின் குறுநில மன்னராக இருந்தார்பிலிப்பு இந்த நகரைபுதுப்பித்தார்இதனை அகுஸ்து சீசருக்கு அர்ப்பணித்து அதனை செசாரியா என்று பெயர்சூட்டினார்கடலோர செசாரியாவிலிருந்து இதனை அடையாளப்படுத்த இதனை பிலிப்பிசெசாரியா என அழைத்தார்இந்த நகர்தான் பிலிப்புவுடைய அரச மற்றும் சமய தலைநகராகவிளங்கியதுஇந்த நகரின் ஊடாக பல முக்கியமான பிரதான வணிக வீதிகள் சென்றதினால்பொருளாதார ரீதியிலும் இந்த நகர் முக்கியம் பெற்றிருந்தது.  
இந்த இடத்தில்தான் பேதுரு தன்னுடைய மிக முக்கியமான விசுவாச அறிக்கையைவெளிவிட்டார் என்பதிலிருந்து இந்த இடத்தின் முக்கியத்துவம் தெரிகிறது என்றும் சிலர்வாதிடுகின்றனர்கி.பி 60களில் இந்த நகர் இரண்டாம் அக்கிரிப்பா மன்னனால் மீளவும்கட்டப்பட்டதுபின்னர் இதனை அவர் நீரோ சீசரை மகிழ்ச்சிப்படுத்த நெரோனியஸ் என்ற பெயர்மாற்றம் செய்தார்நீரோ சீசரின் மரணத்தின் பின் இந்த நகர் மீண்டும் பழைய பெயரையேபெற்றதுஉரோமைய உலகத்திலே இந்த இடம் மிக முக்கியமான இடமாக இருந்திருக்கிறதுபல சீசர்கள் இங்கே தங்களுடைய இராணுவத்தை தங்க வைத்திருக்கிறார்கள்யூத-உரோமையபோரின் போது இங்கிருந்துதான் உரோமைய இராணுவம் புறப்பட்டிருக்கிறது (கி.பி 66-70). 
இயேசு இந்த இடத்திற்கு சென்றிருக்கிறார் என்பதிலிருந்து இயேசு வடக்கு இஸ்ராயேல்பிரதேசம் வரை பயணம் செய்திருக்கிறார் என்பது புலப்படுகிறதுஇந்த இடத்திலிருந்து மானிடமகனை மக்கள்யார் என சொல்கிறார் என்ற ஒரு முக்கியமான கேள்வியை அனைத்துசீடர்களையும் பார்த்து கேட்கிறார் (τὸν υἱὸν τοῦ ἀνθρώπου டொன் ஹுய்யோன் டூ அந்ரோபூமானிட மகனை).
மானிட மகன் என்ற இறையியல் பதத்தை சிலர் சாதாரண பதமாகவும்சிலர் விவிலியஅடையாள பதமாகவும் பார்க்கின்றனர் (ὁ υἱὸς τοῦ ἀνθρώπου ஹொ ஹுய்யோஸ் டூ அந்த்ரோபூமனிதனின் மகன்). முதல் ஏற்பாட்டில் தானியேல் புத்தகத்தில் இந்தச் சொல்பாவிக்கப்பட்டுள்ளது (காண்க தானியேல் 7,13). முதல் ஏற்ப்பாட்டு மற்றும் புதிய ஏற்பாட்டுபுத்தகங்களில் இந்த சொல்லாடல்களுக்கிடையே பல வித்தியாசங்களும் மாற்றங்களும்இருப்பதாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்இயேசு இந்த சொல்லை அதிகமாகபயன்படுத்துகிறார்இயேசு இந்த சொல்லிற்கு என்ன அர்த்தத்தைக் கொடுத்தார் என்பதுதெளிவாக இல்லைபல ஊகங்கள் இந்த சொல்லின் அர்த்தமாக முன்வைக்கப்படுகிறது

இயேசு தன்னை மெசியாவாக அடையாளப் படுத்த
இயேசு தன்னை சாதாரண பாலஸ்தீன மனிதனாக காட்ட
இயேசு தன்னை புதிய ஆதாமாக உருவகிக்க
இயேசு தன்னை இரண்டாம் வருகை கடவுளின் மகனாக வர்ணிக்க
போன்ற தொனியில் இந்த சொல்லை பயன்படுத்தியிருக்கலாம் என்று பல ஆய்வாளர்கள்வாதிடுகின்றனர்இயேசுவின் கேள்வி நேரடியாக சீடர்களை நோக்கிஆனால் மக்களைப்பற்றியதாகவே இருக்கிறது

.14: சீடர்களின் பதிலை பதிவு செய்கிறார் மத்தேயுஅவர்கள்இயேசுவை மக்கள் திருமுழுக்குயோவான்எலியாஎரேமியா மற்றும் வேறு இறைவாக்கினருள் ஒருவர் என காண்கின்றனர்என்கிறார்கள்திருமுழுக்கு யோவான் சற்று நாட்களுக்கு முன்னர்தான் இறந்திருந்தார்இருப்பினும் அவர் உண்மையாக இறக்கவில்லைஅவர் வருவார் என்ற நம்பிக்கை நிலவியதுஎலியா இறைவாக்கினர் மெசியாவின் வருகைக்கு முன்னர் வருவார் என்ற நம்பிக்கையும்இஸ்ராயேல் மக்களிடையே ஆழமாக நிலவியது (காண்க மலாக்கி 4,5). எரேமியாஇறைவாக்கினர்பபிலோனியரிடம் எருசலேம் வீழ்ந்தபோதுஎகிப்திற்கு தப்பி போயிருந்தார்அங்கே அவருக்கு என்ன நடந்தது என்று இஸ்ராயேலருக்கு முழுமையாக தெரியாதிருந்ததுஎனவே அவரும் மீண்டும் வருவார் என இவர்கள் நம்பியிருந்திருக்கலாம்
இயேசுவை பல இடங்களில் மக்கள் இறைவாக்கினராக கண்டிருக்கின்றனர்இதனையேசீடர்களும் இயேசுவிடம் அறிக்கையிடுகிறார்கள்இதனை அவர்கள் மக்களின் பதில்களாகத்தான்தருகிறார்கள்

.15: இயேசு இந்த பதிலால் திருப்தியடைந்ததாக தெரியவில்லைஏனெனில் அவரும் இந்தபதிலை ஏற்கனவே கேள்விப்பட்டிருப்பார்இதனால்தான் அவர் 'நீங்கள் என்ன சொல்கிறீர்கள்என்கிறார் (ὑμεῖς δὲ τίνα με λέγετε εἶναι ஹுமெய்ஸ் தெ டினா மெ லெகெடெ எய்னாய்). இந்தகேள்வி சாதாரண கேள்வியாக கருதப்படக்கூடாதுமாறாக இயேசு தன் சீடர்களிடம்தன்னைஅவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்களா என்பதை சோதிப்பதாக அமைந்துள்ளது போலதோன்றுகிறதுஇவர்களுடைய பதிலையும் இயேசு ஏற்கனவே அறிந்திருப்பதற்கான வாய்ப்பும்உள்ளது

.16: சீமோன் பேதுருவின் விசுவாச அறிக்கை சொல்லப்படுகிறதுஇந்த வரியில் பேதுருசீமோன் பேதுருஎன்று முழுப்பெயரில் எழுதப்படுகிறார்இது இவரின் முக்கியத்துவத்தையும்அவர் அறிக்கையின் முக்கியத்துவத்தையும் காட்ட இருக்கலாம் (Σίμων Πέτρος ட்சிமோன்பெட்ரொஸ்). 
பேருவின் அறிக்கை முழு திருச்சபையின் அறிக்கை அல்லது திருச்சபை கொண்டிருக்கவேண்டிய அறிக்கையை காட்டுகிறதுநீர் மெசியாவாழும் கடவுளின் மகன் என்பதுதான் முழுபுதிய ஏற்பாட்டின் மையக் கருத்து (σὺ εἶ ὁ χριστὸς ὁ υἱὸς τοῦ θεοῦ  τοῦ ζῶντος. சு எய் ஹொகிறிஸ்டொஸ் ஹொ ஹுய்யோஸ் டூ தியூ டூ ட்சோன்டோஸ்). இதனை பேதுரு மிக அழகாகவும்ஆணித்தரமாகவும் சொல்கிறார்இந்த வரிகள் பேதுருவின் விசுவாசத்தின் முதிர்ச்சியைக்காட்டுகிறது
சில ஆய்வாளர்கள் இந்த வரிகள் ஆண்டவரின் உயிர்ப்பின் பின்னர் பேதுரு கொண்டிருந்தவிசுவாசத்தின் அடையாளம் என்கின்றனர்

.17: மற்றைய நற்செய்திகளைவிட மத்தேயு இந்த வரியில் வித்தியாசப்படுகிறார் (ஒப்பிடுகமாற்கு 8,27-30: லூக்கா 9,18-21). இந்த இடத்தில் பேதுருவின் முக்கியத்துவம் காட்டப்படுகிறதுஇயேசு பேதுருவை முழுப்பெயரில் அழைத்து அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்கிறார் (μακάριος εἶ Σίμων  Βαριωνᾶ மாகரியோஸ் எய் ட்சிமோன் பாரியேனா). இதன் மூலம் இந்த விசுவசத்தைவெளிப்படுத்தும் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பது புலப்படுகிறதுஅத்தோடு இதுஒரு தெய்வீக விசுவாசம் எனவும்இதனை மனிதர் அல்ல கடவுள்தான் வெளிப்படுத்தக் கூடியவர்என்பதையும் காட்டுகிறார்ஆக கிறிஸ்தவர்களின் இந்த விசுவாசம் மனித விசுவாசம் அல்லமாறாக அது தெய்வீக விசுவாசம் என்பது புலப்படுகிறதுஇந்த விசுவாசத்தைக் கொள்ளாதோர்கடவுளின் வெளிப்பாட்டை அறியாதோர் என்பதும் புலப்படுகிறது
கடவுளை இயேசு விண்ணகத்திலுள்ள என் தந்தை என அழைக்கிறார் (ὁ πατήρ μου ὁ  ἐν τοῖς οὐρανοῖς ஹொ பாடேர் மூ ஹொ என் டொய்ஸ் ஹுராநொய்ஸ்). 

.18: பேதுருவின் அறிக்கையால் மகிழ்ந்த இயேசு தன் ஆசிர்வாதத்தை பேதுருவிற்குகொடுக்கிறார்.
இயேசு அதிகாரத்தோடு பேசுகிறார். 'நான் உனக்கு கூறுகிறேன்' (κἀγὼ δέ σοι λέγω காகோதெ சொய் லெகோஆனால் நான் உனக்கு சொல்கிறேன்என்பது அவருடைய தெய்வீகத்தைக்குறிக்கிறது என எடுக்கலாம்இயேசு பேதுருவை பாறை என்கிறார்பெட்ரொஸ் (Πέτροςஎன்றஆண்பால் பெயர்ச் சொல்லின் பெண்பால் பெயர்ச்சொல் பெட்ரா (πέτρᾳஎன்று வரும்இதன்அர்த்தம் பாறையைக் குறிக்கிறது
இந்த வரியில்தான் முதல் முதலின் 'திருச்சபை' (ἐκκλησία எக்கலேசியாபுனிதசபைஎன்றசொல்மத்தேயு நற்செய்தியில் பாவிக்கப்படுகிறதுஎக்லேசியா என்ற சொல் முதல் ஏற்பாட்டில்
இஸ்ராயேல் மக்களைக் குறிக்க கஹால் (קָהָלஎன்று பாவிக்கப்பட்டதுஇயேசு தன்திருச்சபையை பேதுரு என்கின்ற பாறை மேல் கட்டுவதாகச் சொல்கிறார்அத்தோடுபாதாளத்தின் வாயில்கள் (πύλαι ᾅδου புலாய் ஹதூஅதன் மேல் வெற்றி கொள்ளா என்கிறார்பாதாளத்தின் வாயில்கள் என்று எதனைக் குறிக்கிறார் என்பது தெளிவாக இல்லைசிலர்இதனை நரகம் என்கின்றனர்சிலர் இதனை பிரிவினைவாதம் என்கின்றனர்இன்னும் சிலர்இதனை உரோமைய பேரரசு என்கின்றனர்பிலிப்பு செசாரியாவில் இந்த மூன்றாவது அர்த்தம்முக்கியத்துவம் பெறலாம்
பாதாளத்தின் வாயில்கள் என்பது யூதர்களுக்கு அக்காலத்தில் நன்கு தெரிந்திருந்த ஒருஉருவகம்

.19: பேதுருவிற்கு மேலதிகமாக சில விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன
விண்ணகத்தின் திறவுகோல்கள் அவரிடம் கொடுக்கப்படுகிறது (κλεῖδας τῆς βασιλείαςகிலேய்தாஸ் டேஸ் பாசிலெய்யாஸ்). திறவு கோல்கள் அதிகாரத்தைக் குறிக்கின்றனஇந்தவரியின் மூலம் பேதுரு விண்ணகத்தின் அதிகாரத்தைப் பெறுகிறார்அக்காலத்தில்அரண்மனையின் திறவு கோல்களை வைத்திருப்பவர் வீட்டின் தலைமை அதிகாரியாகக்கருதப்பட்டார்இந்த நிலைக்கு பேதுரு உயர்த்தப்படுகிறார்

மண்ணுலகில் பேதுரு தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்மண்ணுலகில்அவர் அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்இது பேதுருவின் பணி அதிகாரத்தைக்காட்டுகிறது என்கின்றனர் சில ஆய்வாளர்கள்இந்த வரியைக் கொண்டேகுருக்களுக்குஒப்புரவு திருவருட்சாதன பணி கொடுக்கப்பட்டுள்ளது என திருச்சபையின் தந்தையர்கள் ஆரம்பகாலத்தில் வாதாடினார்கள்அனுமதிப்பதும்தடைசெய்வதும் ஓரு வீட்டு தலைமை அதிகாரியின்மிக முக்கியமான பணிஇதனைத்தான் பேதுரு பெறுகிறார்
ஒரு சில முக்கியமான ஆய்வாளர்கள்இந்த வரிகள் ஆரம்ப கால திருச்சபையுடையதுஎனவும்இது இயேசு ஆண்டவர் உயிர்த்த பின்னர் உருவானவை எனவும் வாதிடுகின்றனர்
இங்கே இருக்கின்ற வார்த்தை பிரயோகங்கள் காலத்தால் மிகவும் பிந்தியது எனகாட்டுகின்றனர்

.20: இந்த வரியில் மத்தேயு மற்றைய நற்செய்தியாளர்களை ஒத்திருக்கிறார்மத்தேயுவின்இயேசு 
இந்த இடத்தில் தான் மெசியா என்பதை வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கிறார்மத்தேயுநற்செய்தியின் முக்கியமான நோக்கமும்இயேசுவை மெசியாவாக காட்டுவதாகும்இந்த வரி சிலமுக்கியமான படிவங்களில் சற்று மாறுதலோடு காணப்படுகிறது (ὁ Χριστὸς Ἰησοῦς ஹொகிறிஸ்டொஸ் இயேசூஸ்- அவர் இயேசு மெசிய). 
இயேசு இதனை இரகசியம் என்று சொல்லி அதனை எவரிடமும் (μηδενὶ மேதெனி), சொல்வேண்டாம் என கட்டளையிடுகிறார்நற்செய்தியின் நோக்கமேஇயேசு மெசியா எனஅறிக்கையிடுவதாகும்அப்படியிருக்க யாரிடமும் சொல்ல வேண்டாம் என இயேசு சொல்வதுவித்தியாசமாக இருக்கிறதுஒருவேளைஒவ்வொருவரும் ஆண்டவரை தனித்தனியாக மெசியாஎன கண்டுபிடிக்கட்டும் என இயேசு விரும்பியிருக்கலாம்

இயேசு யார் என்பது ஒரு தேடல்
சிறு வயதில் நம்பெற்றோர் இதற்கு விடையை சொல்லித்தருகிறார்கள்
பெரியவரானதும்தான் தெரிகிறது
அவர்களும் இதன் விடையை இன்னும் தேடுகிறார்கள் என்று
இயேசு என்னும் தேடல் தியாகங்களை எதிர்பார்க்கிறது
இந்த தேடலின் விடை அவ்வளவு எளிதிலும் 
கிடைக்காது
ஆனாலும் அது சாத்தியமானது

அன்பு ஆண்டவரே
உம்முடைய உண்மையான முகத்தைக் காண
வரம் தாரும்ஆமென்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தவக்காலம் மூன்றாம் வாரம் (இ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025

  தவக்காலம் மூன்றாம் வாரம் ( இ ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025 முதல் வாசகம் : விடுதலைப் பயணம் 3,1-8.13-15...